Ad Widget

இறுதி ஊர்வலத்தில் சென்ற மேளத்தைக்கேட்டு போதையிலிருந்தவர்கள் சண்டை

போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பிரேதத்துடன் சென்ற மேளத்தை தமக்காக அடிக்குமாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மரண வீட்டுக்கு சென்று தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குழுவைச்சேர்ந்த இளைஞனை வாளுடன் பிடித்து மக்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம், யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலேயே...

முல்லையில் 2500 பேருக்கு அடையாள அட்டை இல்லை – கபே

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர் அட்டை உள்ளவர்களில் 2500 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டையில்லை என கபே அமைப்பு சுட்டுக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு, கரைத்துறைபற்று இரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது. எனினும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 2500 பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு...
Ad Widget

தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு

தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்...

100 கிலோ கஞ்சாவுடன் இளவாலை பொலிஸாரால் நால்வர் கைது

100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து படகு மூலம் மாதகல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கைமாற்றும் வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நால்வருடன் 100 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டி ஒன்றும் படி ரக வாகனம்...

எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்

ஐ.நா சபையில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டம் தொடர்பில் பொது அமமைப்புகளுக்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர்...

படகுமூலம் சென்ற நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பியது ஆஸி

சட்டவிரோதமாக படகுமூலம் ஆஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்னளர். கடந்த 9ஆம் திகதி கோகஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவர்கள் அடுத்த நாள் திருப்பிஅனுப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் இணைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து அனுப்படும் பரிசுகளை வீடுகளுக்கே சென்று கையளிக்க ஏற்பாடு

சாதாரண மக்களின் நலனை கருத்திற்கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் பரிசுப்பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் புதிய முறையை சுங்கத்திணைக்களம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன தெரிவித்தார். கொழும்பிலுள்ள சுங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இம்முறையை...

மார்ச் மாதமே அறிக்கையை வெளியிடவும்; வடக்கு முதல்வர்

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு...

மர்மபொருள் வெடித்து பெண்காயம்

கரவெட்டி பகுதியில் மர்மபொருள் வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த தியாகராஜா கோமளா (வயது 36) என்ற பெண் காயமடைந்து செவ்வாய்க்கிழமை (17) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (18) தெரிவித்தனர். குறித்த பெண் வயலில் வேலை செய்து விட்டு ஓய்வெடுப்பதற்காக அருகிலிருந்த பற்றைப்பகுதியில் அமர்ந்த போதே, குறித்த மர்மப் பொருள் வெடித்துள்ளது. இது...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்!

வேகமாக விரைந்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி தூணுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் அபாயகட்டத்தில் இருக்கிறார். நேற்று புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் இளவாலை விளானுக்கு அண்மையாக இடம்பெற்றது. இந்த விபத்தில் மாவை கலட்டியைச் சேர்ந்த இ.மிகுந்தன் (வயது 26), பருத்தித்துறையைச் சேரந்த கெ.பிரசாந் (வயது 24) ஆகியோரே படுகாயமடைந்தனர். இருவரும் தெல்லிப்பழை...

விஜய்யின் நடனத்தை கண்டு அசந்து போன நடிகை

தென்னிந்திய சினிமாவில் விஜய்யின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த வகையில் இவர் நடித்து வரும் புலி படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இப்பாடலில் ஜில்லா, வீரம் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த வித்யுராமனும் இடம்பெறுகிறார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் ருசிகர தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இதில் ‘விஜய்யின் நடனத்தை...

வைத்தியசாலை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டக்கூடாது; சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவிப்பு

கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கமிவுகள் கொட்டப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களது போராட்டம் முக்கிய தீர்மானங்களை அடுத்து இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் கல்லுண்டாயில் கடந்த காலங்களில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களும்...

பனை அபிவிருத்தி சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளர், கடமை பொறுப்பேற்பு

பனை அபிவிருத்திச் சபையின் புதிய நிறைவேற்று பணிப்பாளராக சே.விஜிந்தன், புதன்கிழமை (18) யாழ்ப்பாண அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமிக்கப்பட்ட இவர் வடமாகாண ஆளுநரின் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 ஃப்ரண்ட்லைன் இதழுக்கு பிரதமர் அனுமதி

ஃப்ரண்ட்லைன் இதழை வெளியிடுவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுங்கப்பிரிவினருக்கு பணித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் செவ்வியை மீளவும் பிரசுரித்தமைக்காக இந்த ஃப்ரண்ட்லைன் இதழை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சுங்கப்பிரிவினர் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுக்கான விஜயம் இதுவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுஎல்-166 என்ற பயணிகள் விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பையேற்று...

புதிய இராணுவத்தளபதி தொடர்பில் முடிவில்லை: பாதுகாப்பு அமைச்சு

புதிய இராணுத்தளபதி நியமிக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அவ்வாறான உத்தியோகபூர்வ தீர்மானம் எதுவும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயவீர கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் மாற்றம் அமைப்பின் நிகழ்ச்சியில் வடமாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் -முதலமைச்சர்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களும் மாகாண அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவூப் என்பவருக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி...

வட மாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி காலமானார்

வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இவர் நீண்டகாலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக இவர் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார், கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம்...

மீண்டும் ஆபத்தான கடல் பயணம்: 35 தமிழர்கள் மாத்தறையில் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் 35 பேர் மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வெலிகம பொலிஸின் கடற்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல இருந்தார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. சந்தேகநபர்கள் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாங்குளம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, முல்லைத்தீவு,...

பகிடிவதையால் மாணவி தற்கொலை: சக மாணவர்களுக்கு சடலத்தை காட்ட வேண்டாம் என கடிதம்!

பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts