Ad Widget

காணாமலாக்கப்பட்டோரை கொன்றுவிட்டீர்கள் என்பது தெரியும்! சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும், ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தாம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சித் தலைவர்களின் கூட்டம்...

இலங்கையில் தொடரும் நெருக்கடி – மக்களை வீடுகளில் இருக்குமாறு எச்சரிக்கை

வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக நாட்டிற்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பில் உள்ள தூசி...
Ad Widget

தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம்...

மாண்டூஸ் சூறாவளி ; கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் "மாண்டூஸ்" சூறாவளியாக குவிந்து இரவு 11.30 மணியளவில் அட்சரேகை 9.2N மற்றும் தீர்க்கரேகை 84.6Eக்கு அருகில் நேற்று வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூறாவளி டிசம்பர் 09-ம் திகதி பிற்பகுதியில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை...

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பாடசாலை கட்டணம்!

அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(04.12.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமை காரணமாகவே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால்...

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு!!

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம்...

அதிகாரப்பகிர்வு குறித்து விவாதிக்க கொழும்பில் ஒன்றுகூடும் தமிழ்க் கட்சிகள்

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அழைத்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பான பொதுவான கருத்தை எட்டுவது பற்றி விவாதிக்கும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தை இன்று மதியம் இரா.சம்பந்தனின் உறவினர் வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில்...

இலங்கை முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய்...

யாழ்ப்பாணத்தில் 120 மில்லியன் ரூபாய் மோசடி : சகோதரிகள் கைது

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த இரு சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல்...

இலங்கையில் 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில், 634 அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கமைய இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் 634 பொருட்களின் விலை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் – மானியம் வழங்குவதில் நெருக்கடி!

அரசு ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். கருவூலத்தில் இருந்து, தினசரி பணப்புழக்கத்தை கையாள்வது எவ்வளவு...

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் இணக்கம்!

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று (திங்கட்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அதன்படி டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு...

4 இலட்சத்திற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமை!!

ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதன் பாவனை நாட்டின் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருடகாலமாக வரையறுக்கப்படும் என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குறித்த தகவல் வெளியானது

குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து வந்த 42 வயதுடைய குறித்த இலங்கையர் காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு, அவருக்கு...

இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை!! – இராணுவம்

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் பாலகிருஷ்ணன் நிரோஸ் குமார் என்பவரின் தகவலறியும் உரிமை விண்ணப்பம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மேற்படி ஆணைக்குழு கூடியபோது, அதன் முன்பாக காணொளி காட்சி மூலம்...

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்!!

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மலேசியாவிற்கு விமானம் மூலம் வேறு நாட்டுக்குச் செல்வதற்காகவே இந்தக் கப்பலில் இந்தக் குழுவினர் ஏறியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில்...

அதிகார பலம் உள்ளோரின் ஆதரவோடு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கௌரவத்தோடு வலம் வருகிறார்கள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையையும் கடத்தலையும் தடுக்கும் நோக்குடன் முதன்மை வீதிகளில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அன்றாட வாழ்கைக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பதுயரங்கள் போதாது என்ற ரீதியிலா...

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் இன்று (08) முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில்...
Loading posts...

All posts loaded

No more posts