Ad Widget

அளவெட்டியில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொருக்கிய ஆயுதக் குழு!

அளவெட்டி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றிரவு துப்பாக்கி சகிதம் உள்நுழைந்த ஆயுதக்குழு பெரும் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. அளவெட்டி ஜெயா பிறஸ் சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு ஞாயிறு இரவு 7.30 மணியளவில் துப்பாக்கி , வாள் , இரும்பு கம்பிகள் , பொல்லுகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் ஐன்னல்...

பிரபாகரனும் மனைவியும் உயிருடன் உள்ளனரா?: புலிகளின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை...
Ad Widget

சம்பந்தனுடன் வட மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண சபையின் வரவு - செலவுத் திட்டம் மற்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கே...

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

வெசாக் மற்றும் சிங்கள வருடப் பிறப்பை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவது போன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்...

தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கின்றார் கருணா ! இணைந்து செயற்படுவது குறித்தும் பரிசீலனையாம்!!

வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்...

கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். இது குழப்பத்துக்கே வழிவகுக்கும். எனினும், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். 'தமிழ் மக்கள் பேரவை' அமைப்பின் உருவாக்கத்துக்கு...

தமிழ் மக்கள் பேரவை ஒரு இயக்கம்! இது அரசியல் கட்சி அல்ல! சீ.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது என முதலமைச்சர் இன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை...

முதலமைச்சர் விக்கி தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உதயம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான செய்திகள்  வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக்...

இராணுவத்தினர் வசமுள்ள பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பிரதமர்

வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால்...

போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் காணாமற்போனதற்கு இராணுவமே பொறுப்பு! – மக்ஸ்வெல் பரணகம

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். என்று காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர், இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால், வட்டுவாகல்...

புலிகளுடன் தொடர்புடையோர் அரசியல் கைதிகள் அல்லர்! – அமைச்சர் சுவாமிநாதன்

"புலிகளுடன் தொடர்புடைய தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியல் கைதிகள் அல்லர்'' என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஜயந்த சமரவீர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த...

யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்!!

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐங்கரநேசன், 2004 ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு...

யாழில் 993 பேர் சாட்சியமளித்துள்ளனர்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற 6 அமர்வுகளில் 1,620 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 993 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்துக்கான அமர்வுகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று நேற்று புதன்கிழமையுடன்...

இரணைமடுத் திட்டமே யாழ்.மாவட்ட குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! – ஹக்கீம்

"யாழ். குடாநாடு மற்றும் தீவகப் பகுதிகளின் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு இரணைமடு குடிதண்ணீர்த் திட்டமே நிரந்தரத் தீர்வாகும்'' என்று நாடாளுமன்றில் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களின் பிரதிநிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் அந்த மக்களுக்கு மிகக் குறைந்தளவான செலவில் இரணைமடு பாரிய குடிதண்ணீர்த் திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும்...

பாலச்சந்திரனுடன் நின்ற என் மகனைக் காணவில்லை! ஆணைக்குழு முன் தந்தையார் கதறல்!!

"வன்னியில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது எனது மகன் ஐங்கரன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் நின்றார் எனவும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாலச்சந்திரனுடன் அவரை இராணுவத்தினர் கைதுசெய்தனர் என்றும் நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர். ஆனால், பாலச்சந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக்...

தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 17 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்யவுள்ளதாக, பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றில், இந்தக் குற்றப் பத்திரிகைகளை, சட்ட மா அதிபர் தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு...

ஜனாதிபதியின் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல் ? ‪துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். வத்திக்கானுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்த போதே, இவ்வாறு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை வானில் இராணுவம் கடத்திய மகனின் அழுகுரல் ஈபிடிபி அலுவலகத்தினுள் கேட்டது! தாய் சாட்சியம்.

வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக் கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள்...

அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடைபெறாது! ராஜித

தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் வடக்கில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் வைத்திருந்த குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் மறுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் வடக்கில் பல ஏக்கர் நிலங்களை தமது சொந்த நிலங்களைபோல் பாவித்தனர். அதேபோல்...

 ‘காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்படும்’

காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts