Ad Widget

தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் ஐந்து கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும்...

மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கவும்: விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் தம்மால் யாரையும் ஆதரிக்க முடியாது, மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்க வேண்டுமென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்- திங்கட் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக்...
Ad Widget

வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள்!!

வாக்­கு­ரி­மையின் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மக்களின் இறைமை மக்­க­ளுக்­கு­ரி­யது. அதா­வது இந்த நாடு மக்­க­ளுக்கு சொந்­த­மா­னது. அந்த இறைமை அதி­கா­ரத்தை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது, மக்­களே அதனை அனு­ப­வித்­தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறை­மையை அனுபவிப்ப­தற்­கான ஓர் அணு­கு­மு­றை­யாக வாக்­கு­ரிமை கூறப்­பட்­டுள்­ளது. எனவே வாக்­கு­ரிமை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும் என...

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, ஆட்சியில் அமர்ந்ததும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம்!!!

வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த...

சிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி!

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மேலும் அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும்கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையை ஆரம்பித்த...

மஹிந்த, கோட்டா யாழ் வருகை!!ஆயுதம் தாங்கிய இராணுவம், பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பு!!

பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்சவுக்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் பிரச்சார நடவடிக்கைக்காக இன்று மதியம் மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவும் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளனா். இதற்காக யாழ்.நகாில் ஆயுதங்களுடன் இராணுவத்தினா் வீதிகளில் பாதுகாப்பு கட மையில் ஈடுபட்டிருப்பதுடன், பொலிஸாரும்...

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே அடுத்த முடிவு – மாவை சேனாதிராஜா

பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் அரசியல், சமூக பிரச்சினைகளில் உறுதியாக முன்வைக்கும் தீர்வு என்ன என்பதை அவதானித்து அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தீர்வு என்ன என்பதை கவனித்து பொறுமையாக தமது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும்...

தேர்தலை பகிஸ்கரிப்பதா? அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? ஆனந்தசங்கரி கேள்வி

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. தென் இலங்கை அரசியற் தலைவர்கள் அமைச்சர்கள் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது - ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத்திரும்ப கூறியும்...

கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது!! யாழில் கஜேந்திரகுமார் பரபரப்பு தகவல்!

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. கோட்டாபய சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்தால், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 13 அம்சங்களையும் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். கோட்டா இந்திய சார்பு நிலையெடுத்தால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவோம் என்ற செய்தியை இந்தியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

அங்கஜன் எம்.பியின் 4 அம்சக் கோரிக்கையை கோத்தாபய ஏற்பு!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (ஒக்.20)...

கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் படைத்தளபதிகள் யாழில் களமிறக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போரின்போதும் போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய, யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்களே இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்....

வேட்பாளர்கள் சிலர் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது. அதன்படி, 35 வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். எவ்வாறாயினும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை தொடர்பு கொண்டு வினவிய போது, சில வேட்பாளர்கள் வேறு சில பலன்களை எதிர்ப்பார்த்து இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார். ஜனாதிபதி...

சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல் – எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சிவாஜி

தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி...

அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது – 35 வேட்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது. அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி...

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுப்பு – உடனடியாக தீர்த்து வைப்போம் என்கிறார் அநுர

மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள்...

என்னை ஆதரிக்க கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை – சஜித்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஆதரிக்க எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு ஆதரவைப் பெறுவதற்காக யாருடைய நிபந்தனைகளுக்கும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தன்னை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு 13 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (30) மட்டும் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன்...

‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசநேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று...

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி!!

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று மாலை தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும்...

கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக குறித்த கட்சிகளின் விஞ்ஞாபனத்தின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்போம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (ஞாயிறற்றுக்கிழமை) இடம்பெற்ற தலைமைக் குழுவின் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “இலங்கையின்...
Loading posts...

All posts loaded

No more posts