Ad Widget

குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் பணியில் நிபுணர்கள் அனைவரையும் கரம் கோர்க்குமாறு வேண்டுகிறோம்

யாழ் குடாநாட்டின் நீர்வளத்தை மீட்புச் செய்யும் தலையாய பணியில் நிபுணர்கள் அனைவரையும் வடக்கு மாகாணசபையுடன் கரம் கோர்க்குமாறு வேண்டி நிற்கிறோம் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07.04.2015) வடக்கு மாகாணசபையின் 27வது அமர்வு நடைபெற்றபோது சுன்னாகம் நிலத்தடிநீரில் எண்ணெய் மாசு தொடர்பான...

போகோ ஹராம் தீவிரவாத அமைப்புக்கும் மஹிந்தவின் மருமகன் ஆயுதம் விநியோகம்!

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. [caption id="attachment_42831" align="aligncenter" width="494"]...
Ad Widget

புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் குடியமர்வு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது – இராணுவத் தளபதி

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...

பிரதமரின் பயணம் அரசியல் ரீதியானதால் கலந்துகொள்ளவில்லை – முதலமைச்சர் சி.வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது – சம்பந்தன்

மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். மகிந்த அரசின் கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர், உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற...

விக்கி- விக்கிரமசிங்க பனிப்போர் முடிவுக்கு வரவேண்டும் – மனோ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய...

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. "போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வு செயற்றிட்டத்தின்கீழ் தொடர்ந்தும் இயங்கும்!

தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து...

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்

கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. பொலனறுவை...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார் – சுமந்திரன்

அண்மையில் கனடா சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் , முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சிறுபிள்ளைத்தனமாக கருத்து மோதிக்கொள்வதாக கூறினார். அத்துடன் தான் வருகின்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில்போட்டியிடப்போவதாகவும் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் தெரிவித்தார் அத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானம் தனக்கோ சம்பந்தனுக்கோ தெரியாது...

நாடாளுமன்ற விதிகளே எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும்! பதவியை ஏற்க அழைப்புக் கிடைத்தால் பரிசீலிப்போம்!!

"நாடாளுமன்ற விதிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே என்ற நிலைமை வருமானால் அந்தப் பதவியை நாம் ஏற்பதா, இல்லையா என எமது கட்சி கூடி ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஐக்கிய...

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் – சுவாமிநாதன்

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள்...

பாடசாலை நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலப்பு: சந்தேகத்தில் இருவர் கைது

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார்,...

மீள் குடியேற்றம் என்று கூறுகிறார்கள், ஆனால் ஓசை படாமல் வீட்டை இடித்து தள்ளுகிறார்கள். -விக்கி ஆவேசம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரி ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்களின் பயன்பாட்டிற்கென கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த இந்த விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், அங்கு மேடையில்...

காணி கையளிப்பு : ஜனாதிபதி, பிரதமர், சந்திரிகா பங்கேற்பு!

வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (23) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள்...

புதிய தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீல.சு.கட்சியினர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 01. ஏ.எச்.எம்.பெளசி - அனர்த்த முகாமைத்துவம் 02. எஸ்.பி.நவீன் - தொழில்...

ராணுவத்தை வெளியேற்று இல்லையேல் போராட்டம் வெடிக்கும்

வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள் குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைபெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் ஏற்படுகிறது. 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வயாவிளான்...

சொந்த நிலத்தைப் பார்வையிடச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து...

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை நிபுணர்குழு தெரிவிப்பு

சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது. தூயகுடிநீருக்கான செயலணியின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (20.03.2015) சுகாதார அமைச்சின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்செயலணியில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த...
Loading posts...

All posts loaded

No more posts