Ad Widget

வடக்கிற்கு அனுப்பப்பட்ட சீனியில் 30,000 Kg திருப்பி அனுப்பப்பட்டது!

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்....

சீனிக்கு தட்டுப்பாடு : அதிகபட்ச சில்லறை விலையும் நீக்கம்!!

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவித்தல், இதன் மூலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பொதி செய்யப்படாத 1 கிலோ...
Ad Widget

அனைத்து பொருட்களுக்கமான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!!

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

லிட்ரோ விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு விலைகளில் இம்முறையும் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் 4ம் திகதி புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...

நல்லூரில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று...

யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்

வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , இது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள் , அவர்களிடம் இருந்து உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு , பணத்திற்கு பதிலாக காசோலைகளை...

இந்திய ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 323.03 ஆகவும் விற்பனை விலை 336.16 ஆகவும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 329 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி டொலருக்கு...

கோதுமை மா விலைகளில் மாற்றம்!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

பால்மா விலையில் மாற்றமா? பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம்!

பால்மா விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் ரூபாவின் ஸ்திரத்தன்மைக்கு அமைய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பால்மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்கு தேவையான பால்மா கையிருப்பில் உள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் செலவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படும் எனவும்...

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வகையான சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையினை 3,000 ரூபா வரையில்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது. இவ்வாறான சூழலில் இன்று...

எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!!

எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் குறிப்பிட்டார். இம்மாதம் 04ஆம் திகதி நள்ளிரவு முதல்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.47 ரூபாயாக அதிகரித்து விற்பனை விலை 314.49 ரூபாயாக பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி...

யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 150 ரூபாய்!

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் பாண் ஒரு றாத்தலின் விலை 150 ரூபாயாக இருக்கும் என யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிஒஉத்துள்ளது. தற்பொழுது பாணின் விலையை மாத்திரமே குறைத்துள்ளோம். ஏனைய பேக்கரி உற்பத்திகளின் (பணிஸ் உள்ளிட்டவை) விலையை குறைக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் மாவின் விலை குறைக்கப்படுமாயின் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின்...

நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சீமெந்துக்கான வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3...

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாயாக அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும்,...

காலாவதியான சோடா போத்தல்கள் யாழ் நகரில் விற்பனைக்கு!! மக்களே அவதானம்!!

யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலமாகியுள்ளதுடன், மோசடி வியாபாரி மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் யாழ்.நகர பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதியான சோடா போத்தல்களை காலாவதி திகதியில் மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும் ஒரு விநியோகஸ்த்தர் விற்பனைக்காக வழங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது....

அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்?

அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமை காரணமாக இறக்குமதியானர்கள் இந்தக் கட்டணங்களை...
Loading posts...

All posts loaded

No more posts