- Tuesday
- March 19th, 2024
எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில்...
பாண் மற்றும் ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை...
11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமைபோன்று இயங்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை...
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும்...
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்...
சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான...
" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம். உதயகுமார் குற்றஞ்சாட்டினார். அத்துடன், நாட்டு மக்களின் தோழன் சஜித்,...
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தனது கையிருப்பில் உள்ள எரிவாயு திங்கட்கிழமை (14) வரை மட்டுமே போதுமானது என பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள்...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது, நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக Petrol...
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5...
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எண்ணெய்க் கப்பலுக்கான கட்டணம் முன்னர் 32 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டது என கூறினார். இருப்பினும் சிங்கப்பூர் நாணய விகிதங்களுடன் ஒப்பிடுகையில்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி 230 ரூபாவாக குறைத்துள்ளது. வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல்...
எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான நாணய கடிதங்களை திறப்பதற்கு வங்கிகள் அனுமதி வழங்காமையால் இவ்வாறு எரிவாயு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
500 மில்லிகிராம் பெரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபாய் 30 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. 2022 பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு உள்ளடங்களாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருக்கு தட்டுப்பாடு...
எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது இந்த தருணத்தில் அவசியமானது என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க, அரசுக்கு அறிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெட்கோ எரிபொருள்களின் விலையை அரசு திருத்தியமைக்கும் என நேற்று இடம்பெற்ற...
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்கி அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்தநிலையிலேயே, புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய போத்தல் குடிநீர் 500 மில்லி லீற்றருக்கான விலை 50 ரூபாயாகவும் ஒரு லீற்றருக்கான விலை 70...
Loading posts...
All posts loaded
No more posts