Ad Widget

வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று...

யாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு மாதக் குழந்தைக்கு மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தாளர்!!

நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை ஒன்றுக்கு விற்றமின் மாத்திரைக்குப் பதிலாக குருதி அழுத்த நோய்க்கு உபயோகிக்கும்...
Ad Widget

பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூரம்!

வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று (வெள்ளிக்கிழமை) உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள்...

தற்கொலை குண்டுதாரிகளாகும் தாய்மார்கள்!

இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்­காகப் பாது­காப்பு படை­யினர் கொழும்பில் உள்ள வீடொன்­றுக்கு சென்­றி­ருந்­த­வேளை அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றது. அவ்­வேளை கதவை திறந்­தவர் பாத்­திமா இப்­ராஹிம். தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் ஒரு­வ­ரான இலாம் இப்­ரா­ஹிமின் மனைவி- கர்ப்­பிணி. பொலி­ஸாரைப் பார்த்­ததும் அவர் வீட்­டிற்குள் ஓடி­வெ­டி­குண்டை வெடிக்க செய்தார்.அவ­ருடன் சேர்ந்த அவ­ரது மூன்று மகன்­களும் கொல்­லப்­பட்­டனர்....

தாக்குதல் தொடர்பாக மஹிந்தவினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை – சுமந்திரன்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று...

பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹோட்டலுக்குள் வெடிகுண்டுகள் வைத்திருந்த நபா்!!

உணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம்...

மது போதையில் காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!!

மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , காவல்துறையினரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மது போதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த...

உயிரிழந்துவிட்டார் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்ட எதிரி நீதிமன்றில் உயிருடன் வந்த அதிசயம்!!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் நேற்று முன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் – பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று...

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் மீட்டியதாக நாதஸ்வரக் கலைஞர்கள் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைப்பு

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடார்ந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்த நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கல் நடைபெற்றது....

முகநூலில் விடுதலைப் புலிகளின் ஒளிப்படத்துக்கு like!!: முன்னாள் போராளியிடம் விசாரணை

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே கடந்த வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக்...

வெட்டுக்காயங்களுடன் உதவிகோரி ஓடிய இளைஞன்!!! உதவ மறுத்த மக்கள்!!!

காதல் விவகாரத்தால திருகோணமலை நீதிமன்ற வீதி, வில்லூன்றி பகுதியை சேர்ந்த தங்கத்துரை தனுசன் (21) என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார். யுவதி ஒருவரை டானியல் என்ற இளைஞன் முன்னர் காதலித்ததாகவும், தற்போது அந்த யுவதியை கொல்லப்பட்ட தனுசன் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. காதலி ஏமாற்றிய கோபத்தில், தனுசனுடன், டானியல் அடிக்கடி முரண்பட்டுள்ளார். சித்திரை புதுவருட தினத்திலன்றும் இரண்டு இளைஞர்களிற்குமிடையில்...

பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்க வற்புறுத்திய கல்விப் பணிப்பாளர்!! விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்!!!!

யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டித்துள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மையில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் சக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு...

பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை!!

பகிடிவதைகள் தொடர்பாக யாழ். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டினை அதன் தலைவர் மற்றும் செயலாளர் ஒரு ஊடக அறிக்கையாக ​வெளியிட்டுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு, யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால்...

திறமையான தமிழ் பொலிஸ் அலுவலகர் பழிவாங்கப்பட்டுள்ளார்!!!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரோஷான் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் மன்னார் இலுப்பைக் கடவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் 200 கிலோ கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்த உப பொலிஸ்...

மானிப்பாயில் பெண்களுடன் சேட்டை புரிந்த மாணவர்களைத் தண்டித்த ஆசிரியருக்கு மிரட்டல்!!

வீதியில் பெண்கள் மீது சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்களை அழைத்து பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தண்டித்திருந்த நிலையில் மறுநாள் பாடசாலைக்குள் நுளைந்த மாணவன் ஒருவரின் தந்தை பெரும் குரல் எழுப்பி அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அதிபரை மன்னிப்புக் கோரவைத்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் தறுதலைகளாக மாறுவதற்கு பெற்றோரின் இவ்வாறான செயற்பாடுகளே காரணம் என...

யாழ் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களின் கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் மூன்று கழிவு ஒயில் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு நேற்று (01) பதிவு செய்யப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கைவிரல் ரேகை இயந்திரங்களே இனந்தெரியாத...

போலி நிதி நிறுவனத்தை நடாத்தி மக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக W.S.D (work shop development) என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் மக்களுடைய வீ டுகளுக்குள சென்று சேகாிப்பு திட்டம் என்ப பெயாில் மோசடி வேலையை ஆரம்பித்திருந்தது. இதற்காக அந்த பகுதியை சோ்ந்த சில வறிய குடும்பங்களை சோ்ந்த பெண்களை 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் என...

நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை

நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் அதிக மாத்திரை வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்றுள்ளதுடன் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 5ஆம் திகதி நுண்கடன் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையைச் செலுத்த முடியாத...

யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 4 வைத்தியர்கள் ஒரு மாதமாகியும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை!

யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் இன்னமும் தமது கடமைகளை பொறுப்பேற்க வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரை கேட்ட போது , வைத்தியர்கள் கடமையை பொறுப்பேற்காதது தொடர்பில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம் என...

“நீர் பிறக்கும்போது அரசியல்வாதியாகப் பிறக்கவில்லை” – யாழ் மாநகர துணை முதல்வர் ஈசனை விரட்டிய பொது மக்கள்

கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் மூடப்பட்ட வீதியை மீண்டும் திறக்கக்கோரி போராடிவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சந்தித்து கலந்துரையாடியபோது அதனை அறிந்து அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்ட குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த யாழ் மாநகர சபை உறுப்பினரும் துணை முதல்வருமான...
Loading posts...

All posts loaded

No more posts