Ad Widget

இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி!!! விரைவில் சட்ட நடவடிக்கை!! – ஆளுநர்

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை...

அதிபர் திட்டியதில் மயக்கமுற்ற ஆசிரியை வைத்தியசாலையில்

வவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார். இதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை...
Ad Widget

தமிழினியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிவைப்பு

உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியின் தாயாரான திருமதி சுப்பிரமணியம் சின்னம்மாவிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வீடு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கான நிதி வழங்குமாறு கிளிநொச்சியிலுள்ள சமூக ஆர்வலர்...

தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி மக்களை வீதியில் விட்டுவிட்டார் – விஜயகலா

தமிழ் மக்களால் தெரிவான ஜனாதிபதி எமது மக்களை வீதியில் விட்டுவிட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் 4 வருடங்களை வீணடித்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்த விபத்தநேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த 7 மாணவர்களும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு...

கிளிநொச்சி வாள்வெட்டு!!: 6 பேர் கைது; முக்கிய சந்தேகநபர்கள் யாழில்?

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்படுகின்றனர். சம்பத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி பெண் உள்பட ஒன்பது பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக...

கிளிநொச்சியில் வாள்வெட்டு சம்பவம்: கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம்!

கிளிநொச்சியில், செல்வாநகர் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் காயமடைந்துள்ளனர். பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில்...

நீராவியடி பிள்ளையார் கோயில் விவகாரம் – ஊடகவியலாளர் குமணன் மீது பொலிஸ் தாக்குதல்

முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது தாக்குதல் நடாத்தி இனவாத கருத்துக்களாலும் தகாத வார்த்தைகளாலும் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பேசி அச்சுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மலை பிள்ளையார் கோவில் பெயர் பலகை நீக்கப்பட்டமையை கண்டித்து, பெயர் பலகையை மீள நாட்ட நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அப்பகுதி...

மாணவர்களின் உணவை படையினர் கைகளால் சோதனையிடுகின்றனர் – பெற்றோர் கவலை

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மாணவர்களின் உணவு வகைகளை கைகளால் சோதனையிடுவது தொடர்பில் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாடசாலைகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்குடன் , இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை எனும் பெயரில் மாணவர்களை தினமும் இம்சித்து வருவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் , ஆசிரியர்கள்...

கிராம சேவகரை அச்சுறுத்திய பெரும்பான்மை இன இளைஞர் கைது!

முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் நேற்று (22) கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்., கடந்த 15.05.2019 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77 ஆம் இலக்க கிராம சேவையாளர்...

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள்!

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்திலேயே குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 36 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக...

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு – பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியனவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம்...

விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர். வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உணவுத்...

வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று...

முல்லைத்தீவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள்,நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து...

முல்லைத்தீவில் மௌலவி ஒருவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நீராவிப்பிட்டிப் பகுதியில் மௌலவி ஒருவரை சிறப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் மாவனெல்ல பகுதியை சேர்ந்த 48 வயதுடைய குறித்த மௌலவி நீராவிப்பிட்டி பகுதியில் தங்கி இருப்பதாக சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ளார்கள். இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இவர் இலங்கையில் தடைசெய்யப்பட்ட...

பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் ஹோட்டலுக்குள் வெடிகுண்டுகள் வைத்திருந்த நபா்!!

உணவகத்திற்குள்ளிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜன்குளம் தாவூத் ஹோட்டல் உாிமையாளா் பொலிஸ் நிலையத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கனகராஜன்குளம்...

கிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது!

கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பங்களை அடுத்து நாடாளவிய ரீதியில் தேடுதல்களும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும்...

கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் மீட்பு ; பொலிசார் விசாரணை

கிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் குறித்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பளை பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts