Ad Widget

பெண் உயிரிழப்பு! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யாழ் போதனா வைத்தியசாலை!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய...

முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் தாயகம் திரும்பினர்!

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கைப் பிரஜைகளும்...
Ad Widget

வெடுக்குநாறிமலை விவகாரம்: கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை!!

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக வடக்கு- கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையில் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும்...

வட்டுக்கோட்டை இளைஞனைக் கடத்துவதற்கு உதவிய கடற்படை!!

வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திக் கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்சாட்டிய நிலையில், இளைஞனைக் கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் அதிர்ச்சி காணொலி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது மனைவியுடன் காரைநகருக்கு கடந்த திங்கட்கிழமை உந்துருளியில் சென்று விட்டு, வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும், அவரது மனைவியையும் பொன்னாலை பால...

சுழிபுரத்தில் புத்தர் சிலை!! : அச்சத்தில் மக்கள்!!

சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிலையானது கடற்படையினரால் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் இது பின்னர் விகாரையாகத் தோற்றம் பெறலாம்...

நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்!!

சாந்தனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன. இறுதிக் கிரியைகள் நிறைவுப் பெற்றதும் பூதவுடல் உடுப்பிட்டி சனசமூக நிலையத்திற்கு எடுத்துக் செல்லப்பட்டு அங்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சாந்தனின் பூதவுடல் வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்தியாவின் முன்னாள்...

இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்ட துயரம்! பொலிஸாரின் கொடூரம் – சிறீதரன்

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டதானது இலங்கை அரசின் கோரமுகத்தையும் அராஜகத்தையும் சர்வதேசத்தின் கண்முன்...

யாழ்.சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பிய இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த...

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்!

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் அறிவித்திருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா...

கிளிநோச்சியில் பஸ் – வேன் விபத்து ; ஒருவர் பலி ; 9 பேர் காயம்! 9 எருமை மாடுளும் பலி!!

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த...

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 ,16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் குறித்த மூவரையும் விசாரணைக்கு பின்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இரு சிறார்களையும் சிறுவர்...

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய் தொற்றுகள் : இருவருக்கு கொரோனா!!

சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சிறுவர்கள் நோய் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை கம்பஹா மாவட்ட...

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம்!!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா இதனை உறுதி செய்துள்ளார். எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த...

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!! நேற்று மட்டும் 111 டெங்கு நோயாளிகள்!!

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய் பரவல் அதிகமானதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி யாழ்ப்பாணத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள வளவுகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ஆம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்...

யாழில் அதிகரித்துள்ள டெங்கு காய்ச்சல்!!

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை...

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களித்திருந்தனர். இதேவேளை பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது. அத்துடன் தேசிய மக்கள் சக்தி எதிராகவே வாக்களித்ததுடன் தமிழ்த் தேசியக்...

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்!!

யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான நேற்று(11) மாலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல்...

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை!! – சரத் வீரசேகர

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை. சிங்களவர்களும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, புத்தசாசனம்,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...

வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம்!!

தெல்லிப்பழை பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் ,தெரிவித்துள்ளனர். இதன்போது பொலிஸ் நிலையம் முன்பாக காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தப்பி சென்றவர்களை பிடிப்பதற்காக வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தை...

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தை மிரட்டும் அநாமதேய அமைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான முன்னறிவித்தல் நேற்றிரவு...
Loading posts...

All posts loaded

No more posts