Ad Widget

வெள்ளைவானில் பிடிபட்ட மேஜர் ஜெனரலின் பாதுகாவலர்களுக்கு பிணை! – பின்னணி குறித்து சந்தேகம்.

மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படையினர் மூவரும் நீதிமன்றினால் நேற்றுமாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மீரிஹான பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவில் உடையில் இருந்த இவர்களிடம் இருந்து ஒரு...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும்...
Ad Widget

மஹிந்தவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக்கூடாது! – இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

இந்த நாட்டை ஆள மீண்டும் மஹிந்தவுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:- நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை வெற்றிகொள்வதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெற்றிகொண்ட ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

வடக்கு, கிழக்கு மக்களை வாக்களிக்காமல் தடுத்திருந்தால் இன்றும் மஹிந்தவே ஜனாதிபதி! – கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை அளிக்க இடமளித்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எனினும், ஜனநாயகத்தை சிறப்பாக ஏற்படுத்தியதனாலேயே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்‌ஷ அவ்வாறு செய்திருக்காமல் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...

வலி வடக்கு பாதுகாப்பு வலயத்தில் சிறிய பகுதியை விடுவிக்க இணக்கம்

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் சொந்த இடங்களில் ஒரு சிறிய தொகுதியை விடுவிக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது. கீரிமாலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள மக்களுடைய சில வீடுகள் உள்ளடங்கிய வசாவிளானில் இருந்து வளலாய் வரைச் செல்லும் செமன்றி வீதி, சாந்தைச் சந்தியுடன் தொடுகையுறும் வீதிகள் மற்றும் அதனை அண்மித்த 27...

மஹிந்த எனக்கு பணம் தந்தார் என டக்ளஸ் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். இத்தகைய நிலையில் எனக்கு மஹிந்த ராஜபக்‌ஷவினால் பணம் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உணமை உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறு...

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் கோரல்

17ஆவது சர்வதேச புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டிக்கான புகைப்படங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியுடன் ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடையவுள்ளமையினால் உடனடியாக புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை தேசிய புகைப்படச்சங்கம் வேண்டுகோள் விடுத்துளள்து. ஓகஸ்ட் 19ஆம் திகதி தேசிய மற்றும் சர்வதேச தெரிவுக்குழுவினர் அடங்கிய குழுவினால் படங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன. கண்காட்சி எதிர்வரும்...

துப்பாக்கி சகிதம் வெள்ளை வேனில் பயணித்த 3 இராணுவ வீரர்கள் கைது

மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவ வீரர்கள் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மிரிஹான பகுதியில் பயணித்த வேன் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் குறித்த வேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்...

வௌ்ளை வேன் விவகாரம் – மஹிந்த, கோட்டாபயவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தங்கியிருக்கும் மிரிஹான பகுதியில், வௌ்ளை வேன் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றியதாக தகவல் கிடைத்துள்ளது என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். போலி இலக்கத் தகடு பதிக்கப்பட்ட குறித்த வேனை நேற்று முன்தினம் இரவு கைப்பற்றியுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன்...

ஜனநாயக வழிமுறையால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஈ.பி.டி.பியின் முதன்மை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா

ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணையில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அறுபது வருடகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த...

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி

வடமாகாண சபையால் யூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பனை அபிவிருத்தி வாரத் தொடக்கமான இன்று புதன்கிழமையில் இருந்து இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை...

சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றச் செயற்படுகிறது கூட்டமைப்பு – கஜேந்திரன்

சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ்காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு...

தேர்தல் பரப்புரைக்கு மத தலங்களை பயன்படுத்த வேண்டாம் – தேர்தல் திணைக்களம்

தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காக மதவழிபாட்டுத்தலங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் மதவழிபாட்டு தலங்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தெரியவருகின்றது. ஓருவர் 1981ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின்படி இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ஓருவர் குற்றவாளி...

ஏனைய இனங்களைப் போல சகல உரிமைகளுடன் தமிழர்கள் வாழ வேண்டும்! – அ.இராசகுமாரன்

வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் எங்களது தாயகமாக அங்கீகரிக்கப்பட்டு ஏனைய இனங்களைப் போல் சகல உரிமைகளுடனும் தமிழர்கள் வாழ வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்கத்தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த...

“மின்னல்” நிகழ்சி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது. மின்னல் நிகழ்ச்சி நடத்தும் ஸ்ரீ ரங்கா , திரைக்குப் பின்னால் பேசும் பல விடையங்களை இணையத்தளங்கள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை அனைவரும்...

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு 50,000 ரூபா வழங்க முடிவு

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம் ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய்...

பணிப்பாளரின் அசட்டையீனத்தால் பலிக்கடாக்களாகும் யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள்

நிர்வாகச் சீர்கேடுகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ச்சியாக அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களால் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.07.2015) மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுத்தமில்லாமல் காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் உணவுப் பதார்த்தங்களை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். சம்பவம்...

திருகோணமலையில் மூன்று கிடைத்தால் முஸ்லிம்களுக்கு ஒன்று! – சம்பந்தன் உறுதிமொழி

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால், ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நியூ சில்வஸ்டர் ஹோட்ட லில் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, மத்திய அரசாங்கத்துடன்...

சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்கிறார் மஹிந்த!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துர் எம்.கே.சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. ரத்கமவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடும் சூழலை எனது அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்தது....

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள்! – வடக்கு, கிழக்கு மக்களிடம் மாவை வேண்டுகோள்

தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த...
Loading posts...

All posts loaded

No more posts