Ad Widget

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பற்ற இடங்களான ஆறு, கடல், குளங்களில் பொதுமக்கள் குளிக்க...

அவதானம்..! 6000 பாலியல் தொழிலாளர்கள் மசாஜ் நிலையங்களில்

கொழும்பு நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையங்களில் 4500 முதல் 6000 பேர் வரையிலான பாலியல் தொழில் சேவையில் ஈடுபடுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையோருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந் நிலையங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டில் எச்.ஐ.வி. தொற்று வெகுவாக பரவி வருகின்றடை...
Ad Widget

கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய...

யாழ். பொலிஸாரின் வேண்டுகோள்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடந்த...

திணைக்களம் இடம்மாறுகிறது

கொழும்பு-10 இல் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு, அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதல் மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று வியாழக்கிழமை(17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த திணைக்களத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கேள்வியெழுப்பியபோதே அமைச்சர் நாவின்ன இவ்விடயத்தைத் தெரிவித்தார். குடிவரவு...

செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஜோடிகள் சந்திப்பதற்கு தடை

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...

திட்டமிட்ட நேர அட்டவணையின் படி நாளை பரீட்சைகள் இடம்பெறும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்கு அமைய அதனைப் பிற்போட...

பாடசாலை சீருடைத் துணிகள் கையிருப்பில் இல்லையாம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம்...

பெப்ரவரி வரை மழை தொடரும் என்கிறது ஐ.நா.!

தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ...

உயர்தரம் படித்த அனைவரும் இனி வைத்தியராவதற்கு படிக்கலாம்!

உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...

இனி ரயில்களில் டிக்கட் இன்றி பயணித்தால்…?

ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு

அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து குறித்த பாடநூல்களை பெறமுடியும். http://www.edupub.gov.lk/BooksDownload.php

விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!

சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...

வளிமண்டலவியல் திணைக்களம் திடீர் எச்சரிக்கை

வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பிற்பகலில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒருசில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்...

யாழில் அதிகரிக்கும் தொற்று நோய்கள் : மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

யாழில் டெங்கு காய்ச்சல் , வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் உண்ணிக்காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி, இவை தொடர்பில் சுகாதார பிரிவினரால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வருடத்தில் இதுவரை இந்நான்கு தொற்று நோய்களினால் ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்ச...

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட செல்வோரின் கவனத்திற்கு

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவோருக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அமர்ந்திருப்பதற்கென ஆசனங்களும் கடந்த வாரம் முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கென வருவோர்கள் பாஸ் நடைமுறையின் படியே கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் பார்வையிட வருவோர் உள்ளே அனுமதிக்கப்படும் வரையில் வைத்தியசாலைக்கு...

பலத்த காற்றுடன் மழை!

இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும்...

ரயில் கடவையில் அவசரப்படவேண்டாம்

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக்...

விலைக்குறைப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையூடாக கண்காணிப்பு

இம்முறை வரவுசெலவில் அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலைக்குறைப்பை கண்காணிக்க நுகர்வோர் அதிகாரசபையூடாக எமது அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா ம​கேஸ்வரன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று (26) பாராளுமன்றில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரவிக்கையைில், மக்களுக்கு...

2 மணிக்கு பின்னர் சகல மக்களையும் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts