Ad Widget

கண்டி பதற்றத்திற்கு காரணமான பிரதான சந்தேகநபர் கைது!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பிரதான சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் மேலும் ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றயதினம் (வியாழக்கிழமை) காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அமித் ஜீவன் வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்...

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும்....
Ad Widget

அம்பாறை கொத்து ரொட்டியில் காணப்பட்ட பொருள் குறித்து தகவல்!

அம்பாறையிலுள்ள உணவகமொன்றில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒருவகை மருந்து கலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொத்து ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மா திரண்டு கட்டியாக காணப்பட்டமையே, தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அம்பாறையில் உள்ள உணவகமொன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து அண்மைய நாட்களாக...

சங்கா, சனத், மஹல வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய மஹல ஜயவர்தன ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் மூலம் இருவரும் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர். இன அல்லது மதத்தின் அடிப்படையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட இடமளிக்கப்பட...

பாதுகாப்பை கருத்திற்கொண்டே சமூக வலைத்தளங்கள் முடக்கம்: ஒஸ்டின் பெர்னாண்டோ

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்ற (புதன்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக...

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை : பற்றியயெரிந்த வாணிப நிலையங்கள்

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை...

திகனவில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு : கைது செய்யப்பட்ட 24 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பார்களா? : வியாழேந்திரன்

இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார். ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு இனம் சந்தோசப்படும் நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர்...

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!!

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை 10 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன வன்முறைகளைத் தடுக்கவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வௌயிடப்படும் என்றும் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அமைச்சர் இதனை தெரிவித்தார். 10 நாள்களுக்கு அவசரகாலச்...

தெல்தெனிய- பல்லேகலயில் பதற்றம்: மீண்டும் ஊரடங்குச் சட்டம்

கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று...

ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்படவுள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி என திகதியிடப்பட்டு இந்த சுற்று நிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில்...

ஊரடங்குச் சட்டம் நீக்கம்: கண்டியில் தொடர்ந்தும் STF பாதுகாப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், குழப்பம் ஏற்பட்ட தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் தொடர்ந்தும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினமும், நேற்றும் தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த...

கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இந்த ஊடரங்கு போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்... முஸ்லிம்...

15 வயதையடைந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தால் 15 வயதை அடைந்தவர்களும் தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக அத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், “15 வயதை பூர்த்தியடைந்தவர்களும் இனிவரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் செயன்முறையில் வயதெல்லை...

பெண் பிரதிநிதிகளின் பெயர் பெயர்பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் பெண் பிரதிநிதிகளின் பெயர் அடங்கிய தமது பெயர்பட்டியலை, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார். பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைக்...

விடுதலைப்புலிகளின் குண்டே வெடித்தது! : இராணுவ வீரரின் அதிர்ச்சித் தகவல்

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஓய்வூதியம் மற்றும் காப்புறுதி உட்பட்ட மேலதிக கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுத்த திட்டத்தில் விளைவே பேரூந்து குண்டுவெடிப்பிற்கு காரணம் என கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அண்மையில் தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸாருக்கு...

தென்னிலங்கையை அதிரவைத்த குண்டு வெடிப்பு!: இராணுவ வீரர் கைது

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குறித்த பகுதியில் பேரூந்து ஒன்றில் கைக்குண்டு ஒன்று வெடித்தமை தென்னிலங்கையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேரூந்தில் பயணித்த இராணுவ வீரர்...

இன்று நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி

வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான...

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி சபைகளை நிறுவும் தினம் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்கனவே எதிர்வரும் 6ஆம் திகதி நிறுவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...

அரசாங்கத்தை எச்சரிக்கிறார் முன்னாள் இராணுவ அதிகாரி!!

இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள தியத்தலாவ- கஹகொல்லவில் அண்மையில் படையினர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த பேருந்துக் குண்டு வெடிப்புச் சம்பவத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடட அவர், “ஒரு கைக்குண்டு வெடிப்பின் மூலம் நிச்சயமாக...
Loading posts...

All posts loaded

No more posts