Ad Widget

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா். புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக இலங்கையில் இருந்து அமைச்சா்களும் தூதுவா்களும் ஏற்கெனவே புதுவைக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்...

முல்லைத்தீவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில் கைது!!

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடை மகள் கஸ்தூரி. இறுதிகட்ட போரின் போது இலங்கையில் இருந்து...
Ad Widget

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அங்கு...

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு!!

தமிழக சட்ட சபை தேர்தலில் 125 இடங்களில் தனித்து வெற்றி பெற்ற திமுக தனிப்பெரும்பானமையுடன் இன்று(07) ஆட்சி அமைக்கிறது. சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா...

புத்தூர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரே தமிழகத்திற்கு தப்பிச் சென்றார்!

தமிழகத்தில் நேற்றையதினம் கைதான இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கண்ணாடிஇழை படகுமூலம் சென்ற இரண்டு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிரதாப், நாகேஸ் என தம்மை கூறியதுடன், மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். மன்னாரிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக தப்பி சென்றிருந்தனர். அவர்களின்...

கொவிட் தடுப்பூசிகளை வழங்க இலங்கையின் அனுமதிக்காக காத்திருக்கும் இந்தியா

தமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான ஒங்குமுறை அனுமதிகளை இலங்கை உறுதிப்படுத்தும் வரையில் காத்திருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்காக அண்டை நாடுகளில் இருந்து பல கோரிக்கைகளை பெற்றுள்ளதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இக் கோரிக்கையைத் தொடர்ந்து, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர்...

ஆந்திரப் பிரதேசத்தில் பரவும் மர்ம நோய்; 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோயால் 300-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல், குழந்தைகள், பெண்கள் உள்பட, 345 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஞாயிறு மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சுமார்...

பிரபாகரனுடன் இருக்கும் படத்தை பகிர்ந்த இந்திய மத்திய அமைச்சர்!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்று பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்...

இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கையர்களிற்கு வைரஸ்!!

இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் இவர்களிற்பு வைரஸ் உள்ளமையை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இரு...

கொரோனா தொற்று மே 29ல் முடிவுக்கு வரும்!! : ஜோதிட சிறுவன் கணிப்பு!!

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும்...

கோரோனா வைரஸ்!!! சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு

இந்தியாவில் கோவிட்-19 (கோரோனா) வைரஸ் வேகமாக பரவி வருவதால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 3,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏற்கெனவே, கேரளாவில்...

புதுச்சேரி- யாழ் கப்பல் சேவை விரைவில்: இந்தியா அறிவிப்பு!

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருதை தந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள், இரசாயனத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை கோயில் இணை ஆணையா் ந. நடராஜன் தலைமையிலான...

கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்!!

தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும்...

பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில்...

“அனைத்து மக்களுக்கு சமனான ஆட்சியை வழங்க வேண்டியது அவரது கடமை” கோட்டாபய தொடர்பில் கமல்ஹாசன் கருத்து!!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்ற ரீதியில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியினை வழங்க வேண்டியது நல்ல தலைவரின் கடமை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஒரிசா மாநிலத்தில் வழங்கப்பட்ட கௌரவ கலாநிதி பட்டத்தினை ஏற்றுக்கொண்டு தமிழகம் திரும்பிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். இதன்போது இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய...

மருத்துவமனையில் இருந்து கல்லறை: சுஜித்தின் உடல் அடக்கம்

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 82 மணிநேர மீட்புப்பணிக்கு பின், குழந்தை சுஜித்தின் உடல் செவ்வாய்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது...

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி – விரிவான தகவல்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25-ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது....

ஆயுள் தண்டனைக் கைதியான சரவணபவன் உரிமையாளர் மரணம்!

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய முற்பட்டார் ராஜகோபால். இந்நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார்...

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் மாவை சேனாதிராஜா!!!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சந்தித்தார். இதுபற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதி மறைவுக்கு பின், தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கையில் உள்ள, தமிழர் தலைவர்கள் யாரும், ஸ்டாலினை சந்தித்து பேசவில்லை. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி...

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு !

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts