Ad Widget

புலம்­பெயர் இலங்­கையர் நாட்­டுக்கு வர­வேண்டும்

வெளிநா­டு­களில் புலம்­பெ­யர்ந்­துள்ள இலங்­கை­யர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற பேதம் பாராமல் அனை­வரும் புலம்­பெ­யர்ந்த இலங்­கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். முன்­னைய ஆட்­சியின் போது திட்­ட­மிட்ட சில­ருக்கே பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. எனினும் தற்­போது...

ஆட்சியில் இருக்கும்போது அட்டகாசம் செய்யக்கூடாது – முதலமைச்சர் சி.வி.

ஆட்சியில் இருக்கும்போது மக்களை மறந்து, நாட்டின் சுபீட்சத்தை மறந்து, பதவி இறுமாப்பில் மற்றவர்கள் மீது பாரிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பணத்தைத் தேடுகின்ற விடயத்தில் மட்டும் குறிக்கோளாக இருப்போமாயின் ஏற்படக்கூடிய நிலைமை என்ன என்பதுக்கு கடந்த அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்தமை சிறந்த எடுத்துக்காட்டு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில்...
Ad Widget

நாமல் எம்.பி. குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விஜயம்

வாக்குமூலம் அளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்

கரையொதுங்கிய மனித உருவம்

தலைமன்னார், ஸ்ரேசன் பழைய பாலத்தடி கடற்கரையில் மரத்தில் செதுக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த மனித உருவம் கொண்ட சிலை கரையொதுங்கிய நிலையில் நேற்று வியாழக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (10) மாலை மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமன்னார் ஸ்ரேசன் கிராம அலுவலகர்,குறித்த இடத்துக்குச் சென்று சிலையை மக்களின் ஒத்துழைப்புடன் மீட்டு தனது அலுவலகத்துக்குக் கொண்டு...

வடக்கில் ஐவருக்கு ஒரு இராணுவமா?; பொய் என்கிறார் பிரிகேடியர்

வடக்கில் ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதை தான் மறுப்பதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் வழங்கப்படும். வடக்கில் இருக்கின்ற இராணுவத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொர்பில் தன்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை...

விசேட அமைச்சரவைக்கு 18 சிறுபான்மை கட்சிகள் யோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது, 18 சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கின்றது. இந்த கூட்டத்தின் போதே தங்களுடைய யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக 18 சிறுப்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்செட்ச் ஹோட்டலில்,...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மூன்று உணவகங்களை மூட உத்தரவு!

மருதனார்மடத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்களை தற்காலிமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பிரதேச சபைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனையில் பெரும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய 3 உணவகங்கள் சிக்கின. இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இந்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம்...

முன்னாள் போராளிகள் 5,754 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 5,754 பேருக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதிகட்ட யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்களுக்கே இந்த சுயதொழில ஊக்குவிப்பு கடன் வழங்கப்படவுள்ளது. குறித்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கடன் வழங்க 2012ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதன் கீழ் கடந்த...

தேசிய மலரின் பெயர் மாற்றம்..!

பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை “நீலோத்பலம்” என பெயர் மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே இது...

யாழ், நீதிமன்ற தாக்குதல் மேலும் இருவர் விளக்கமறியலில்

யாழ். நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்யப்பட்ட இருவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பெறப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவ்விரு சந்தேகநபர்களையும் கைது செய்திருந்தனர். இவர்கள் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, நாளைவரை விளக்கமறியலில்...

வவுனியாவில் வர்த்தகரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற கும்பல்!

வவுனியா பிரதேச வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் கோரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 9ம் திகதி காலை முன்பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 5 வயது ஆண் பிள்ளை இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பிள்ளையை விடுவிக்க கடத்தல்காரர்கள் 30 லட்சம் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

யாழில் சக்தி வாரம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் மின்சக்தி அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சக்தி வாரம் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. "நாளைய சமூகத்திற்காக இன்றே நாம் சக்தியை சேமிப்போம்" எனும் தொனிப் பொருளில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இன்று (11) காலை சக்திவார அனுஷ்டிப்புக்கள் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. பாடாசலையின் சக்தி...

சிறுவர் கழகங்களுக்கிடையிலான நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் யாழ் மாவட்டம் முதலிடம்

கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் தேசிய நன்னடத்தை திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலமாக நடாத்தப்பட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தின் சிறுவர் கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இலக்கம் 176, பனிப்புலம், திருநாவுக்கரசு சிறுவர் கழகம்...

புங்குடுதீவு விவகாரம்; பொலிஸ் உயரதிகாரியிடம் விசாரணை

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குடன் தொடர்புடையவர் என மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் நாட்டு வதிவிடப் பிரஜை தொடர்பில், வடபகுதியிலுள்ள பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட 9ஆவது சந்தேகநபரான மேற்படி சுவிஸ் வதிவிடப் பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

வேள்விக்கான ஆடுகளுக்கு உரிமச் சான்றிதழ் வேண்டும்

தெல்லிப்பளை, துர்க்காபுரம், 8ஆம் கட்டை பேரம்பலம் வைரவர் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (13) நடைபெறவுள்ள கேள்வியின் போது வெட்டப்படும் ஆடுகளுக்கு கிராமஅலுவலரிடம் உரிமைச் சான்றிழ்களை பெற்றுவருமாறு ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலையில் நடைபெறவுள்ளது. அதிகாலை நடைபெறும் படையல்களைத் தொடர்ந்து ஆடுகள், சேவல்கள் பலியிடும் நிகழ்வு...

பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவும் ஏனைய கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிக்குமாறும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஸ் உரிமையாளர்களின் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் இரகசியமாக அறிவியுங்கள் : பொலிஸார் வேண்டுகோள்

சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீண்டகாலத்தின் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணைக்குட்படுத்தப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். குறிப்பாக சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை அடையாளம்...

இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போல் வேடமிட்ட மூவர் கைது

தங்களை இராணுவ புலனாய்வாளர்கள் எனக்கூறி சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மிரட்டிய மூவரை நேற்று செவ்வாய்க்கிழமை (09) இரவு கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைதடி வீதியில் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை சிவில் உடையில் வீதியில் நின்ற சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோதனை செய்து செய்ய முயன்ற போது,...

மகனைத் அடித்த தாய் கைது

இளவாலை பனிப்புலம் பகுதியில் தனது 13 வயது மகனை அடித்துக் கண்டித்த குற்றச்சாட்டில் தாய் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். மகன் படிப்பில் அக்கறை காட்டாமல் இருந்ததைக் கண்டித்து தாய் மகனை அடித்துள்ளார். இதனால் வீட்டை விட்டுச்சென்ற மகன், உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு காலையில் எழுந்து முதல்நாள் இருந்தபடியே பாடசாலைக்குச்...

கொடுத்த மொய்ப்பணத்தை திரும்ப தருமாறு கோரி முரண்பாட்டில் ஈடுபட்ட பெண்

அயல் வீட்டு புதுமனைப்புகு விழாவுக்கு வழங்கிய 1,000 ரூபாய் மொய்ப்பணத்தை திரும்பத் தருமாறு கோரி அயல் வீட்டுப் பெண்ணை தாக்கிய, மற்றொரு பெண் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (09) பொலிஸ் நிலைத்தில முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பத்தமேனி பாரதி வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் அயல் வீட்டில்...
Loading posts...

All posts loaded

No more posts