Ad Widget

முல்லைத்தீவில் தனியார் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் உள்ள தனியாரின் காணியொன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காகச் சென்ற பெண்ணொருவர், அக்காணியில் அமைந்துள்ள மண் கிணற்றில் குறித்த எச்சங்கள் இருப்பதை அவதானித்து அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர்...

புதுக்குடியிருப்பு வியாபாரியின் மனைவிக்கும் தொற்று

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கடந்த வாரம் 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. தம்புள்ளை மொத்த விற்பனை...
Ad Widget

முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் கண்டறியப்பட்ட வைரஸ் வீரியம்மிக்கது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கொரோனா...

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளான இந்திய உறவுகளுக்கும் எமக்கும் பகையுணர்வை ஏற்படுத்தாது எல்லை தாண்டிய மீன்பிடியை தடுத்து நிறுத்தி, எமது வாழ்வாதாரத்துக்கு...

கிளிநொச்சியில் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 25 பேர் கட்டுப்பாடுகளை மீறல் – அனைவரையும் மாங்குளம் வைத்தியசாலைக்கு மாற்றியது சுகாதாரத் துறை

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கோவிட் – 19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 6ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நடமாடுவது தொடர்பில் பொதுச் சுகாதாரப்...

வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைவு!

வடமாகாண தொற்று நோய்க்கான வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண தொற்று நோய் வைத்தியசாலை அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. தற்போது அங்கு, சுமார் 100இற்கு மேற்பட்ட கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற 20 பேருக்கு இறுதியாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர்....

பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்

தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச வேண்டிய இடங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவேண்டும் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்...

மரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்!!

கிளிநொச்சி- திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு, கொழும்பிலிருந்து வருகைதந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது கணவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியது. அதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரின் மனைவிக்கு தொற்று உறுதிப்படுத்தபட்ட...

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக, நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1அங்குலமாக உயர்ந்துள்ளது. 36...

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்றையதினம் (புதன்கிழமை) இரவு பத்து மணிக்கு கணிக்கப்பட்ட நீரின் அளவின் அடிப்படையில் சில குளங்கள் இன்று வான்பாயும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அக்கராயன்குளம் 11 அடி 04 இஞ்ச் “FSL 25′-0”, கரியாலை நாகமடுவான் குளம் 02...

கிளிநொச்சியில் 15 பேருக்கு கொரோனா: 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் (திங்கட்கிழமை), கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை...

வயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே...

கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா- மேலும் ஐவருக்கு தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டது. இதனால், அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு...

கிளிநொச்சியில் கொரோனா சமூகத் தொற்று அபாயம்- மக்களுக்கு எச்சரிக்கை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் எரிபொருள் கடையொன்றினை நடத்திவரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை மூலம்...

கொரோனா அச்சம்: கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்...

விடுதலைப் புலிகளின் முகாமில் IDH வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது!

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை (Infectious Disease Hospital for Northern Province) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன்...

வடக்கில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமானது மாங்குளம் வைத்தியசாலை!!

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக இந்தப் பிரிவு நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளமை குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...

வட மாகாணத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் போக்குவரத்துக்களை மாவட்டங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தி சேவை வழங்க மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பொதுப் போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தார். அவர் கூறுகையில், “யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

கிளிநொச்சி கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள்!

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரின் பயண விபரங்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரிற்கு சொந்தமான, கொழும்பு உணவகத்திலேயே இந்த நபரும் பணியாற்றினார். அந்த உணவகத்தில் பணியாற்றிய மேலும் 3 பேர் புங்குடுதீவு, வேலணை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தனர். கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட நபர், மயூரா ஹோட்டல், இல.46, கதிரேசன்...

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) இரவு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும் மயூரா உணவகத்தில் பணியாற்றும் பணியாளருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது...
Loading posts...

All posts loaded

No more posts