Ad Widget

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவரம் வெளியானது

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் 2. மாவை.சேனாதிராசா 3. த. சித்தார்த்தன் 4. எம்.ஏ. சுமந்திரன் 5. ஈ.சரவணபவான் 5வது இடம்  நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது...

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பாக பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகம் மீது நேற்றிரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வேட்பாளரும், சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தாவின் அலுவலகம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது...
Ad Widget

ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும் – சம்பந்தன்

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்...

கூட்டமைப்பின் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றது சர்வதேச சமூகம் – மாவை

"வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர். இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம்...

தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...

வெள்ளைக்கொடி விவகாரம் மாவையின் குற்றச்சாட்டுக்கு கஜேந்திரகுமார் பதிலடி!!

2009 மே18 அதிகாலை அங்கு சிக்குண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒன்றரை இலட்சம் மக்களது உயிரை நினைத்து நானும் மாவை அண்ணரும் அழுதோமென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர் அந்த கடைசி கணங்களினில் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன்...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்; சி.வி.கே மறுப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படவேண்டும் என சில கட்சிகள் திட்டமிட்டுச் வெளிப்படுத்தும் வதந்தியான விடயமே இதுவெனவும் வடமாகாண அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தான்...

தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில் சம்பந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்றய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார். இந்த...

போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தமிழர் தீர்வை விரைந்து பெற வீட்டுக்கு வாக்களியுங்கள்!

ராஜபக்‌ஷவின் கொடூர ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என ஐ.நாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு 2016ஆம் ஆண்டில் கிடைக்கவேண்டும் என அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தவும் ஓகஸ்ட் 17...

ஐ.நாவுக்கு எவ்வாறு பதிலளிப்பது! கூட்டமைப்பை நாடுகிறது அரசு!! பேச்சுகளும் நடந்தன என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:- "நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வே எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்தது. வேறு எந்தவித...

போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காது இலங்கை அரசு! – வெள்ளைக்கொடி சம்பவம் குறித்து ராஜித மீண்டும் கருத்து

இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போர்க்களத்தில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆகியன போர்விதிமுறைகளை மீறும் செயல்களாகும். எனவே, போர் முன்னெடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக அரசு ஒருபோதும் நிற்காது - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்! கடத்தல்காரர்களை கோட்டாவே இயக்கினார்!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போராளிகளையும் கடந்த அரசு இந்தக் கொலைகளுக்காக பயன்படுத்திக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார். கடந்த அரசின் அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய...

உரிமைகள் மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன்! இறுதிவரை அவரை கூட்டமைப்பு ஆதரித்தது!!

"தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான் அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்....

ஆஸ்திரேலியாவின் உபகரணங்கள் மூலம் இலங்கையில் ஆள்கடத்தல்கள், சித்திரவதைகள்!

சி.ஐ.டி. என்ற இலங்கையின் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு ஆள்கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரே வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக இலங்கையிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழர்களைத் தடுத்துநிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் தந்திரோபயமாகவே இந்தக் கொடூரமான செயலில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்...

சமஷ்டிக் கோரிக்கைக்கு மக்களாதரவு உள்ளதா என சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது! – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சமஷ்டித் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கின்றீர்களா என்பதனை சர்வதேச நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. எனவே, எமது மக்களின் வாக்குகள், தமிழர் பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வை ஆதரித்து உறுதி செய்வதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான சட்டத்தரணி...

குற்றவாளிகள், தம்மைத்தாமே விசாரிப்பதை த.தே.கூ ஏற்காது – சுரேஸ் பிரேமச்சந்திரன்

குற்றம் செய்தவர்களே தங்களை விசாரிக்கும் நடவடிக்கையை தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதேபோல், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் உள்ளக விசாரணை நடத்தப்படுகின்றமையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவுள்ள ஐ.நா. போர்க்குற்ற விசாரணை...

முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு – வித்தியாதரன் ஆவேசம்

முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறந்தள்ளி சர்வதேச நிகழ்சி நிரலுக்கு அமைய செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்தார். எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளுடனோ அன்றேல் அரசுடன் இணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி செயற்படவிருக்கிறதா என வினவியமைக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளால்...

மஹிந்த பட்டாளத்தை வாக்குகளால் விரட்டியடிக்கவேண்டும் தமிழர்கள்! – சம்பந்தன்

"தமிழர்களைக் கொன்று குவித்து - அவர்களின் வாழ்விடங்களைத் தரைமட்டமாக்கி யுத்தவெற்றி என்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் மஹிந்த அரசு பறைசாற்றியது. அப்போது வாயை மூடிக்கொண்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் வெற்றிலை சின்னத்திலும், வீணை சின்னத்திலும் வாக்குக் கேட்டுவருகின்றார்கள்.இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை...
Loading posts...

All posts loaded

No more posts