Ad Widget

தமிழர் இலட்சியத்தை வெல்ல வாக்குகளை ஆயுதமாக்குங்கள்! – திருமலையில் சம்பந்தன்

"தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்கவேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பிரபாகரன் மரணம் தொடர்பில் நான் எந்தவொரு ஊடகத்துக்கும் செவ்வி வழங்கவில்லை – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த...
Ad Widget

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள்! – வடக்கு, கிழக்கு மக்களிடம் மாவை வேண்டுகோள்

தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த...

இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை- வடமாகாண முதலமைச்சர் லண்டனில் உரை

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய  வடமாகாண முதலமைச்சர்  விக்னேஸ்வரன் இலங்கை என்ற நாட்டில் இரு தேசிய இனங்கள் உள்ளன திம்புக்கோட்பாட்டின்னடிப்படையில் தீர்வு தேவை என்று கூறிய அதேவளை கூட்டமைப்பினை தனது உரையில் கடுமையாக சாடினார். உரையின் முழு வடிவம் அமெரிக்க பயணத்தின்...

தமிழ் எம்.பிக்களின் கொலையுடன் தொடர்புடையவருக்கு ஐ.ம.சு.முவில் இடம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கொலைகளுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒருவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் போட்டியிட இடமளிக்கப்பட்டுள்ளது. முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சுய விருப்பின் பேரில் இந்த இடத்தை வழங்கியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கே...

அடுத்த ஆண்டு தமிழருக்கு தீர்வு நிச்சயம்! – சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

SLFP வெற்றியீட்டினால் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை: தேர்தலில் நடுநிலை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுத் தலைவர்கள் பொதுவாக விசேட உரைகளை ஆற்றும் போது அவற்றை...

மாணவர்கள் குழுவொன்று சுயேட்சையாக போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக மாணவர்களை உள்ளடக்கிய சுயேட்சைக் குழவொன்று யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்தது. சுந்தரலிங்கம் சிவதர்ஷன், ஜெயரத்தினம் யதீசன், மங்களேஸ்வரன் கஜன், சுந்தரலிங்கம் சுதர்சன், இராசகுமார் கிரிஷாந், பந்துசேனா அருண்ராஜ், பரம்சோதிநாதர் பிரேந்திரா, சிவலிங்கம் லவகீசன், தங்கவேல் கிரிவேந்தன்...

திருகோணமலையில் மனிதப்புதைகுழி!

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...

வேட்புமனுவில் கைச்சாத்திட்டார் மஹிந்த : குருநாகலில் போட்டி!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார். இதனடிப்படையில் மஹிந்த குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும், நாளைய தினம் அதற்கான வேட்புமனு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அனந்தி இதுவரை விண்ணப்பிக்கவில்லை

எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் -...

 மாணவிகள் மூவரைக் காணவில்லை என முறைப்பாடு

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவிகள் மூவரை காணவில்லை என திங்கட்கிழமை (06) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் சாதாரண தர மாணவிகள் மூவரும் திங்கட்கிழமை (06) மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்று பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவர்களுடைய பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம்: புதிய அரசாங்கம் அமைப்போம் – மஹிந்த முழக்கம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார். தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுக்கும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுத் தேர்தலில்...

நாடாளுமன்றம் சனாதிபதியினால் கலைக்கப்படுகின்றது.ஆகஸ்ட் 17 இல் தேர்தல் !

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று சனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வேட்புமனுத்தாக்கல் அடுத்தமாதம்...

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்ய புதிய அரசு சதி – சுரேஸ் எம்.பி

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது போல தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

காணாமற்போனோர் தொடர்பான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளாது – த.தே.கூ

காணமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...

யாழ்.பல்கலை மாணவர் மீதான வாள்வெட்டு : மேலும் ஒருவர் கைது : பின்னணியில் இராணுவம் ?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 12 ஆவது சந்தேக நபர் ஒருவர் நேற்று மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர்...

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள்...

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசியக் கொள்கை மாறக்கூடாது -ஜனாதிபதி

ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது அக் கொள்கைகளை எடுத்தெறிவது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலைசிறந்த தேசிய கொள்கைகளுக்கான இயக்கத்தினால்...

உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நடேசன், புலித்தேவன் உறவினர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் அவர்களது உறவினர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை தலைவர் நடேசன் மற்றும் மூத்த தளபதி புலித்தேவன் ஆகியோரின் உறவினர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கவுள்ளனர். இறுதிக் கட்ட யுத்தத்தில் சரணடைந்து...
Loading posts...

All posts loaded

No more posts