Ad Widget

வில்லிசைக் சக்கரவர்த்தி சின்னமணி காலமானார்

ஈழத்தின் தலைசிறந்த வில்லிசைக் கலைஞர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை (சின்னமணி) நேற்று புதன்கிழமை காலை தனது 79ஆவது வயதில் காலமானார். நூற்றுக் கணக்கான வரலாறுகளை அழகுற வில்லிசையாக்கி ஆயிரக்கணக்கான மேடைகள் கண்ட கலைஞரான அவர் பல வெளிநாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்சிகளை நடத்தியவர். வில்லிசைப் புலவர், கலாவினோதன், முத்தமிழ் மாமணி, வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி, வில்லிசைத்...

 ‘பிள்ளையார் கோவிலை அழித்து விட்டு தென்னை மரங்களை பாதுகாக்கின்றனர்’

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்துவிட்டு கோயிலுக்கு அருகில் இருந்த தென்னை மரங்களை இராணுவத்தினர் பாதுகாக்கின்றனர் என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். தைப்பூச தினத்தை முன்னிட்டு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (03) மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வழிபாட்டுக்காக...
Ad Widget

 ‘கோயில்கள் இடிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன’

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்த எங்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருந்த வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன என மயிலிட்டி மக்கள் பிரதிநிதி ஒருவர் கவலை தெரிவித்தார். யாழ். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை(04) இடம்பெற்றபோது, அவர்...

அகதி வாழ்க்கையில் எப்போதும் எங்களுடன் இருப்பது கல்வியே

எமது மக்களின் கல்வியே கால் நூற்றாண்டு அகதி வாழ்வுக்கு பின்பும் உரிமையுடன் கூடிய வாழ்வுக்காக எமது மக்களிடம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள சிறார்களுக்கு வடமாகாண சபையின் கல்வி அமைச்சினால் பாடசாலை உபகரணங்கள் மற்றும் சப்பாத்துகள் வழங்கும் நிகழ்வு மல்லாகம் கோணப்புலம் நலன்புரி...

 பொதுத் தேர்தலை புறக்கணிப்போம் – வலி.வடக்கு மக்கள்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுத் தேர்தலை புறக்கணிப்பதோடு தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கூறினார்கள். யாழ்.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல் நாவலர்...

மீள்குடியேற்றம் தொடர்பில் தீர்வு காணவேண்டும் – சுரேஸ்

'தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு தீர்வு காணவேண்டும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் மக்கள் இன்னமும் முகாம்களில் தமது வாழ்வை தொடரவேண்டிய நிலை இருக்கக்கூடாது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல்...

கல்லுடைக்கும் ஆலைக்கு அனுமதி வழங்கவேண்டாம் மகஜர் கையளிப்பு

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள கல்லுடைக்கும் ஆலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கோரிக்கை முன்வைத்து அந்தப்பிரதேச பொதுமக்கள் மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனிடம் மகஜரொன்றை புதன்கிழமை (04) கையளித்தனர். அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டமைக்கமைய சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் தீங்கை ஏற்படுத்தி வந்த புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில்...

பாலத்துக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி

யாழ்.வல்வை பாலத்தடி பகுதியில் டிமோ ரக வாகனம் மோதி, முச்சக்கரவண்டி தூக்கி வீசப்பட்டத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (04) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மந்திகை பகுதியை சேர்ந்த துரைராஜா சாரங்கன் (வயது 25) என்பவரே படுகாயமடைந்தார். நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்னால், வந்த டிமோ வாகனம்...

யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்திற்கான தேசிய நிகழ்வு நேற்று (04) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதேவேளை 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து 3...

67ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நிரலில் தவறு

நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திபால சிறிசேனவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. செழுமையான தாய்நாடு! வளமான எதிர்காலம் எனும்தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த வைபவத்துக்கான நிகழ்ச்சி நிரலை உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு தயாரித்திருந்தது. அத்துடன் கையேட்டையும் அச்சடித்திருந்தது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அச்சடிக்கப்பட்ட...

சம்பந்தன் மீது நடவடிக்கை வேண்டும்: தமிழரசுக்கட்சி

67ஆவது சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும்...

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சந்திரிக்கா

அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சட்டரீதியாக பெற்றுக்கொண்ட சமாதானத்தை உண்மையான சமாதானமாக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இனி ஒருபோதும் அச்சம், சந்தேகத்துடன் வாழத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்....

தமிழர்களின் உணர்வுகளைப் புதிய அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாட வேண்டிவரும் – பொ.ஐங்கரநேசன்

தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் பழையவற்றை எரித்துக்கழிக்கும் போகிப்பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதேபோன்றுதான் நாமும், பொங்கலுக்கு முதல் வந்த தேர்தலில் பழைய ஜனாதிபதியை எமது வாக்குகளால் எரித்துப் பொசுக்கி அதிகாரத்தில் இருந்து களைந்திருக்கிறோம். புதிய அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாடவேண்டிவரும். என்று...

தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர் விளக்கம்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக...

முதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம்

கரணவாய் தெற்கு முதலைக்குழி கிராமத்துக்கான நன்னீர் விநியோகத்திட்டத்தை வடமாகாண நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (03.02.2015) ஆரம்பித்துவைத்துள்ளார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழியில் கிணற்று நீர் உவர்ப்புத்தன்மையுள்ளதாக இருப்பதால் இங்கு வாழும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.வடமாகாணநீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறைகளுக்குப்...

வடக்கு – தெற்கு மக்களிடையே சுமுகநிலை விரைவில் உருவாக்கப்படவேண்டும்! – ஜனாதிபதி

தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேணடும். போர் முடிவுக்கு கொணடுவரப்பட்டாலும் வடக்கு, தெற்கு சமூகங்களிடையே சுமுக நிலை உருவாக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கின்றன. -இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு சுதந்திர...

72 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சுதந்திர தினத்தில் தமிழ் தலைவர்!

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை. இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். இலங்கையின் 67...

காணாமற்போனோரின் கண்ணீரே மஹிந்தவின் ஆட்சியை கலைத்தது

கண்ணகி சிலம்பை வைத்து மதுரையை எரித்தது போல, காணாமற்போனோர் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சிந்திய கண்ணீரே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இல்லாமல் ஆக்கியதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொது நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற புதிர் எடுத்து பொங்கல் நடத்தும் விழாவில்...

பொருளாதார, மத ரீதியிலான மாற்றங்கள் ஏற்படும்

எதிர்வருங் காலங்களில் நடைபெறும் சுதந்திர தினத்தில் பொருளாதார மற்றும் மத ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இலங்கையில் 67 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு...

வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர். இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பொதுமக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்,...
Loading posts...

All posts loaded

No more posts