Ad Widget

வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்படும் – தேர்தல்கள் ஆணையாளர்

தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்களிப்பு நிலையத்தினருகில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால், வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது வற்புறுத்தப்பட்டால் குறித்த இடத்தின் வாக்கெடுப்பு உடன் ரத்துச் செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் வேட்பாளர்களின் பதாதைகளை காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் தேர்தல் சட்ட விதிகளை மீறும்...

யாழ். பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் விடுதி வசதியின்றி சிரமங்களுடன் கல்வி கற்பதாக யாழ். மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமாரன் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்தில் 600 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். அவர்களுக்கான விடுதி வசதிகள் போதாமல் உள்ளது....
Ad Widget

யாழ். பொலிஸார் இருவர் கடமையில் இருந்து தற்காலிக இடைநிறுத்தம்

யாழ். பொலிஸ் நிலைய இரு பொலிஸார் கடமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சுஜிவன் மற்றும் சாயன் தென்னக்கோன் ஆகியோரே இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ். அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கண்காணிப்பதற்காக வெள்ளிக்கிழமை (31)...

அமெரிக்காவில் இடம்பெற்ற விசேட ஒலிம்பிக் போட்டியில் சிவபூமி மாணவர்கள் சாதனை

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்துகொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில் 2 ஆம் இடத்தையும் அரசகுலசூரியன் மயூரன் என்ற மாணவன் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். சிவபூமி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இன்று இதன் அறுவடை...

யாழ்.பல்கலையின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதன் மாணவர்கள் நீதிமன்ற கூண்டில் நிற்கக்கூடாது

யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கியமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பில் பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் பெற்றோல் குண்டு, வாள்,...

பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல்...

அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2015  - தேர்தல் விஞ்ஞாபனம் பின்னணியும் அறிமுகமும் தமிழர் தேசத்தின் இறைமை காலனித்துவவாதிகளிடம் எமது இறைமையை இழக்கும் வரை, தமிழர் தேசம் இறைமையும் ஆட்சி உரிமையும் கொண்ட தனியான தாயகத்தை இலங்கைத்தீவில் வரலாற்றுரீதியாகக் கொண்டிருந்தது. முழு இலங்கைத்தீவும் 1833 இல் ஆங்கிலேய...

மாவீரர்கள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்!

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது  மாபெரும் பொதுக்கூட்டம்  வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில்  நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்   நினைவுவிடம் அமைந்துள்ள  தீருவிலில்...

தறிகெட்டு ஓடிய மினிபஸ் 10 பேரைக் காயப்படுத்தியது!

வீதியால் சென்ற மினி பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றவர்களை மோதியதுடன் பஸ்ஸும் வயலில் தடம்புரண்டதால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். இதில் ஆறு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் சங்கானை நகரப் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது. மாதகலில் இருந்து வேகமாக சங்கானை நகரை...

சமஷ்டிக் கோரிக்கைக்கு மக்களாதரவு உள்ளதா என சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது! – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி...

மகிந்தவுக்கு படையினருக்கும் சர்வதேச நீதிமன்றில் தண்டனை பெற்றுக் கொடுப்போம்! – சிவாஜிலிங்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்ய உள்ளதாக வட மாகாணசபை உறுப்பினரும், குருணாகல் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட போரின் போது பாதுகாப்புப் படையினர் வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான அப்பாவி மக்களை படுகொலை செய்திருந்தனர். இந்த குற்றச் செயல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி...

யாழில் ஐ.தே.க வேட்பாளர் அலுவலகம் மீது தாக்குதல்

சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் வைத்தியகலாநிதி சிவசங்கரின் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 02.30 அளவில் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியிலுள்ள குறித்த அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது....

வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டியது அவசியம்! – ஆனந்த சங்கரி

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது. ´´இத்தகைய அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எவரும் குறை கூற முடியாது. அதேநேரம் இவ்வாறு அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்படுவதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்´´ என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்...

தமிழர் தரப்பில் ஐக்கியம் இருந்தால் மட்டுமே நல்லதொரு தீர்வினை தமிழ் மக்களுக்கென பெற்றுக் கொள்ள முடியும் டக்ளஸ் தேவானந்தா

மத்திய அரசை சரியான முறையில் கையாண்டு அவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈரோவில் மண்டபத்தில் நேற்றய தினம் இடம்பெற்ற யாழ்.முகாமையாளர் மன்றம் 2015 பொதுத்...

தேச அங்கீகாரமே எமது திடமான நிலைப்பாடு-மணிவண்ணன்

எமக்கெதிராக பெரும்பான்னை அரசு தொடுக்கின்ற அடக்குமுறைகளை நாம் தடுக்க வேண்டுமானால் எமது தேசம் அங்கிகரிக்கப்பட்டால் மாத்திரமே அது நடைமுறைச்சாத்தியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கேள்வி நேரம் எனும் நிகழ்வில் தமது கட்சியின்...

வவுனியா பஸ் நிலையப்பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணம்

கடந்த 23.07.2015 அன்று வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கோமா...

யாழ். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் ஆரம்பமாகியது இந்து ஆராய்ச்சி மாநாடு

அகில இலங்கை இந்து மன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் இந்து ஆராய்ச்சி மாநாடு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், நல்லை ஆதீன முதல்வர், இந்தியாவின் தர்மபுரி ஆதீன குருமுதல்வர் ஸ்ரீமத் மௌனகுமார தம்பிரான் சுவாமிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக பேராசிரியர் கோபால...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு!

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார். அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில்...

வல்வை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபொரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வல்வெட்டிதுறை நகரத்தில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 02.08.2015 மாலை 4.30 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்கரையிலுள்ள ரேவடி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.

தேநீர்க்கடையை உடைத்து உள்நுழைந்த பொலிசார் இரு பெண்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் !!

புத்தூர்- நவக்கிரி நிலாவரைச் சந்தியில் உள்ள தேநீர் கடையை உடைத்து உள்ளே நுழைந்த பொலிஸார் அங்கிருந்த இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த இழுபறியில் பெண்ணொருவரின் மேலாடை கிழிந்து மார்பகங்கள் வெளியே தெரிந்தது அதைப் பற்றிக் கவலைப்படாது பொலிசார் அட்டகாசம் செய்ததாக பிரதேசவாசிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு சம்பவம்...
Loading posts...

All posts loaded

No more posts