Ad Widget

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்!

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவியியல் மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் குறித்த பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் அங்குள்ள யுத்த நினைவு சின்னம் வரை இடம்பெற்றது. இதன்போது, தமது கைகளை கட்டியவாறு, தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தி உறவுகள்...
Ad Widget

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு...

வலி.வடக்கில் இராணுவத்திடமிருந்த காணி கையளிப்பு : மீள்குடியேறவுள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகை

வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி வெள்ளிக்கிழமை (3) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதோடு , மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கும் தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

8 கோடி பெறுமதியான புனரமைப்பு வேலையை நிறுத்திய மாநகர முதல்வர் ஆனோல்ட்!! வன்மையாக கண்டிக்கும் மணிவண்ணன்!!

யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் இன்று உத்தரவிட்டதை, யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....

யாழில் குடும்பஸ்தரை கொலை செய்த மனைவி உட்பட 11 பேர் கைது!!

கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடாத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக்...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் நடவடிக்கைகளில் அதிருப்தி:மக்கள் விசனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் இருவர் நடந்துக்கொண்டுள்ளனர். கடந்த 17ஆம்திகதி வீட்டில் யாருமற்ற நிலையில் 45வயது மதிக்கத்தக்க நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண் தனித்திருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் குறித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த பெண் கூக்குரலிட்ட நிலையில் வீட்டிலிருந்த தொலைபேசி...

கொடிகாமத்தில் ஹெரோயின் பாவனையால் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10ஆம் திகதி இவர்...

மீண்டும் கோவிட் பரவும் அபாயம்!! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

புதிய கோவிட்19 அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சரியான சுகாதார ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமென சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா உட்பட பல நாடுகளில் தற்போது கோவிட்19 வேகமாக பரவி வருவதாக அவர் கூறினார். மேலும் பேசிய மருத்துவர் அன்வர் ஹம்தானி, இலங்கை...

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவோம் : யாழில் ஜனாதிபதி

அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்...

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் புதிதாக இணையவுள்ள கட்சிகளும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபமொன்றில் நேற்று வியாழக்கிழமை (12) மாலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டன. க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன...

புதுக்குடியிருப்பில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் அரசியல் தலைவர்களின் உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டது

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும் , தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து இன்று (12) கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஒன்பதாம் திகதி (09) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு...

விக்னேஸ்வரன் மணிவண்ணன் அதிரடித் தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இரு தரப்புக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத்...

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான...

குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில்!

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான...

பொலிஸாரினால் 2 வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது சிறுமி!!

ஆபாச காணொளிகளை காட்டி, மிரட்டி பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர் சுகவீனமுற்றுள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலையில் , அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி...

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு: ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு...

சீனாவில் பரவும் ஒமிக்ரோன் – இலங்கையிலும் பரவும் அபாயம்

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில்...
Loading posts...

All posts loaded

No more posts