- Thursday
- April 25th, 2024
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....
ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 21பேர் காரைநகர் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க. பாடசாலையில் நேற்று முன்தினம் கற்றல் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஒவ்வாமை நோயால் உடம்பில் ஏற்பட்ட தடிப்பு, கடி, சொறி காரணமாக மாணவர்கள் அவதியுற்றனர். இதனை அடுத்து இவ்வாறு பாதிக்கப்பட்ட 21 மாணவர் கள் வைத்தியசாலையில்...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்....
யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது. குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து...
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்...
யாழ்ப்பாண மாவட்டம் 2015 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில், யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர் சோதிநாதன் வசீகரன் 192 புள்ளிகள் பெற்று யாழ். மாவட்ட ரீதியாக முதலிடத்தினை பெற்றுள்ளார். [caption id="attachment_51180" align="aligncenter" width="365"] சோதிநாதன் வசீகரன்[/caption] யாழ். சென் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்களான கனகராஜ் கவிலக்ஷன் 188...
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2016ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர் கற்கைநெறிகள் என்னும் வகைக்குள், படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ், குடிசார் எந்திரவியல், மின்னியல் மற்றும் இலத்திரனியல் எந்திரவியல், கனிய அளவையியல், பொறிமுறை எந்திரவியல் (ஓடோ மொபைல்) ஆகிய கற்கை நெறிகள் உள்ளன. வர்த்தகத்துறை கற்கை நெறிகள் என்னும் வகைக்குள் தேசிய கணக்கீட்டு...
2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள் EXAM இடைவௌி சுட்டெண்ணைக் குறிப்பிட்டு (EXAM__(SPACE) INDEX NUMBER) 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.
2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று (05) வௌியிடப்பட்டுள்ளன. குறித்த வெட்டுப்புள்ளிகளைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.
மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன....
யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகள் நடத்தப் படுவதைத் தடைசெய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது எனக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரமான காலை 7.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு இன்னும் சில நாள்களில் முடிவெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை நேரங்களிலும், தனியார் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள்...
சட்டக் கல்லூரி அனுமதி - 2016 கல்வியாண்டுக்கான போட்டிப் பரீட்சையில் தsrilanka law collegeமிழ்மொழி மூல பரீட்சார்த்திகளில் கணிசமான தொகையினருக்கு அப்பட்டமாக அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பரீட்சை கொழும்பில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு அடங்கலாக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தமிழ் பேசும் பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத வந்திருந்தனர். சட்டக் கல்லூரி அனுமதியில்...
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கற்று, இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியோர் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அடிப்படை சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எனவே, மேற்குறித்த நிலையிலுள்ளவர்கள் அலுவலக நேரத்தில் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார். இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியவர்கள் மற்றும் இறுதிப் பரீட்சையில்...
தேசிய ஆள் அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களினால் தமது பாடசாலை அதிபர்களின் உறுதிப்படுத்தலுடன் கடந்த 30.03.2015 இற்குப் பின்னர் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பியமைக்கு அமைவாக மாணவர்களுக்கான தேசிய ஆள் அடையாள அட்டை மாணவர்களின் தனிப்பட்ட சொந்த முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகின்றன....
பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில்...
இம்முறை க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இணைய வழி ஊடாக கணிதப் பாடத்துக்கான ஆற்றலை மேம்படுத்தும் உன்னத திட்டம் ஒன்றை கொமர்ஷல் வங்கி தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் Optimized IT என்ற நிறுவனத்துடன் இணைந்து அண்மையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இணைய வழி மூலமாக பல் தெரிவு...
இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...
சிவனொளி பாத மலை எந்த மாகாணத்துக்குரியது? என நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களென விடையளித்துள்ளனர். நில அளவையியல் திணைக்களத்தின் படி, முறைப்படி சிவனொளி பாத மலையானது சப்ரகமுவ மாகாணத்துக்குரியது என்ற போதிலும் வரைபடங்களின்படி இது மத்திய மாகாணத்துக்குரியதாகக் கருதப்படுகின்றது. எனவே, இவ்விடயத்தில் சிக்கல்...
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் இவ்வருட முடிவிற்குள் நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். கிராமப்புற கஷ்டப் பிரதேச பாடசாலைகளிலேயே அதிகளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கணிதம், விஞ்ஞானம், பௌதீகவியல், தொழில்நுட்பவியல், பாடங்களுக்கு கூடுதலான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts