Ad Widget

விஜய்யின் நடனத்தை கண்டு அசந்து போன நடிகை

தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதில் ‘விஜய்யின் நடனத்தை...

வைத்தியசாலை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டக்கூடாது; சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவிப்பு

கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கமிவுகள் கொட்டப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களது போராட்டம் முக்கிய தீர்மானங்களை அடுத்து இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் கல்லுண்டாயில் கடந்த காலங்களில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களும்...
Ad Widget

பனை அபிவிருத்தி சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளர், கடமை பொறுப்பேற்பு

பனை அபிவிருத்திச் சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக சே.விஜிந்தன், புதன்கிழமை (18) யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்ட இவர் வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 ஃப்ரண்ட்லைன் இதழுக்கு பிரதமர் அனுமதி

ஃப்ரண்ட்லைன் இதழை வெளியிடுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுங்கப்பிரிவினருக்கு பணித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் செவ்வியை மீளவும் பிரசுரித்தமைக்காக இந்த ஃப்ரண்ட்லைன் இதழை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுங்கப்பிரிவினர் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுஎல்-166 என்ற பயணிகள் விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பையேற்று...

புதிய இராணுவத்தளபதி தொடர்பில் முடிவில்லை: பாதுகாப்பு அமைச்சு

புதிய இராணுத்தளபதி நியமிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அவ்வாறான உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் -முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப் என்பவருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி...

வட மாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி காலமானார்

வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இவர் நீண்டகாலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக இவர் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார், கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...

மீண்டும் ஆபத்தான கடல் பயணம்: 35 தமிழர்கள் மாத்தறையில் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் 35 பேர் மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வெலிகம பொலிஸின் கடற்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல இருந்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்கள் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாங்குளம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முல்லைத்தீவு,...

பகிடிவதையால் மாணவி தற்கொலை: சக மாணவர்களுக்கு சடலத்தை காட்ட வேண்டாம் என கடிதம்!

பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது....

யாழில் இருவேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்பு

கொடிகாமம் மிருசுவில் பகுதியிலுள்ள சென்.நீக்கிலஸ் தேவாலய சேமக்காலையிலிருந்து செவ்வாய்க்கிழமை (17) ஜி – 400 ரக கைக்குண்டுகள் 18 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இறந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதற்காக குழியொன்றை தோண்டியபோது, அந்தக் குழிக்குள் இருந்து இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று குண்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கோயிலுக்கு சென்றவரை காணவில்லை

கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த இராசன் தயாளன் (வயது 41) என்ற குடும்பஸ்தரை செவ்வாய்க்கிழமை (17) முதல் காணவில்லை என அவரது மனைவி, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (18) முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சிவராத்திரி தினத்துக்காக பொலிகண்டியிலுள்ள ஆலயத்துக்கு சென்று வருவதாகச் துவிச்சக்கரவண்டியில் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில்...

உடனடி தீர்வு இல்லையேல் உண்ணாவிரதத்தில் குதிப்போம் : சுகாதார தொண்டர்கள்

யாழ்.சமூக சுகாதார பணியாளர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முதல் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்னால் முன்னெடுத்தனர். 1998 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய பின்னர் 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமூக சுகாதார பணியாளர்களாக 232...

விபத்தில் இருவர் படுகாயம்

மீசாலை ஐயா கடையடிச் சந்தியில் புதன்கிழமை (18) காலையில் சிறிய ரக உழவு இயந்திரமும் வான் ஒன்றும் மோதியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் விநாயகமூர்த்தி (வயது 34), வரதராசன் சாந்தகுமார் (வயது 40) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார...

சமுர்த்தி ஊழியர்களின் சேமலாபநிதி மீள வழங்கப்படும்

சமுர்த்தி மற்றும் வாழ்வின் எழுச்சி, துறைகளில் பணிபுரியும் 8368 அதிகாரிகளுக்கு கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 28ம் திகதி அவர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்குச் சேரவேண்டிய பணம் 70,000 இலட்சம் ரூபாவை மீள அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க...

ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தேவையில்லை – சிவஞானம்

உள்ளூராட்சி மன்றங்களை பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியொன்று இருக்கவில்லை. அவ்வாறு இருப்பது உள்ளூராட்சி தத்துவதற்கு மாறானது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை மட்டும் அழைப்பது பொருத்தமானது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடத்துவது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு, கடந்த 10 ஆம்...

மு.கா., தமிழரசு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி கே.துரைராஜசிங்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் ஹசன் அலியும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா...

இருநாட்டு ஒப்பந்தம்- இலங்கை மீனவர்கள் வரவேற்பு

இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு அரச தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவை இலங்கையின் வடபகுதி மீனவர்கள் வரவேற்றிருக்கின்றார்கள். இதுபற்றி கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் அல்பட் ஜஸ்டின் சொய்சா, இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்துவதை இரு நாட்டு அரசாங்கங்களும்...

நலன்புரி முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலி

யாழ்.சுன்னாகம், கந்தரோடை விக்கிராலை நலன்புரி முகாமிலுள்ள வீடொன்றின் சுவர் செவ்வாய்க்கிழமை (17) மதியம் இடிந்து விழுந்ததில் ரமேஸ் பிரியங்கா என்ற இரண்டு வயதான குழந்தையொன்று இறந்துள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது., மேலதிக விசாரணைகளை...

பொதுமக்கள் எதிர்பை அடுத்து கழிவகற்றல் செயற்பாட்டையே நிறுத்தியது யாழ்.மாநகர சபை!

யாழ்.மாநகரசபையால் அகற்றப்படும் கழிவுகளை கல்லுட்டாய் வெளியில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மாநகர எல்லைக்குள் கழிவகற்றல் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்தவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்.மாநகரசபை தனது எல்லைக்குள் சேகரிக்கும் திண்மக் கழிவுகளை இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை...
Loading posts...

All posts loaded

No more posts