Ad Widget

புதிய கட்சி தொடங்குகிறார் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச!

ஜே.வி.பி. மீது அதிருப்தி கொண்டுள்ள தாம் தன்னைப் போன்ற அதிருப்தியாளர்களை இணைத்துப் புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ஊடகவிலாளர்களை சந்தித்த சோமவன்ச தாம் கட்சியிலிருந்து விலகுகிறார் எனத் தெரிவித்த போதே புதிய கட்சி குறித்தும் கருத்து வெளியிட்டார். ஜே.வி.பியின் தற்போதைய கொள்கைகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை...

சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவை நிறுத்துங்கள்! இல்லையேல் புதிய கட்சி!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் 60இற்கு மேற்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்று தங்காலையில் கார்ல்டன் வீட்டில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, சாலிந்த திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ஸ, டீ.பி.ஏக்கநாயக்க, ஜி.எல்.பீரிஸ், மஹிந்தானந்த அலுத்கமகே, காமினி...
Ad Widget

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை சுரேஷ் பிரேமசந்திரன் நேரில் சென்று பார்வை!

வலி. வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். கடந்த 25 வருடகாலமாக 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அதில் கடந்த 11 ஆம் திகதி 590 ஏக்கர்...

கைதடி பகுதியை சேர்ந்த இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் பலி!

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா். இச் சம்பவம் நேற்று(16) வியாழக்கிழமை முற்பகல் இடம் பெற்றுள்ளது. மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் நண்பா் வீட்டிற்கு வந்த வேளையில் தனது நண்பரோடு நீராடச் சென்றுள்ளார். அதன் பின் தனது நண்பன் நீராடி கொண்டிருக்கும் வேளையில் தீடிரென காணாமல்...

குடும்பம் ஒன்றிடம் அதிகாரம் செல்லாத வகையில் அரசியலமைப்பில் திருத்தம்

எதிர்காலத்தில் ஒருபோதும் குடும்பம் ஒன்றிடம் அதிகாரம் செல்லாத வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். டயிம்ஸ் பத்திரிகையாளர்களுடன் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் எந்தவொரு நாட்டுடனும் இலங்கைக்கு பகை இல்லை எனவும் அனைத்து நாடுகளுக்கும் நட்புக் கரம் நீட்டுவதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன்...

ஊடகவியலாளர்கள் குழப்பக்காரர்களா? அனுமதி மறுத்தமை தவறு! – டக்ளஸ்

யாழ். குடாநாட்டு நிலத்தடி நீர் மாசடைவு தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவறான ஓர் அணுகுமுறையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்துத்...

நவுறுவிலுள்ள இலங்கை அகதிகள் கம்போடியாவில் குடியேற்றப்படுவர்

அவுஸ்திரேலியாவினால் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையர் உட்பட பல்நாட்டு அகதிகள் நவுறு தீவிலிருந்து கம்போடியாவில் குடியமர்த்துவதற்காக அங்கு அனுப்பப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் கூறியது. கம்போடிய தலைநகரான 'நொம்பென்' இல் குடியேற்றப்படுவதற்காக முதல் தொகுதி அகதிகள் விசேட விமானத்தின் மூலமாக திங்கட்கிழமை அழைத்து செல்லப்படவுள்ளனர். இதற்கான கம்போடியாவும் அவுஸ்திரேலியாவும் இருபக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளவர்களில்...

வலி.வடக்கில் பிரதேச செயலரை தாக்க முயன்ற 20பேர் கைது

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து பெறுமதியான பொருட்களை சூறையாட முயன்ற சந்தேகநபர்களைத் தடுக்க முற்பட்ட தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சிறிமோகன் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் 20பேரை நேற்று புதன்கிழமை (15), காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள...

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயம்

காங்கேசன்துறை வீதி, தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்துக்கு அருகில் புதன்கிழமை (15) இரவு முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் மதுபோதையில் இருந்ததுடன், ஓட்டுநர் போதையில் நிலைதடுமாறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று தெல்லிப்பளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....

நிலையான வைப்பக்கள் மற்றும் கடன் வட்டி அலகுகள் குறைப்பு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை

வங்கி வட்டி வீதங்களைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியுறச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின்போது தாக்கம் செலுத்தும் நிலையான வைப்புகள் மற்றும் கடன் வட்டி அலகுகள் 50 வீதமாகக் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான தனது...

பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியின் வாகனம் விபத்து

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது வாகனம் மாரவில - கோடவேல சந்தியில் வைத்து வேன் ஒன்றுடன் மோதியதில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாரவில் பொலிஸின் மோட்டார் வாகனப் பிரிவினர்...

மாலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை?

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (16) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கேசன்துறை பொத்துவில் ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில்...

படையினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு சட்ட விலக்களிப்பு நீடிக்கிறது – ஐ.நா. செயலாளர்

இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. - இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். முரண்பாடுகள் தொடர்பான பாலியல்...

இ.போ.ச. பஸ் – பிக்கப் விபத்தில் இருவர் பலி! இருவர் படுகாயம்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26),...

நடைபாதை வர்த்தகத்தை தடைசெய்யாவிடில் விரைவில் பூரண கடையடைப்பு ஏற்படலாம்

நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் ,மற்றும் தொழில் ஆணையாளர் கனகேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் நாம் முக்கியமாக நடைபாதை...

தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க விடோம்! பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் சம அந்தஸ்து அவசியம்!!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். கொழும்பில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு...

வலி.வடக்கில் எஞ்சியவற்றை களவாடும் திருட்டுக் ‘கோஷ்டி’!

வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில்...

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில்

புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து...

அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் : இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ்

இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இந்திய அரசால்...

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்....
Loading posts...

All posts loaded

No more posts