Ad Widget

கிளிநொச்சி வாள்வெட்டு!!: 6 பேர் கைது; முக்கிய சந்தேகநபர்கள் யாழில்?

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்படுகின்றனர். சம்பத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் உள்பட ஒன்பது பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் நேற்று அரச தரப்புச் சாட்சியான காவல்துறை அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்....
Ad Widget

ஆனையிறவில் கைது செய்யப்பட்ட வல்வையைச் சேர்ந்த இருவரும் பிணையில் விடுவிப்பு

வல்வெட்டித்துறையிலிருந்து திருகோணமலைக்கு திருமணச் சடங்கின் பின்னான விருந்துக்கு காரில் பயணித்த இருவர், துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வாடகைக் காரில் பயணித்த போது, ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனைக்கு உள்படுத்திய போது, காரின் பின்பகுதியில் துப்பாக்கி ரவைகள் இரண்டு மீட்கப்பட்டன என்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட...

வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றார்களா?: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது!!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் வானில்...

யாழ் தனியார் வைத்தியசாலையில் சிறுவன் உயிரிழந்தமைக்கு சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா?

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயதுச் சிறுவன் உயிரிழந்தமைக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலில் உள்ள கவனயீனம் காரணமா? என முழுமையான விசாரணையை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுவனுக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாக மருத்துவ நிபுணரால்...

யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைகள்...

பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது!!

‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார்’ என தமிழ் மொழியில் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொக்குவிலில் வீடு முற்றுகை; வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து...

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் பெண் கைது!

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல்...

பருத்தித்துறையில் இராணுவச் சீருடைகளுக்கு இணையான ஆடைகள், 11 வர்த்தகர்கள் கைது!

பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று (14.05.19) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. அதன்போதும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின்...

நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க கைது!

நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலைமைகள் தொடர்பாக, ஊழல் எதிர்ப்பு செயலணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, காவற்துறை தலைமையக அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த...

வலி வடக்கில் யுவதி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்!

வலி வடக்கில் 17 வயது யுவதியொருவர் இளைஞர்கள் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் வசிக்கும் யுவதி நேற்று மாலை, வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பிரதேசமொன்றிற்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வரும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள், அவரை கடத்திச் சென்று துர்நடத்தைக்கு...

குடாநாட்டைக் கலக்கிய கொள்ளைக் கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய 6 பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர். “யாழ்ப்பாணக்...

தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்: 5 பேர் அதிரடியாக கைது

மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற...

யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை!

குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி மூன்று இடங்களில் நேற்று திங்கட்கிழமை ஆயுதமுனையில் வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை-புலோலி, சிறுப்பிட்டி, அச்சுவேலி பகுதியில் மூன்று வீடுகளில் 27 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பன ஆயுத முனையில்...

தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் மற்றும் பாடல்கள் வைத்திருந்த இளைஞன் கைது!

வடமராட்சி கிழக்கு பூனைத்தொடுவாய் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 125 கிலோ கஞ்சாவை காட்டிக் கொடுத்த இளைஞன் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும், பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பூனைத்தொடுவாய் பகுதியில் 125 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு இளைஞா்...

யாழில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் அதிரடியாக கைது!

யாழ்.மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில்...

யாழ்.பல்கலை. சிற்றுண்டிச் சாலை நடத்துபவருக்கும் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்...

தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவரும் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது – மாணவர்கள் மத்தியில் பதற்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள்...
Loading posts...

All posts loaded

No more posts