Ad Widget

NGOகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டில் தளர்வு

மக்களுக்காக நிவாரணங்களை வழங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை உடனடியாக செயற்படுத்தும் வகையில் கொள்கை செயல்படுத்தல்...

இணைந்து செயலாற்றுதல் நல்லிணக்கத்தின் அத்திபாரமாகும்

அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திபாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது என்றும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரசைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசிய காரணியாகும் என்றார். கொழும்பு-03, கொள்ளுப்பிட்டி...
Ad Widget

அமைச்சரவை தீர்மானத்துக்கு கபே வரவேற்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கையை வெள்ளிக்கிழமை(12) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கவும் அதில் 145 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்குப் பெறும் முன்னணி முறையிலும் 55 பேரை விகிதாசார முறையிலும் 37 பேரை தேசிய பட்டியலூடாகவும் தெரிவு செய்யவும்...

இலங்கையின் நல்லிணக்கத்துக்குப் புலம்பெயர் தமிழரின் ஒத்துழைப்பைப் பெறவே லண்டனில் பேச்சு!

"புலிகள் மீதான தடையை நீக்குதல், அரசியல் தீர்வு, உள்ளகப் பொறிமுறை முதலான விடயங்கள் குறித்து லண்டனில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தவில்லை'' - என்று நேற்று சபையில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்தே பேசப்பட்டது என்றும் தெரிவித்தார். மஹிந்த அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க...

துணுக்காய் பிரதேசத்துக்கு சுற்றுலா நீதிமன்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை நீதிச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றுலா நீதிமன்றத்தினூடாக மாங்குளம் மற்றும் மல்லாவி ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கான வழக்குகள் மாதத்தில்...

இலங்கையில் வடக்கு மாகாணத்திலேயே காடுகள் அதிகம் இதில் விடுதலைப்புலிகளின் பங்களிப்பு பெரியது -அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பெருமிதம்

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் வடமாகாணத்திலேயே காடுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கில் காடுகளைப் பாதுகாப்பதில் விடுதலைப்புலிகளின் பங்களிப்புப் பெரிதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வலிமேற்கு பிரதேசசபையும் உலக தரிசனம் நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11.06.2015) ஏற்பாடு செய்திருந்தன. வலிமேற்கு பிரதேச சபையின் மாநாட்டு...

திரைமறைவு கூட்டங்களுக்கு விளக்கமளிக்கிறார் சுமந்திரன்

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் சந்திப்புக்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களும் பொய்யான பிரச்சாரம் செய்துவரும் நிலையில் நாங்கள் திரைமறைவான சந்திப்புக்களை செய்து வருகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு,...

மோ.சைக்கிளின் முன்புறம் பிள்ளைகளை இருத்தி பயணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களின் பெற்றோல் தாங்கியின்மேல் பிள்ளைகளை இருத்திக் கொண்டு பயணிப்பவர்கள் மீது பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.கே.ஜெயவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் - எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து...

நீதிமன்ற தாக்குதல்; 14பேருக்கு பிணை

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 14 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணையில் செல்ல, யாழ் நீதவான் பொ.சிவகுமார் இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டார். அத்துடன், மாணவர் ஒருவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளில்...

நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்திய அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். அங்குனகொலபெலஸில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலர் ஆயுதத்துடன் வந்த சம்பவம்...

237 ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது...

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு திடீர் சோதனை! தகுதியற்றவைக்கு இடைக்காலத் தடை!!

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள், பஸ்கள், ஓட்டோக்கள் இன்று திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அரச செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவும் பொலிஸாரும் இணைந்து இன்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது நூற்றுக்கணக்காக வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது வீதிப் போக்குவரத்தில் ஈடுபடத் தேவையான ஆவணங்கள், வாகனங்களுக்கான தகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. இவ்வாறு போக்குவரத்துக்கு தகுதியற்ற வாகனங்கள், தொடர்ச்சியாகச் சேவையில்...

பாடசாலை சமூகத்தால் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த முடியும் – எம்.சிறிதரன்

அதிபர்கள், ஆசிரியர்களை பொறுத்தவரை அன்றாடம் மாணவர்களின் நடத்தைகளை அவர்களின் ஊடாக பெற்றார்கள், குடும்ப நிலைமைகளை அறிகின்ற வாய்ப்பு அதிகம். மாணவர்களை அவர்களின் நிலைகளை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துகின்ற திட்டங்கள் செயற்பாடுகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகரித்து வரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த பாடசாலை சமூகத்தால் முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்....

மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக அந்தோனியர் சிலை

நெல்லியடி நகர்ப்பகுதியில் மதுபான நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியர் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு வல்வெட்டித்துறை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பொன்னையா வியாகேசு, வியாழக்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல், அந்தோனியாரின் புனிதத் தன்மையை பாதிக்கும் வகையில் மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த...

ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் காலப்போக்கில் இதுபற்றி அறிவித்தல் வெளியிடப்படும் என பொதுநிர்வாக உள்ளூராட்சி ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு கடந்த 3ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். நீண்ட காலமாக தொடர்ந்திருக்கும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நிதி...

நாடாளுமன்றம் அடுத்த 7- 10 நாட்களுக்குள் கலைக்கப்படும்

நாடாளுமன்றம் அடுத்த 7அல்லது 10 நாட்களுக்குள் கலைக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் யார்?

புதிய அரசு அமையப் பெற்று 6 மாதங்கள் கடந்துள்ள போதிலும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் ஆறு மாத காலத்திற்கு மேலாகக் கூட்டப்படாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குறித்த கூட்டங்களிலேயே...

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளை கல்லெறிந்து விரட்டிய கும்பல்!!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் இல்லங்களில் இரவு நேரத்தை கழித்து வருவது வழமையாகும். அந்த வகையில் மல்லாகம் பகுதியில்...

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுவர் தொழிலை எதிர்ப்போம் என்பதே இம்முறை சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குழந்தை தொழிலாளர் முறை முற்றாக...

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வரையறை

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாடு செல்லும் பெண்கள், தங்களது குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனும் நடைமுறை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் பெண்களுக்கே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. 5...
Loading posts...

All posts loaded

No more posts