Ad Widget

தமிழர்களின் இருப்பை தக்கவைக்கும் பொறுப்பு இளைஞர்களுக்கே உண்டு: சுரேஸ்

எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக...

ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!

ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஜோசப் பரராசிங்கத்தின் 11வது நினைவு தினம், நேற்று மட்டக்களப்பில், நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்...
Ad Widget

ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்

“ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜட் உரையில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது எமதுமக்களை ஒரு பலமான சமூகமாக வாழச் செய்ய வேண்டுமாக இருந்தால்அபிவிருத்தி...

வடக்கு மாகாணசபை 2017ஆம் ஆண்டுக்கான பாதீடு

22.12.2016 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாணசபையின் 72ஆவது அமர்வில்விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை. கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ...

பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி: வடமாகண முதலமைச்சர் கெளரவ‌ சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை

குருர் ப்ரம்மா……………. எனதினிய இணைத்தலைவர் டாக்டர் இலக்ஷ்மன் அவர்களே, சமயப் பெரியார்களே, எம்மோடு இணைந்திருக்கும் உறுப்பின சகோதர சகோதரிகளே, எல்லோருக்கும் வணக்கம். பல பிரச்சனைகள் மத்தியிலும் எமது பேரவையின் ஓராண்டுப் பூர்த்திப் பெருங்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று கொழும்பில் இருப்பதாகவே இருந்தது. சென்றைய வார வடமாகாண சபைக் கூட்டத்தை இன்றைய வாரம்...

தமிழ் மக்கள் பேரவையின் முதலாம் ஆண்டு பூர்த்தி! பேரவைக்கூட்டத்தில் இணைத்தலைவர் Dr.லக்ஸ்மன் ஆற்றிய உரை

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றையநாளில் (19-12-2016) , மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எதுவித தனிப்பட்ட , சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காக கொண்டு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்கவேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2915அன்று முதன்முறையாக...

மண்ணுக்காகப் போராடிய நாங்களே அந்த மண்ணைக் கொலை செய்து வருகிறோம் : பொ.ஐங்கரநேசன்

மூன்று தசாப்த காலப்போர் மண்ணுக்காகவே நடைபெற்றது. 'இந்த மண் எங்களின் சொந்தமண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்' என்று மண் மீட்புக்காகவே நாம் போராடினோம். ஆனால், மண்ணுக்காகப் போராடிய நாங்களே இன்று அந்த மண்ணை அளவுக்கு அதிகமான விவசாய இரசாயனங்களால் கொலை செய்து வருகிறோம் என்று வடக்கு விவசாய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய...

நாட்டில் தொழில் பற்றாக்குறை இல்லை; தகுதியானவர்கள் பற்றாக்குறை

நாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார். ஹிக்கடுவ,...

புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள்

புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள். கவிஞர் புதுவை இரத்தினதுரையைப் போன்றே கவிஞர் இன்குலாபும் விடுதலைப் புலிகளை ஆழமாக நேசித்தவர். விடுதலைப்புலிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல், நிறை குறைகளோடு ஏற்றுக் கொண்டவர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்....

அரசியலில் நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் : பொ.ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகளது காலத்தில் தமிழ்மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது. இன்று, அத்தகைய பலம் வாய்ந்த, தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தலைமை இல்லாத நிலையில் அரசியல் ரீதியாக நாங்கள் அங்கவீனர்களாக உள்ளோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கருவி அமைப்பால் கடந்த சனிக்கிழமை (03.12.2016) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் சரஸ்வதி...

வடக்கில் வர்த்தகப் பொருளாதாரம் வீழ்ச்சிகாண ஆரம்பித்துவிட்டது

2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், 02.12.2016 அன்று கைத்தொழில் மற்றும் வாணிபத் துறை அமைச்சு, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு போன்ற அமைச்சுக்கள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்கள் சார்பாக கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய உரையின் முழுவடிவம்...

தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்...

வடக்கு கிழக்கில் தற்போதும் படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.- மாவை எம்.பி

கடந்த 18ம் திகதி மாவை எம் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம். 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது உரையில் கூறியிருந்தார். சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் அந்த சலுகைகளில் எவ்வாறு நடைமுறை ரீதியில் வழங்க முடியும் என்ற கேள்வி எமக்குள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகள்...

வரவு செலவு திட்டத்தில் வடக்கிற்கான ஒதுக்கீடுகள் வெறும் கண்துடைப்பே: மாவை

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின்படி வடமாகாணத்திற்கான பாரிய அபிவிருத்தி என்பது வெறும் கண்துடைப்பு மாத்திரமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பிரதமர்...

வடக்கில் மாணவர்களின் கல்வியைக் குழப்ப சதிகாரக்கும்பல் முயற்சி; சீ.வி. விக்னேஸ்வரன்

வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்காக பொலிஸாரும் மக்கள் குழுக்களும் முயற்சி செய்கின்ற போதும், மாணவர்களில் சிலரும் வேறு சதிகாரக் கும்பல்களும் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் –...

பிளவுபடாத நாட்டில் அனைத்துமக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்!

பிளவுபடாத நாட்டில் அனைத்துமக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தையும் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் 5ம் நாள் விவாதாம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. நேற்றய பாராளுமன்ற விவாதத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பித்து...

ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசாங்கம் தப்பிக்க முடியாது: சுமந்திரன்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளதால் அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காமல் போகுமென சிலர் அஞ்சுவதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட 47 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்...

விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்கு அரசாங்கம் சதி: ஐங்கரநேசன்

தமிழர்களின் விடுதலை உணர்வை இல்லாமல் செய்வதோடு, விடுதலை தொடர்பான எவ்வித கோரிக்கையும் தமிழர்களிடம் இருந்து ஒருமித்து வரக்கூடாது என்பதில் அரசாங்கம் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றதென, வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர்...

இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக் கூடாது ; விஜயகலா

நல்லாட்சி அரசாங்கம் ஓரிரு இனவாதிகளுக்காக சிறுபான்மை இனத்தவரை வீதியில் இறக்கக்கூடாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து நல்லாட்சியை முடக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் எதிர்கட்சியினர் தமது தனிப்பட்ட தேவைக்காக மக்களை வீதியில் இறக்குவதற்கு முஸ்தீபுகளை மேற்கொள்வதாகவும், இவற்றுக்கு...

மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...
Loading posts...

All posts loaded

No more posts