Ad Widget

71 ஆவது சுதந்திரதினம் தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அமைச்சர் இதனை...

எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார் மஹிந்த!

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொறுப்பேற்கிறார்....
Ad Widget

சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: விசாரணைக்குழு விரைந்தது!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைதிகள் முழந்தாளிடப்பட்டு, பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி...

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த மைத்திரி திட்டம்!

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலை மைத்திரிபால சிறிசேன எதிர்வரும்...

ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அரசியலமைப்பு வரைவுத் திட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபைக்கு அடுத்த வாரமளவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதன்போது அரசியல் அமைப்பு குறித்த பரிந்துரைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை பிரதமர்...

தெஹிவளை பகுதியில் உள்ளவர்களுக்கான பதிவு உடன் நிறுத்தப்படும் – அமைச்சர் மனோ

தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு இனிமேல் அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதை மீறி பொலிஸ்...

தெஹிவளையில் மீண்டும் பொலிஸ் பதிவு!- மக்கள் அவதி

பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், தமிழ் மொழியிலான விண்ணப்பங்களை மக்கள் கோரிய போதிலும் தற்போதைக்கு ஒரு மொழியிலேயே விண்ணப்பங்கள் காணப்படுவதாகவும்...

புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுக்கமான தீர்மானத்திலிருந்து விலகி, நாடாளுமன்றின் பெரும்பான்மைக்கு இணங்க ரணில்...

நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம்...

ஜனாதிபதிக்கு மனநலக் கோளறுப் பரிசோதனைவேண்டும் – பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருக்கு மனநலக் கோளாறு உண்டு என்பதை ஆராயுமாறு நீதித் துறையை நாடப்பட்டுள்ளது. மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி...

என்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி

“என்னை அதிகம் நெருக்கடிக்குள்ளாக்கினால், எனக்கு வேறு வழியில்லை. நாட்டு மக்களிற்கு உரையாற்றிவிட்டு பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு சென்றுவிடுவேன்“இப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார். அவரது ருவிற்றர் பக்கத்தில் நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டார். ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிற்குமிடையில் நேற்று முன்தினம்...

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்க ஜனாதிபதி உத்தரவு

அனைத்து அமைச்சர்களினதும் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று(திங்கட்கிழமை) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர்களின் பொறுப்புக்களை அமைச்சின் செயலாளர்களிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த...

“உடன் பதவி வில­கி­வி­டுங்­கள்” மகிந்­த­வுக்கு ரணில் அறி­வுரை!!

நீதி­மன்­றத் தீர்ப்­புக்கு மதிப்­ப­ளித்து மதிப்­பான முறை­யில் பத­வி­களை உடன் துறந்து வெளி­யே­று­மாறு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும், அவ­ரது சகாக்­க­ளுக்­கும் அவ­சர ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. காலி­யில் நேற்றுமாலை நடை­பெற்ற ‘நீதிக்­கான மக்­கள் குரல்’ பேர­ணி­யில் கலந்­து­கொண்ட அவர், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய தீர்­டப்­புத் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­தார். அவர் மேலும்...

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே நிரந்தரத் தீர்வு: சுமந்திரன்!

அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை அடைய முடியும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு நாட்டினுடைய அரசியலமைப்பு...

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நிறைவேற்றம்!

பிரதமர் அலுவலகத்திற்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரச நிதியின் மூலம் செலவீனங்களை மேற்கொள்ள பிரதம செயலாளருக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டு குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக...

புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டுவைத்தார் பிரதமர் மஹிந்த!

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றையதினம் 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 1 ரூபாய்க்கான புதிய நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. நாடாளுமன்றில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நாணயக் குற்றிகளை வெளியிட்டார். பார்வைத் திறன் குறைப்பாடு உடையவர்களுக்கான விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நாணயக் குற்றிகள்,...

பிரபாகரனுக்கு வழங்கியதுபோல் ஜனாதிபதிக்கும் மஹிந்த பணம் வழங்கியுள்ளார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கியிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார...

மக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது – செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து...

சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்!

நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம்...

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த...
Loading posts...

All posts loaded

No more posts