Ad Widget

கொடிகாமத்தில் ஊரடங்கு வேளை வீடு புகுந்து இளம் பெண் வெள்ளை வானில் கடத்தல்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று இளம் பெண் ஒருவரைக் கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு...

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல்!!

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....
Ad Widget

சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர். ‘சம்பந்தப்பட்ட இடத்தில் பெருமளவு கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு...

ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் யாழில் வாள்வெட்டு – இருவர் காயம்

யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி...

உடுவில் கொள்ளை; பொதுமக்களால் பிடித்துக் கொடுத்த சந்தேக நபரை விடுவித்த சுன்னாகம் பொலிஸார்

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணித்துள்ளார். உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த 6ஆம் திகதி (கொள்ளை இடம்பெற்று...

நீர்வேலியில் 3 வீடுகளில் கைவரிசை; கொள்ளைக் கும்பலில் மூவர் ஏழாலையில் சிக்கினர் – அடகுவைத்ததாக இரண்டு பெண்களும் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது. இரண்டு வீடுகளுக்குள்...

உடுவில் பகுதியில் வயோதிபத் தம்பதியை தாக்கி துணிகரக்கொள்ளை – வயோதிபர் படுகாயம்!

உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...

மிருசுவில் கொலை; சகோதரர்கள் மூவர் கைது!!

தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (வயது-40)...

மதுபோதையில் ஆவணங்களுமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்!!

மோட்டார் சைக்கிளின் ஆவணங்களின் மதுபோதையில் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற போது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்...

குடத்தனையில் மணல் கடத்தல் விவகாரம்; 4 பெணளுக்கும் பிணை!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும்...

ஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து...

இணுவிலில் சட்டத்துக்கு புறம்பாக சிசுவை அகற்றி புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜோடி கைது!!

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த...

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள...

வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம்...

கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த 50 பேரும் கைது செய்யப்பட்டதாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரியாத் பதியூதீன் கைது!!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் இளைய சகோதரர் ரியாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று மாலை பொலிஸார் தெரிவித்தனர். 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது....

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியைத் தொடரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவனே...

ஆவாவின் பிறந்தநாள் கொண்டாடிய வீடு இராணுவத்தினால் சுற்றிவளைப்பு; 3 பேர் கைது – பலர் தப்பிஓட்டம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள்...

சமூக வலைத்தளத்தில் போலி செய்தியை பரப்பிய பெண் கைது

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரம் பரப்பியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து, நேற்றையதினம் (05) வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேகநபர் நேற்றையதினமே...
Loading posts...

All posts loaded

No more posts