- Thursday
- April 25th, 2024
எதிர்வரும் 19 ம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது எதிர்வரும் 19 ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து மேலும் பேசிய அவர், "இப்போது பலர்...
போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை...
022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம்...
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி இடம்பெவுள்ளது. அத்துடன், டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டு உயர்தரத்துக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும்...
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் இயல்பு நிலை காரணமாக இந்த தீர்மானம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)த் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் கடந்த 16ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, அதிசிறப்பு...
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தை முன்வைக்கும் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. எனினும், குறித்த ஆவணத்தின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது...
பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட...
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி...
021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இவ்வாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை...
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மாத்திரமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் ஒன்லைன் ஊடாக கற்க முடியும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாண...
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை...
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம்...
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும்...
Loading posts...
All posts loaded
No more posts