Ad Widget

பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு!

50 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி நாளைக் காலை தொடக்கம் ஒரு இறாத்தல் பாணின் விலை 65 ரூபா என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “கோதுமை...

கோதுமை விலை குறைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சி என்பவற்றை கருத்திற் கொண்டு கோதுமை மாவின் விலையை கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோதுமை மாவின் விலையை வழமைக்கு கொண்டு வராவிட்டால் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான...
Ad Widget

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் ஆகக் கூடிய சில்லறை விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதால் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் இவ்வாறான தீரமானத்தை மேற்கொள்ளவில்லை என்றும் செயலாளர் தெரிவித்தார். எரிவாயு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக...

சமையல் எரிவாயுவின் விலை 158 ரூபாவால் அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (24) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு 12.5 கிலோக் கிராம் எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1696 ரூபாவாக மாற்றப்படுகிறது. இந்த விலை அதிகரிப்புக்கு பாவனையாளர்கள்...

சிகரெட் விற்பனையை நிறுத்துவதில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் முதலிடம்!

“சிகரெட் உள்ளிட்ட புகைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் 107 நகரங்களில் (கிராம மட்ட நகரங்கள்) அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமாக 22 நகரங்களில் புகையிலைப் பொருள்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும்...

நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி விற்பனை நிலையம் திறப்பு

பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர். 1980 ஆம்...

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரின் விலை...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!!! : பிரதமர்

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...

நிற­மூட்­டப்­பட்ட போலிப் பருப்பு சந்தைகளில் தாராளம்!! பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளுக்கு முறை­யி­டு­மாறு அறிவுறுத்தல்!!

நிற­மூட்­டப்­பட்ட தர­மில்­லாத பருப்பு வகை­கள் சந்­தை­யில் விற்­பனை செய்­யப்­ப­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது என்று பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றான பருப்பு வகை­கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தில் விற்­பனை செய்­யப்­பட்­டது தற்­போது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பருப்பை கழு­வும் போது நீர் சிவப்பு நிற­மாக மாறு­வ­து­டன் வேக­வைக்க வழ­மை­யை­விட கூடு­த­லான நேரம் எடுக்­கும். இவ்­வா­றான பருப்பு வகை விற்­பனை...

பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் உயர்வு

பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் வரும் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூடி ஆராய்ந்தது....

எரிபொருள்களின் விலைகளைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

எரிபொருள்களின் விலையைக் குறைப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது. இதன்படி பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 ரூபாவாகவும் பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல் 129 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டன. எனினும் எரிபொருள்களின்...

பெற்றோல், டிசல் விலைகள் உயர்வு

எரிபொருள்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. பெற்றோல் (92 ஒகரைன்) 8 ரூபாவாலும் பெற்றோல் (95 ஒக்ரைன்) 7 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் சுப்பர் டிசல் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் (92 ஒக்ரைன்) 145 பெற்றோல் (95 ஒகரைன்) 155 ரூபாவாகவும் டிசல் 118 ரூபாவாகவும் சுப்பர் டிசல்...

பட்டதாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் !!!

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்ற போதிலும் தற்பொழுது நிலவும் வட்டி வீதங்கள் காரணமாக கடனை பெற்று வர்த்தக...

வட.கிழக்கில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்: உலக வங்கி!

மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் உலகவங்கி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள இடைக்கால அபிவிருத்தி அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரச...

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு!

சமையல் எரிவாயு விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

வங்கி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பு?

அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் வரும் ஜூலை முதல் இரண்டு வாரங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க அறிவித்துள்ளார். அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு...

இலங்கையில் முதன் முதலாக புதிய வகை எரிபொருள் அறிமுகம்

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிய எரிபொருள் வகையான யூரோ 4 (Euro 4) எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த எரிபொருளானது சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் இந்த எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று பெறுமதிகளின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 160.0069 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை ரூபாவின்...

பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி! நாளை முதல் அதிகரிப்பு!!

தனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்டண அதிகரிப்பு...
Loading posts...

All posts loaded

No more posts