- Wednesday
- April 24th, 2024
க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே...
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6,...
இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த...
கொவிட்-19 வைரஸ் தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சாதிகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும்...
ஜூன் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. “ஜூன் 1 முதலாம் திகதி தொடக்கம் பல கட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மே 11ஆம் திகதி முதல் பணிக்கு அறிக்கையிடவேண்டும். க.பொ.த. உயர்தரம் மற்றும் சாதாரண நிலை மாணவர்களுக்காக பாடசாலைகள்...
நாடுமுழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, கொழும்பு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். “கோரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை...
2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெறுபேறுகள் பதிவேற்றப்படுகின்றன என்றும் பதிவேற்றியவுடன் முடிவுகளைப் www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான...
கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார். க.பொ.த. உயர்ந்தார்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் http://www.jhc.lk/ என்ற இணைத்தளத்தில்...
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்...
இலங்கை அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் 'குருகெதர' புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக...
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க...
அனைத்துப் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக வரும் மே 11ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏப்ரல் 20ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முதலாம் தவணை விடுமுறை மே 10ஆம் திகதிவரை...
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை...
கொரோனா வைரஸ் பரவல் அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, இணைய வழிக் கற்றல் முறைகளினூடாகத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் சகல பீடங்களினதும் இளநிலை மாணவர்களுக்குத் தேவையான இணைய வழிக் கற்றல் முறைமைகளைப் பதிவேற்றுவதற்கு வசதியாக...
இம்மாதம் 20 ஆம் திகதி நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதாக இல்லாத காரணத்தினால் முன்பு தெரிவிக்கப்பட்ட தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் எப்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றதோ அன்றிலிருந்து இரண்டு வாரகாலத்தினுள்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித்திகதி நாளையாகும். இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி கடந்த 13 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட பிரதி ஆணையாளர் நாயகம், கொரோனா வைரஸ் பரவல்...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மார்ச் 28ஆம் திகதி வெளியிடுவது...
2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தின் (Online) ஊடாக விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை...
Loading posts...
All posts loaded
No more posts