Ad Widget

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை சட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச அலுவலகங்களுக்கு மூன்று தினங்களுக்கு தாமதமாக வரும் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த விடுமுறையிலிருந்து அரை நாள் விடுமுறை குறைக்கப்பட வேண்டும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அரச நிர்வாகச் சுற்றறிக்கையின்...

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளில் யாழ். மேல் நீதிமன்றம் தலையிடாது! – நீதிபதி இளஞ்செழியன்

யாழ். குடாநாட்டின் நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் போக்குவரத்து குற்றம் சம்பந்தமான தீர்ப்புக்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அநாவசியமாகத் தலையிடாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் தீர்ப்பு தொடர்பாக யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு...
Ad Widget

யாழில் மக்கள் கருத்தறியும் அமர்வு

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் அமர்வு இன்று (15) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக யாழ் மாவட்டத்திற்கான...

யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’

வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம்...

உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! – நீதிபதி இளஞ்செழியன்

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...

27, 28, 29ஆம் திகதிகளில் யாழில் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வு!

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...

இரு நாள் டெங்கு ஒழிப்புத் திட்டம்!

மேல் மாகாணம் உட்பட டெங்கு பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் இரு நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் (11) ஆரம்பமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, குருணாகல, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை டெங்கு நோயாளர்களின்...

யாழில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15...

சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் !!

யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்படவேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்றவேண்டும்....

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு கடும் நடவடிக்கை! – அரசாங்க அதிபர்

யாழ்.குடாநாட்டில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் மகுட வாசகத்தை கருப்பொருளாகக் கொண்டு விளங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது அனைத்துலக சைவமாநாடே எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இந்து நாகரீகத்துறையினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மாநாடு 12...

இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை

யாழ் -கொழும்பு புகையிரத சேவை ........................... 1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி ........................... புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி 2. யாழ்தேவி புகையிரதம் ................. புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி 3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை .......................... புறப்படல் பிற்பகல்...

ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக...

உடலுறவின் மூலமும் சைகா பரவும்!

சர்வதேச நாடுகளை அச்சுறுத்திவரும் சைகா வைரஸ் பாதிப்பிற்கு, அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஆய்வு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைகா வைரஸ், கொசு மூலமாகவே பரவிவருகிறது என்று தெரியவந்த நிலையில், உடலுறவின் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவதாக, டெக்சாஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாடசாலை சீருடை வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிப்பு!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம்...

போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் கவனமாயிருக்கவும்

அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றதாக கூறி வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள், குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தல் மற்றும் தொடர்பை ஏற்படுத்தல் என்பவற்றை தவிர்க்குமாறு தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலி வெளிநாட்டு அழைப்புகள் தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அந்த...

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை பெப் 1 – 29 வரை!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk...

அரிசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

பெண் தொடர்பில் தகவல் தாருங்கள்

சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த தங்கவேல் செல்வராணி வீரைய்யா என்ற இப்பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். அப்பெண்ணிடம் கடவுச்சீட்டோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களோ இல்லை. ஆகையால் அப்பெண்தொடர்பில் தகவல் தெரிந்தோர். 011 - 2259341, 011 - 2259954 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு...
Loading posts...

All posts loaded

No more posts