Ad Widget

மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்பதால் இரு பெண்கள் மீது பாலியல் வல்லுறவு!!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், தானும், தன்னுடைய 14 வயது உறவுக்கார சிறுமியும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், தன்னுடைய இரு உறவினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்கள் என குற்றஞ்சாட்டி தாக்குதல்தாரர்கள் இந்த வன்முறையை தொடுத்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மேவத்தில், இருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்த குற்றச்சாட்டை கூறியுள்ள...

காவிரிப் பிரச்சனை, தமிழகத்துக்குச் சொந்தமான 60பேருந்துகள் தீக்கிரை, துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

காவிரிப் பிரச்சனை காரணமாக கர்நாடக மாநிலத் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து அங்கே வன்முறைகள் உருவாகியதையடுத்து, காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், போராட்டக் காரர்கள் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டதால்...
Ad Widget

குருநகர் யுவதி தீக்குளிப்பு!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் - குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன்...

பலாத்கார முயற்சி : தீக்குளித்த இலங்கை அகதி பலி

இந்தியாவின் வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜெகதீஸ்வரன். இவரது வயது 45.இவர் மனைவி துஷாத்தினி வயது 26. கடந்த ஆகஸ்ட், 8ம் திகதி துஷாந்தினி வீட்டில் இருந்தார். அப்போது, அதே முகாமில் வசிக்கும் அவரது மைத்துனர் தயாபரன்,...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த தீர்மானம்

போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி வௌிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த விழக்கிழமை குறித்த நபர் போலி கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த...

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 103 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (01) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமை பெறுவது குறித்து நேற்று ராமேசுவரத்தில் மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில்...

நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் போராட்டம்

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறி 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரின் 33 வீட்டுமனைப் பட்டா இரத்தானது. இதனையடுத்து வீட்டுமனைப் பட்டாவை மீண்டும் வழங்கக்கோரி தாயகம் திரும்பியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி பலி

இந்தியாவின் காலாப்பட்டில் கட்டுமான பணியின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி உயிரிழந்துள்ளார். புதுவை காலாப்பட்டு அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சங்கர் (வயது 51), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயசீலி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலாப்பட்டில் ஒரு கட்டிடம் கட்டும் பணியில் சங்கர் மற்றும் தொழிலாளர்கள்...

இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது

தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இரண்டு இலங்கை பெண்கள் நேற்று வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 832 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இவர்கள் விமான நிலைய சுங்க புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தமது பயணப்...

கனமழை காரணமாக இந்தியாவில் பேரழிவு: இதுவரை 300 பேர் உயிரிழப்பு

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 300 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வீடுகள், விவசாய நிலங்கள், பாதைகள் என பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்தும் உள்ளன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் பெய்த...

பேஸ்புக் பதிவால் பரபரப்பு

இந்தியாவில்,புனேயில் வங்கி ஊழியரொருவர் வெளியிட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சுவாதி சிதால்கர் என்ற குறித்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது கதிரைக்கு பின்னால், கீழே தரையில் அவரது மகன் படுத்து பால் போத்தலில் வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். குறித்த...

15 இலங்கை தமிழ் அகதி மாணவர்களை பாதியில் நீக்கிய தனியார் பள்ளி

இலங்கையில் இருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் வாழும் 15 தமிழ் மாணவர்கள் அச்சிறுபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்று கூறி படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பள்ளியில் இருந்து திடீரென்று நீக்கியுள்ளது தனியார் பள்ளி நிர்வாகம். தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஒரு வாடகை வீட்டில்...

போராளிகள் விச ஊசி விவகாரம் சென்னையில் மாபெரும் கருத்தரங்கு

‘அறிவாயுதம்’ குழுவினரால் வரும் ஓகஸ்ட் 28 ம் நாள் சென்னை உமாபதி அரங்கில் போராளிகளின் மர்ம மரணம் தொடர்பில் மாபெரும் கரத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்களால் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் தலைவர்கள், மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள், இனஅழிப்பு வல்லுனர்கள் என்று பல்வேறுபட்ட தரப்பினரையும்...

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில்…

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2–ந் திகதி வாரணாசியில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் முடிவின் போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை...

‘செல்ஃபி’ புகைப்படம் எடுக்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் மீட்பு

செல்ஃபி' புகைப்படம் எடுக்க முயன்று கிணற்றில் விழுந்த சிறுவனின் உடல் இரண்டு நாட்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த அந்த 17 வயது சிறுவனின் பெயர் ஹரிஷ் என்றும், சில நண்பர்களுடன் 'செல்ஃபி' புகைப்படம் எடுக்க முயன்ற போது இந்த விபத்து நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதியதன்று (திங்கள்கிழமை)...

சட்டசபையில் இருந்து ஸ்டாலினை தூக்கி வெளியேற்றினர்

நமக்கு நாமே பயணம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெளியிட்ட விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்த சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சட்டசபையில் நேற்று திருப்பூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ஸ்டாலினின் “நமக்கு நாமே”...

இலங்கை ஊடாக ஐஎஸ் அமைப்பில் இளைஞர்களைச் சேர்த்த முகவர் கைது!

கேரளாவிலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இலங்கையினூடாக இளைஞர், யுவதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பான விசாரணைகளை பொறுப்பெடுத்துள்ள மும்பைக் காவல்துறையினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவில் இருந்து 21 பேர் இலங்கையின் ஊடாக சிரியாவின் தீவிரவாதிகளுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவர்கள்...

ஜப்பான் யுவதிக்கு மயக்கமருந்து கொடுத்து இலங்கையர் செய்த காரியம்

சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியாவுக்கு சென்ற, ஜப்பானியப் பெண்ணுக்கு, இலங்கையர் ஒருவர் மயக்க மருந்தை கொடுத்து, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. கடந்த 10ம் திகதி டெல்லிக்கு சென்ற அந்த ஜப்பானியப் பிரஜையிடம், ரயில் நிலையத்துக்கு வௌியே வைத்து, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டி (guide) என அடையாளப்படுத்தியுள்ளார். பின்னர், தான் ஒரு இலங்கையர் எனவும்,...

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்!!

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மனிதாமிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக, இந்தியாவின் இரண்டு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மற்றும் மனந்தவாடி துணை கலெக்டர்களினால், மனந்தவாடிக்கு அருகில் உள்ள கம்பமால கொலனிக்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'குறித்த அகதிகள், அங்குள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்....

டெல்லியில் மரணித்தது மனித நேயம்: பலியானது உயிர்

இந்தியத் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம். இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித்...
Loading posts...

All posts loaded

No more posts