Ad Widget

வடமாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா – புகைப்படத் தொகுப்பு

முள்ளியவளையில் உழவர் பெருவிழா ! – கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்பு

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...
Ad Widget

வைரமுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார்!

முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் வைரமுத்துவை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின்பேரில்கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து...

பார்த்தீனியம் அழிப்புக்கு சட்ட நடவடிக்கை அலுவலர்கள் நியமனம்

யாழ் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...

தைத்திருநாளை முன்னிட்டு பட்டம் ஏற்றும் விழா!

வல்வெட்டித்துறையில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவில் மக்கள் திரண்டனர். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையென திரண்டமையால் வல்வெட்டித்துறை கடற்கரை நிரம்பி வழிந்தது. தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையினில் வித விதமான பட்டங்கள் போட்டியில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்த நிலையினில் வடக்கு முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். சிறார்களினை தாண்டி வயது...

யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா!

இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன. நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க...

யாழில் மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வு

பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா...

யாழ் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில்...

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த நாள் அறக்கொடை விழா

அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 91ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்ற நிறுவுநரும் இளைப்பாறிய ஆசிரியர்களுமான...

ஜனாதிபதி, பிரதமரின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு யாழில் நிகழ்வுகள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசாங்கம், நாட்டின் சமாதானம், நல்லிணக்கத்தின் ஊடான ஒரே தேசம் மாபெரும் பலம் என்னும் தொனிப்பொருளிலேயே நிகழ்வுகள் நடைபெற்றது....

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இலவச கல்வி மற்றும் களிப்பாட்ட அம்சங்கள்

நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர். சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக...

மரத்திலிருந்து வீழ்ந்து இறந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூபா ஒரு இலட்சம்

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....

யாழில் அருள்நெறி விருது வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அருள்நெறி விழா எனும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் திருவிழா உற்சவ காலத்தின் போது யாழ் மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டன. இவ்வாறு யாழ்...

முல்லைத்தீவில் நடைபெற்ற கடற்கோள் நினைவஞ்சலியின் படத்தொகுப்பு

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய கடற்கோளின்போது, இலங்கையின் கரையோர மாவட்டங்களில் 40,000 பேர் வரையில் பலியாகினார்கள். முல்லை மாவட்டத்தில் 3000க்கும் அதிகமானோர் உயிர் துறந்தார்கள். அவர்களுக்கான நினைவஞ்சலி, கடற்கோள் நினைவுதினமான நேற்று சனிக்கிழமை (26.12.2015) முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கோள் நினைவாலயத்தில் நடைபெற்றது. இந்து, இஸ்லாம், கிறீஸ்தவம் ஆகிய மூன்று மதமுறைகளிலும் இடம்பெற்ற...

பெண்களின் சுய பாதுகாப்பு பயிற்சிப்பட்டறை

பெண்களுக்கெதிரான வன்முறைக்கு வாரத்தினை முன்னிட்டு பெண்களின் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று யாழ் பழைய பூங்கா வீதியிலுள்ள முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலக மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டிலும் UNHCR மற்றும் மனித...

சர்வதேச மனித உரிமைகள் தினநிகழ்வு

வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்

பெண்கள் வன்முறைக்கெதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்

குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் CCH நிறுவனமானது KNH இன் அனுசரணையுடன் பெண்கள் வன் முறைக்கெதிரான ஊர்வலத்தினை 09.12.2015 இன்று மேற்கொண்டனர். நவம்பர் 25 ஆம் திகதிதொடக்கம் டிசெம்பர் 10 திகதி வரையான காலப்பகுதியினை ORANGE THE WORLD பெண்கள் வன்முறைக்கெதிரான வாரமாக ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்று நடைபெற்ற ஊர்வலமானது ORANGE...

முல்லை பிரசாந்தின் குருதிபடிந்த மண் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு

மண்ணுக்காகப் போராடிய நாங்கள் அந்த மண் இறந்துகொண்டிருப்பதைப் பாராமல் இருக்கிறோம் -பொ.ஐங்கரநேசன்

Loading posts...

All posts loaded

No more posts