Ad Widget

வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சூழல்தின நிகழ்ச்சி வவுனியாவில்

வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30...

நெல் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரங்கள்

வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்றுநடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் வடக்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ளது. இயந்திரங்களை ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர்; விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய...
Ad Widget

யாழ். நூலக எரிப்பு ; 35 வருட நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத மிகவும்...

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து...

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி வீரசிங்கம் நினைவாக அஞ்சல் தலை வெளியீடு

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்....

வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்”...

இரண்டு தேசங்கள் ஒருநாடு என்ற கொள்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை...

இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் வடக்கில் காணிகள் அபகரிப்பு

வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் மே தின நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது. இடம்: சிவன்கோவில் திருமண மண்டபம், பருத்தித்துறை நேரம்: பி.ப 3.00 மணிக்கு ஆரம்பம் காலம்: 01 மே 2016 (ஞாயிற்றுக்கிழமை) தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காரம், தமிழ்...

இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் ஒன்றுகூடல்

இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு: Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு ஊடக அறிக்கை திகதி: 24/04/2016 இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை இலங்கை சமூக...

யாழில் வடக்கு தெற்கு மாணவர்களின் ஒன்றுகூடல்

வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும் வகையிலும் ,நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் “பனை ஓலையும்,தென்னை ஒலையும்” எனும் தொனிப்பொருளிலான தமிழ்- சிங்களப் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றன. தென் மாகாணத்திலிருந்து 100 மாணவர்கள்...

வடக்கு மாகாணசபையின் நியமனங்கள் நீதியான முறையிலேயே இடம்பெறுகின்றன

வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...

வடக்கு கால்நடை அமைச்சால் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...

யாழ்ப்பாணத்தில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அழகு ராணிப் போட்டி

யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார். சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை...

யாழில் சித்திரைப் புத்தாண்டில் சிறப்பு பட்டிமன்றம்! இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வருகை!!!

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்டிமன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு...

புனர்வாழ்வு பெறும் போராளிகளின் புத்தாண்டு நிகழ்வு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின்...

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்ப நிகழ்வு!

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை நேற்று முன்தினம் பி.ப 3.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத் தோட்டப்பயிர்கள் மாவட்ட...

யாழில் புதிய ஹோட்டல் திறப்பு – ஜனாதிபதி பங்கேற்பு

யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில்...

அவுஸ்திரேலியாவில் உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் நூல் வெளியீடு

உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...
Loading posts...

All posts loaded

No more posts