Ad Widget

புலிகளின் எழுச்சிப்பாடல்கள் அடங்கிய சீ.டிகளை விற்றவருக்கு பிணை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்...

ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்படும் ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலைய வர்த்தகர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர். இதன் காரணமாக கிளிநொச்சி...
Ad Widget

சாதியை கூறி மாணவா்களை பேசும் அதிபா் வேண்டாம்! பெற்றோா் போராட்டம்

புதுக்குடியிருப்பு- வேணாவில் பாடசாலை அதிபா் இடமாற்றம் செய்யப்படவேண்டும். எனக்கோாி பெற்றோா் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். பாடசாலையின் அதிபா் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறித்த பாடசாலையின் அதிபா், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும். அத்துடன் பாடசாலை மாணவர்களின்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் – அங்கஜன்

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

‘காணாமல் போனவர்களை முதலைக்கு வெட்டிப் போட்டாச்சு… எதற்கு கத்திக் கொண்டு நிற்கிறீர்கள்?’: போராடும் உறவுகளிடம் கேட்ட தமிழ்ப்பெண்!

“உங்கள் பிள்ளைகளை முதலைக்கு வெட்டிப் போட்டு விட்டார்கள். அவர்கள் திரும்பி வருவார்களா? இங்கு எதற்காக வந்து கத்திக் கொண்டிருக்கிறீர்கள்?“ என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டுள்ளார் தமிழ்ப் பெண்ணொருவர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் (30) கிளிநொச்சியில் நடத்திய போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தது. கரைச்சி பிரதேசசபைக்கு முன்பாக உள்ள காணி தொடர்பான...

ஒரு ரூபாய் செலவின்றி ஒரு கிலோ மீற்றா் வீதியை செப்பனி்ட்டு கிளிநொச்சி இளைஞா்கள் சாதனை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கிறவல் கொண்டு செல்லும் டிப்பா் வாகனங்களால் சேதமாக்கப்பட்ட வீதியை இளைஞா்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து டிப்பா் வாகனங்களாலேயே புனரமைப்பு செய்துள்ளனா். கிளிநொச்சி - அழகாபுாி பகுதியின் ஊடாக செல்லும் பழைய கண்டி வீதியில் உள்ள கொக்காவில் சந்தியை அண்மித்த பகுதியில் தற்போது கிரவல் ஏற்ற அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியிடங்களிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றது....

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரிய போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட...

அதிகாலையில் வீடு புகுந்து இளைஞன் மீது சூடு!!

அதிகாலையில் வீடு புகுந்தவர்கள் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இடியன் துவக்கால் இளைஞனின் கால் பகுதியில் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு மங்கை குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார்...

வெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில்...

கிளிநொச்சியில் நாய் இறைச்சி?

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேற்றையதினம் 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது....

கிளிநொச்சியில் பலத்த மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆரம்பித்த மழை இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ச்சியாக பெய்வதால் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அத்தோடு கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து...

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர்...

காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுப்பு

வவுனியா- குறிசுட்டகுளம் பகுதியில் காணாமல்போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறிசுட்டகுளம் காட்டிற்குள், மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து குறித்த இளைஞனை பொலிஸார் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுத்துள்ளனர். காட்டிலுள்ள கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் நீதவானின் வருகையின் பின்னர்...

வவுனியாவில் பல்கலை மாணவர் மாயம் – பொலிஸார் தீவிர தேடுதல்

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஓருவர் காணாமல்போயுள்ளார். குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால், அவரது பெற்றோர் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இந்நிலையில், அவர்...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு – அகழ்வு நடவடிக்கை இன்று!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன. சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள்...

பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சாரதியை காப்பாற்ற பொலிஸார் மக்கள் மீது தடியடி!!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்....

சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல்!!

நீதிமன்ற தீா்ப்பினை மீறி நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா். இதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகீஸ்காிப்பில் இறங்கினா். நீதிமன்ற தீா்ப்பினை மீறி பொலிஸாா் முன்னிலையில் பிக்குவின் உடலை நல்லடக்கம் செய்வத ற்கு பௌத்த பிக்கள் முயற்சித்ததை தட்டிக் கேட்டதற்காக...

விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்க மரங்களைத் தறிக்கிறது வன வளத் திணைக்களம்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட தேக்கம் மரங்கள் வனவளத் திணைக்களத்தால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பயன் தரும் தேக்கம் மரங்கள் நடப்பட்டன. அவை வனவளத் திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன. நேற்று காலை முதல்...

முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில நேற்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும்...

கிளிநொச்சியில் ATM இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த 6 போ் கைது!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த 6 பேரும் நேற்றைய தினம் முழங்காவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்....
Loading posts...

All posts loaded

No more posts