Ad Widget

பற்றைக்காட்டிற்குள் வளர்ந்த சிறுமிகள்!

பற்றைகளால் சூழப்பட்ட பூட்டப்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் தனிமையில் படுத்திருந்த இரண்டு சிறுமிகள் வவுனியா ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டு வவுனியா வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம்நேற்று நடந்துள்ளது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதிக்கு வவுனியா ஊடகவியலாளர்கள் மூவர் நேற்று மதியம் சென்றிருந்தனர்.அப்போது, பூட்டப்பட்ட வீடு ஒன்றின் வெளி முற்றப் பகுதியில் தனிமையில்...

உருத்திரபுரத்தில் காணாமற்போன சிறுமியை கண்டுபிடிக்க மூன்றாவது நாளாகத் தேடுதல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுகாடு பகுதியில் காணாமல்போன 3 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து கிராம மக்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில், இதுவரை சிறுமி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என...
Ad Widget

ஆறு மாதங்களுக்குள் 23 பாடசாலை மாணவர்களுக்குத் தொற்றியது எயிட்ஸ்!

இலங்கையில் கடந்த ஆறுமாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக் காலப் பகுதியில் மேலும் 23 மாணவர்களும் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக எயிட்ஸ் சுகாதார அமைச்சின் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ...

சட்டவிரோத மணல் கடத்தும் வாகனங்களை அரசுடமையாக்க உத்தரவு

யாழ்.மாவட்டத்தின் தீவுப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, வாகனங்களை சட்டப்படி அரசுடமையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை (23) உத்தரவிட்டார். வழக்கு விசாரணையொன்றின் பிணை மனுக்கோரல் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவை...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டும்

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியமான வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய இடம் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலம் என்பதும் இன்று பலருக்கு தெரியாது. ஆக, எமது இடங்களில் வரலாற்று முக்கியத்துவங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களையும் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டடங்களையும் பாதுகாக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலரஜா தெரிவித்தார். பொன்னாலை வரதராஜப்...

மெகி நூடில்ஸ் இறக்குமதிக்கு தடை

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மெகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறுஇலங்கை சுங்க திணைக்களத்திடம் நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்?

சிலவேளையில் நாடாளுமன்றத்தை இன்று புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை அறிவிப்பார் என தெரியவருகிறது. 20ஆவது திருத்தம்...

சிறுபான்மை மக்களின் நியாயபூர்வமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் சிறுபான்மையின மக்களின் நியாய பூர்வமான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் அர்த்தபுஷ்டியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய தேர்தல் முறைமை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார். மேலும், யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் 20வருடங்களுக்கு 9 ஐ விடவும்...

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசியக் கொள்கை மாறக்கூடாது -ஜனாதிபதி

ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது அக் கொள்கைகளை எடுத்தெறிவது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலைசிறந்த தேசிய கொள்கைகளுக்கான இயக்கத்தினால்...

அரச ஊழியர்களுக்கான 2000 ரூபா சம்பள உயர்வு இம்மாத்திலிருந்து!

அரச ஊழியர்களுக்கான மற்றொரு 2000 ரூபா சம்பள உயர்வு இந்த ஜூன் மாதத்திலிருந்து வழங்கப்படவுள்ளது என திறைசேரியின் துணைச் செயலாளர் எஸ்.ஆர். அர்ரி கலே தெரிவித்தார். நேற்று முன்தினம் (22) நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்கள்!

எதிர்வரும் 05 வருடங்களுக்குள் 100,000 வேலை வாய்ப்புக்களை நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய இளைஞர் முன்னணியின் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் - இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் மட்டுமன்றி...

வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்த முடிவும் இல்லை!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இராணுவமே தீர்மானிக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 2009...

வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர் அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வன்னிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென முன்மாதிரியாக அவர்களைத் தொழில் முனைவோர்களாகக் கொண்டு பயணிகள் ஓய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் செலவிட்டுள்ள பணத்தில் ஒரு டொலரேனும் வீண் போகாது. வன்னிப் பெண்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் மீளவும் சாதித்துக் காட்டுவார்கள் என்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பெண்களைப் பங்குதாரர்களாகக் கொண்ட வன்னிவள சுய...

வடமாகாண சபை உறுப்பினர்களின் கதவடைப்பு போராட்டம் முடிவு! சபை ஒத்திவைப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படாமைக்கு கண்டனம் தெரிவித்து வடமாகாண சபையில் உறுப்பினர்கள் சபா மண்டபத்தை மூடி மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாகாணசபை அமர்வுகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபையின் 31 வது அமர்வு இன்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் மாகாணசபை உறுப்பினரை அவமரியாதை செய்த அரசாங்க...

பனைவளத்தை அபிவிருத்தி செய்ய பனை அபிவிருத்தி வாரம் பிரகடனம்!

பனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ஜுலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ்மக்களின் இயற்கைச் சூழலிலும், பண்பாட்டுச் சூழலிலும், பொருளாதார மேம்பாட்டிலும் பிரதான இடத்தைப் பெற்றிருந்த பனை வளம் தற்போது அதிகம்...

தகவல் தருமாறு பொலிஸார் கோரிக்கை

எதிர்வரும் 26ஆம் திகதி, சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு சட்டவிரோமாக மதுபானம் விற்போரையும் போதைப்பொருட்களை விற்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு இரவு-பகலாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளது. சட்டவிரோமாக மதுபானம் விற்போர் மற்றும் போதைப்பொருட்களை விற்போர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸ்...

வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாததைக் கண்டித்து, இன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது விடயம் தொடர்பாக பல தடவைகள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையில் சுட்டிக்காட்டியபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்தே...

பாடசாலை மைதானத்தை புனரமைத்து கொடுத்த இராணுவத்தினருக்கு மக்கள் பாராட்டு

அச்சுவேலி திரேசா மகளீர் கல்லுாரியில் பலாலி 52ம் டிவிசன் இராணுவத்தில் செய்த வேலைகள் அச்சுவேலிப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப் பாடசாலையின் மைதானம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது காணப்பட்டதால் அப் பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து பாடசாலை அதிபர் பல அரசியல்கட்சிகள், அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டும் எந்தவிதமான பிரயோசனமும்...

பாடசாலை நேரத்தில் சீருடையுடன் தேவையற்றவிதத்தில் நடமாடும் மாணவர்கள் உடனடியாக கைதாவர்

தேவையற்றவிதத்தில் பாடசாலை சீருடையுடன் மாணவர்கள் வெளியில் திரிந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு 14 நாள்களோ அதற்கு அதிகமாகவோ விளக்கமறியலில் வைக்கப்படுவர் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போதே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்....

நூடில்ஸ்களுக்கு இரசாயன சோதனை

சகல வகையான நூடில்ஸ்களையும் இரசாயன சோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலிருந்து சேகரிக்கப்படும் நூடில்ஸ்களின் மாதிரிகள் கைதுதொழில் தொழிற்நுட்ப நிறுவகத்துக்கு சோதனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. -
Loading posts...

All posts loaded

No more posts