Ad Widget

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகளை இவ்வாறு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாடசாலை சீறுடைகளை அணிவது கட்டாயமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் அதற்கமைய, வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Ad Widget

சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை...

பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

ஒக்டோபர் 21இல் வடமாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள், முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் நிறைவு!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்....

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை பார்வையிட பின்வரும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.. https://www.youtube.com/watch?v=faFrhvyeVqM

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!!

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5...

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்!!

தென் மாகாணத்தில் உள்ள, 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா ஊடகமொன்றுக்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெற்றுகொள்ள மாணவர்களை தயார் செய்யவும் – பெற்றோருக்கு அறிவுறுத்தல்

பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படாத நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்காது என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதற்குரிய திகதிகள் மற்றும் இடங்கள்...

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான புதிய தகவல் வெளியானது!

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான...

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 7,8,9ஆம் திகதிகளில்; நிலமை சீராகாவிடின் நிகழ்நிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாட்டில் இப்போதுள்ள கோரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள்...

இணையவழிக் கற்கைகளின் போது பிள்ளைகள் மீது அதிக அக்கறை பெற்றோருக்குத் தேவை!!

இணையவழிக் கல்வி முறை மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது நடக்கும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித விதானபத்திரண தெரிவித்துள்ளதாவது; இணையவழிக் கற்பித்தலில் சிறுவர்கள் துர்நடத்தைக்கு உள்படுத்தப்படுவதாக பல தகவல்கள்...

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு?

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில்...

தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடுவதால் மாணவர்களுக்கு நீண்டகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்!!

ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் பாடசாலைகளை விரைவில் திறப்பது அவசியமானது என கொழும்பு மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்....

தரங்கள் 7-13இல் பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி – பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும்

12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். இன்று (09) சுகாதார...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க இனியும் காத்திருக்க வேண்டியதில்லை – பேராசிரியர் நீலிகா

பாடசாலைகளை மீண்டும் திறக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூறு மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார். பல மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் இன்னும் திறந்தே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். “இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உள்பட...

பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆலோசனை!

நாட்டில் உள்ள 18 வயதுக்கு குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விடயம் குறித்து...

பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்...

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி – அரசாங்கம்

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கையில், நாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் கொவிட் 19 தடுப்பூசியை வழங்கினோம். இதனைத் தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது...

தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அடுத்த வாரம் முடிவு!!

ஒக்டோபர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஒன்பது மாகாணங்களின்...
Loading posts...

All posts loaded

No more posts