- Friday
- April 19th, 2024
வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி...
இல்லாதவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்க வேண்டாம். - இவ்வாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கில் போதைப் பொருள் பாவனை, அதனூடான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று...
நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன...
வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு...
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து...
இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து...
இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில் விடுதலைப் புலிகளை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கூறிய கனிமொழி, அதனை மறுப்பார் என எனக்கு முன்னரே தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவிருந்த சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் மற்றும் மேலும் 4 பேர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்களை மீட்பதற்கான ஆட்கொணர்வு...
வடபகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையினை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய கட்டுப்பாட்டு சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்பட்டன. குறித்த விடயங்களை நேரடியாக ஆராயும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு...
எழுதுமட்டுவாள் பகுதியிலும் தலையும் முகமாலைப் பகுதியில் முண்டமுமாக சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு எழுதுமட்டுவாள் ரயில் நிலையப் பகுதிக்கு அருகில் தலையும் முகமாலைப் பகுதியில் அதன் முண்டமும் காணப்பட்டதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சடலத்தை மீட்ட பளை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். தலை காணப்பட்ட...
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது. நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்றுவரைக்கும் இடம்பெறும். மேற்படி கூட்டத்தில் சர்வதேச தரப்புச் சார்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹீம்...
சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு அண்மையாக சடலம் ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இளம் குடும்பஷ்தரான தவக்குமார் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த இவர் வேலியோரமாக வீழ்ந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார். இவரது மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை அறியப்படவில்லை. இவரின் முகத்தில் உரசல் காயங்கள்...
குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் சாயலை ஒத்த ஆணுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரையும் அவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோப் பதிவு செய்து, அதனை அவர்களிடம் காண்பித்து கப்பம் கோரி மிரட்டிய பிறிதொரு இளைஞரையும் யாழ். நீதவான் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். குருநகர் பகுதியைச் சேர்ந்த...
உயர் பாதுகாப்பு வலயமாக சுவீகரிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளில் மக்களை மீளக்குடியர்த்தி, அவர்களின் மத வழிபாடுகளை தொடர்ந்து நடத்துவதற்கு இப்புதிய அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் ஆலய விசாக மடை திருவிழாவுக்கு, 25 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது...
நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது கண்நோய் பரவி வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் http://www.e-jaffna.com/wp-admin/tools.phpஇருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்நோய் காரணமாக நாளொன்றுக்கு, அதிகளவான நோயாளிகள் வைத்தியசாலைகளை நோக்கி வருகின்றனர். வைரஸ் அல்லது பற்றீரியா தாக்கத்தினால் ஏற்படும் இந்த கண் நோயானது, 3 அல்லது 4 நாட்களுக்கு நீடிக்கும் என வைத்திய பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை....
யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தையல் இயந்திரம் வழங்கும் நீண்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பருத்தித்துறை கந்தமுருகேசனார் சனசமூக நிலையம் மற்றும் ஓடக்கரை சனசமூக நிலையத்தில் 11 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ் றோட்டரி கழகத்தின் தற்போதைய பொருளாலர் நிமல்சன் மற்றும் புதிய தலைமுறை இயக்குநர் ஜெபநேசன் ஆகியோர்...
இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகழிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும்,...
கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன. இன்று சனிக்கிழமை காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்ட வரியானது குறைவடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியானது 55 சதவீதத்தில் இருந்து 20 வீதமாகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியானது 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம்...
Loading posts...
All posts loaded
No more posts