Ad Widget

தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரல்

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவுக்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எமது கலை இலக்கியங்களில் சமகால நிலைமையினை மதிப்பிடுவதும் எதிர்காலத்துக்கான செயல்நெறியினை இனங்காண்பதையும் நோக்காகக்கொண்டு ஆய்வரங்கு இடம்பெறவுள்ளது. 'ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் உலகமயமாதல் உள்ளூர் மயமாதலும்' என்ற கருப்பொருளிலே ஆய்வுக்...

இலங்கையில் உற்பத்தியாகும் கொக்கோ-கோலாவின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்!

இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ - கோலா (பெரரேஜஸ்) நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்தார். கொக்கோ - கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய...
Ad Widget

நல்லூர் ஆலயத்திற்கு செல்வோருக்கு பொலிஸாரின் அறிவுரை

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படின் அறிவிக்கவும்

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...

வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் இன்றும் பெறலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை...

அனைவரும் வாக்களியுங்கள்

வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை...

வாக்களிப்பை சீர்குலைக்க முயன்றால் துப்பாக்கிச் சூடு! – பொலிசாருக்கு அதிகாரம்

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...

தேவையற்ற அசம்பாவிதங்களை தவிர்க்க அதிகாலையிலேயே வாக்களியுங்கள்

நாளை நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் அனைத்து வாக்­கா­ளர்­களும் கட்­டா­ய­மாக தமது வாக்­கு­ரி­மையை பயன்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்தும் 'கபே' அமைப்பு தேவை­யற்ற அசம்­பா­வி­தங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கு அதி­கா­லை­யி­லேயே வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­க­ளிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வாக்­கா­ளர்கள் தாம் விரும்பும் கட்­சிக்கு வாக்­க­ளிக்கும் அதே­வேளை அக்­கட்­சியின் ஊடாகப் போட்­டி­யிடும் ஊழ­லற்ற சிறந்த வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது விருப்பு வாக்­கு­களை...

காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற 17 வயதுடைய எஸ்.சுமங்கலா என்ற சிறுமியே இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன தமது மகளை மீட்டுத்தருமாறு கோரி சிறுமியின் பெற்றோர், பளை...

தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம்!

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது. அவ்...

யாழ்ப்பாணத்தில் 13 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றம்

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏற்பாடாகியிருந்த வாக்களிப்பு நிலையங்களில் 13 நிலையங்களின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் தெரிவித்தார். புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையம், புங்குடுதீவு சேர் துரைச்சாமி வித்தியாலயத்துக்கும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தில் இருந்த இரண்டு...

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன்...

உ/த மாணவர்களுக்கு ஒத்துழைக்கவும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 'மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப்...

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3 மற்றும் 5ம், 6ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தநிலையில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11ம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இம்முறை தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி 3ம் திகதி...

போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைதுசெய்யவும் – நீதிபதி

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை, பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார். கஞ்சா வழக்கு தொடர்பிலான விசாரணை வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றபோதே நீதிபதி இவ்விடயத்தை தெளிவுபடுத்தினார். 'போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும்...

சிகையலங்காரம் செய்துகொண்டால் கைது!!

கட்சி சின்னத்துடன் வேட்பாளரின் விருப்பு இலக்கத்தையும் சேர்த்து சிகையலங்காரம் செய்துகொள்வது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும் என்று தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம், தலைமுடியை அவ்வாறு அலங்காரம் செய்துகொண்டிருப்பவர்கள் கைதுசெய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும், அவ்வாறு சிகையலங்காரம் செய்துகொண்டு சுற்றித்திரிபவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தெரிவு செய்த கட்சியின் பெயர் மற்றும் இலக்கத்துக்கு முன்பாக அல்லது சுயேற்சை குழுவின் இலக்கத்தின் முன்பாக ("X") அடையாளமிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அதற்கு பிறகு ஏற்றுக்கொண்ட கட்சியின் அல்லது சுயாதீன குழுவின் வேட்பாளர்கள் மூன்று பேரின் இலக்கங்களுடைய சதுரத்தில் ("X")...

பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை நிலையத்துக்கு செல்ல முன்னர் தனது தகவல்கள் சரியாக உள்ளனவா என மாணவர்கள் ஆராய்ந்து பார்த்தல்...

வல்வை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபொரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வல்வெட்டிதுறை நகரத்தில் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 02.08.2015 மாலை 4.30 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்கரையிலுள்ள ரேவடி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்த உள்ளனர்.
Loading posts...

All posts loaded

No more posts