Ad Widget

வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால் சர்வதேசத்திடம் அடிபணிந்துள்ளோம்: சம்பந்தன்

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால், சர்வதேசத்திற்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் ஆரம்பமான ‘யொவுன்புர’ இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த...

எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாரில்லை: ஜனாதிபதி

தாய்நாட்டுக்காக போராடிய எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி...
Ad Widget

ஒற்றுமையின் தேவைக்காக மௌனமாக இருக்கின்றோம்; உரிய நேரத்தில் பதிலளிப்போம்

சாவகச்சேரி சங்கத்தானையில் நடைபெற்ற மண்டப திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ. சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து இலங்கை தமிழரசுக் கட்சி வெளியேறவேண்டும் என கூறப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெரிவிப்பது கொப்பில் இருந்துகொண்டு அடிமரத்தை...

புதிய அரசியல் யாப்பிற்கு சிறுபான்மையினரது பங்களிப்பு மிகவும் அவசியம்: சம்பந்தன்

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் அனைத்து மக்களும் கௌரவத்துடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்றும் அதற்கு மலையகத்தை சார்ந்த சிறுபான்மை...

வடக்கு முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு சலுகைகள்

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு இரட்டிப்பு சலுகைகளும் இதர வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும் இதற்கான அறிவித்தலை பிரதமர் வெகுவிரைவில் விடுப்பார் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, யாழில் வைத்து தெரிவித்துள்ளார். தமது யாழ்ப்பாண அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அமைச்சர் தமிழ் மக்களின் விருந்தோம்பல் பண்புகளையும் தான் புலிகளின் அரசியற்...

நல்லாட்சி அரசும் பட்டதாரிகளைக் கண்டுகொள்ளாமை வேதனையளிக்கின்றது

நாட்டில் உள்ள அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமித்தால், பட்டதாரிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படாது என்று சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பட்டம் பெற்று வெளியேறிய பெண்கள் உட்பட பட்டதாரிகள் வீதியில் நிற்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நில மெஹெவர...

சில ஹோட்டல்களில் உண்பவர்கள் இன்னும் உயிர்வாழ்வது ஆச்சரியம்-ஜனாதிபதி

நாட்டிலுள்ள சில ஹோட்டல்களுக்கு சென்று சமையல் செய்வதனைப் பார்த்தால், அந்த ஹோட்டலில் உணவு உண்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இவ்வாறான ஹோட்டல்களில்சமைக்கும் உணவுகளை உண்பவர்கள் இதுவரையில் உயிர்வாழ்வதும் பெரிய ஆச்சரியமான ஒன்று எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட...

தடம் மாறும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டும்

தடம் மாறிச் செல்லும் இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆசிரியர்களினதும் கடமையென வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் வடமாகாணத்தில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வி துறையையும் வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது....

சமுகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகளிகள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச...

காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றி உரையின் முழு வடிவம்

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, நான் பின்வரும் ஒத்திவைப்புப் பிரேரணயை சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பாக உரையாற்றுகிறேன்: “2009 அம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, தனிப்பட்ட பிரசைகளுக்குச் சொந்தமான பொருந்தொகைக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்தமையினால்: இக்காணிகளுள் பெரும்பாலானவை பாதுகாப்புக் காரணங்களுக்காக குடிமக்களிடமிருந்து இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டன. உதாரணமாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு...

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்!

எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் தெற்காசிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே...

தமிழர்களின் பண்பாடும் பொருளாதாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன: பத்மினி

தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். முன்னைய தலைவர்கள் இலட்சியத்துடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தியதாகவும், மக்களும் அவர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் பத்மினி...

என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம்: யாழில் ஜனாதிபதி

என்னை எந்த நேரத்திலும் சந்திக்கலாம், எனது வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்து உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது, இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017ம் ஆண்டு...

சிறைச்சாலைகளை மூடி பாடசாலைகளைத் திறக்க வேண்டும்

சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளைத் திறக்கும் ஒரு நாடு உருவாகவேண்டுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் வைத்தியசாலைகள் குறைந்து சுகதேகியான மக்கள் அதிகமாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உலகில் மனித சமூகத்தின் பயணத்திற்குத் தடையாகவுள்ள முக்கிய அம்சம் நல்ல...

காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள்: சுரேஷ்

இராணுவ வசம் உள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது விட்டால் வேறு வழி இன்றி மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தள்ளப்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்றய தினம் மாலை 4.30 மணியளவில் கோண்டாவில் சேவலங்கா நிறுவன...

தமது உரிமைகளை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்துவதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்

இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய...

எழுகதமிழ் நிகழ்வில் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை

தென்தமிழீழ மண்ணில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் அவர்கள் ஆற்றிய உரை எமது அரசியல் வேணவாவை வெளிப்படுத்த இங்கு பல்லாயிரமாக திரண்டிருக்கும் எனது அன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய மக்களே! இங்கு வருகைதந்திருக்கும் பெருமதிப்பிற்குரிய மதப் பெரியார்களே! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் மாண்புமிகு விக்னேஸ்வரன் ஐயா...

எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்காகவே எழுக தமிழ்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றி உரையின் முழு வடிவம்.. ´எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை நிறுத்தாதீர்கள்!´ என்றார் சுவாமி விவேகாநந்தர். கடோபநிஷதத்தில் வரும் சொற்களை உலகறியச் செய்தார் சுவாமி விவேகானந்தர். இன்று மட்டக்களப்பு விவேகானந்தா விளையாட்டுக் கழகத் திடலில் பெரும்...

மகிந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை மைத்திரி அரசாங்கம் சட்டத்தால் பறிக்கிறது

தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பறிப்பதில் மகிந்த ராஜபக்சா அவர்களின் தலைமையில் இருந்த கடந்த அரசாங்கத்துக்கும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை நடப்பு அரசாங்கம் சட்டத்தால் பறிக்க முயல்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இரணைமடு பாரிய...
Loading posts...

All posts loaded

No more posts