- Thursday
- March 28th, 2024
முதலமைச்சர் தங்களின் கைப்பாவையாக தொழிற்படுவார் என்றே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இலங்கை அரசாங்கமும் நம்பியிருந்தது. ஆனால் அவர் இங்கே வந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரைத் தினம் தினம் சந்திக்கச் சந்திக்க மக்களின் வலியை உணர்ந்தவராகத் தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாடுடையவராக மாறினார். இதனால் அவரைப் பதவியிலிருந்து அகற்ற விரும்பிய அவர்கள்இ அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்களையோ இலஞ்ச...
வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில்...
முதலமைச்சர் அமைச்சுப்பதவிகளை தியாகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது இராஜினாமா கடிதங்களை விவசாய, மற்றும் கல்வி அமைச்சர்கள் ஒப்படைத்துள்ள நிலையில் நாளை (21) முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அந்த இருஅமைச்சுக்களையும் தம்வசம் எடுத்து ஆளுனர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். குறித்த அமைச்சுக்கள் யாருக்கு வழங்கப்படும் என்பதில் ஊகங்கள் வெளிவந்தகொண்டிருந்த நிலையில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக முதலமைச்சர்...
வடமாகாணசபையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை தீர்க்கும் முகமாக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரண்டு அமைச்சர்களின் விடுப்பு தொடர்பாக அவர்கள் விசாரணைகளில் தடைகளை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை தந்தால் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக நேற்றைய தினம் இரா சம்பந்தனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த சம்பந்தன் அவ்வாறான உத்தரவாதத்தை எப்படி தன்னிடம் கேட்க முடியும் அதனை...
கூட்டுறவு அமைப்புக்கள் பலவற்றின் மில்லியன் கணக்கான நிதி கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தில் வைப்பிலிட்ட போது அதன் தலைவராக இருந்த சீ.வி.கே பொதுச்சபையின் தீர்மானமின்றி தன்னிச்சையாக மில்லியன் கணக்கில் பிரமுக வங்கியில் வைப்பிலிட்டார். அவ் வங்கி திவாலாக மத்திய வங்கி சுவிகரித்து கொண்டது. தற்போதைய நிலவரப்படி அவ்வாறு வைப்பிலிட்ட அமைப்புக்களின் நிதியை மீளச் செலுத்த 13...
முதலமைச்சருக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலை குறித்து மாகாணசபை உறுப்பினர் விசாரணைக்குழுவுக்கு வழங்கிய கடிதம் எமது செய்தித்தளத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பிரதி முதலமைச்சருக்கும் அவர் வழங்கியிருந்தமை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களால் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட் பிரேரணை தொடர்பில் முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் வழங்கப்பட்ட விளக்ககடிதம் ஒன்றும் வெளியாகியுள்ளது . அதில்...
தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மகாண சபை முதலமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைணைக் கண்டித்தும், முதலமைச்சருக்கான தங்கள் பேராதரவை வெளிப்படுத்துமுகமாகவும் தமிழ் மக்கள்...
வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக வினாவியபோது பா.உ சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார் அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணித்தியாலம் வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பா.உ சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன் சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான...
வடக்கு மாகாணத்தின் சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறைய இரத்துச் செய்து அவர்கள் அமைச்சர்களாக நீடிக்க வழிசெய்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெறுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேற்று நண்பகல் முதலமைச்சரைத் தொடர்புகொண்டு வலிறுயுத்தியுள்ளார். எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுமுறையை விட்டுக் கொடுக்க தயார் ஆனால் சில உத்தரவுகளை நடைமுறைப் படுத்த அவர்கள் இணங்கவேண்டும்...
அவைத்தலைவர் தலைமயிலான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினரால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி 18 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை தொடர்ந்து ஆளுனர் முதல்வரின் பலத்தை நிரூபிக்குமாறு கேட்டிருந்தார் இதுவரைக்கும் முதலமைச்சருக்கு அமைச்சர் ஐங்கரநேசன் உட்பட 16 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது என அறியவருகின்றது.இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது...
இன்று காலை அமைச்சர் ஐங்கரநேசன் முதல்வர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதற்கிணங்க இராஜினாமா செய்வது தொடர்பில் முதல்வரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் அமைச்சருடன் மனந்திறந்து பேசியுள்ளார். அதன்போது அமைச்சர் ஐங்கரநேசன் தான் அவருக்கு தனது ஆதரவினை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்திருந்திருக்கிறார். இதேவேளை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனிடம் சி.வி.கே...
வடக்கு அமைச்சர்களின் விசாரணை அறிக்கை மீதான சிறப்பு 96 வது அமர்வு இன்று காலை ஆரம்பமாகியது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என அவைத் தலைவர் அறிவித்தார் அதன்பின் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர். அமைச்சரவையே குற்றச்சாட்டுக்கான பதில் வழங்க வேண்டும். கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார் அதன்பின் தன்னிலை விளக்கம் வழங்கும்போது எதுவித...
இன்றைய சிறப்பு அமர்வில் விசாரணை அறிக்கைக்கு எதிராக வடக்கு மாகாணசபையில் அமைச்சர் ஐங்கரநேசன் 19 பக்கத்தில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் மிக நேர்த்தியாக மறுதலித்துள்ளார். விசாரணையின்போக்கினை துல்லியமாக உடைத்துதெறிந்து நீதிபதிகளுக்கு சட்டம் குறித்தும் நீதி குறித்தும் நடுநிலை குறித்தும் மிக காட்டமான பதிலடி கொடுப்பதாக அவரது விளக்க அறிக்கை அமைந்துள்ளது முக்கிய சாரம்சம்சங்கள்...
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார் மேலதிகமாக தமிழரசுக்கட்சி...
நாளை(14) வடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து தன்னிலை விளக்கம் வழங்க உள்ளனர். அதன்பின் முறைப்படி தங்கள் இராஜினாமா கடிதங்களை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அமைச்சர் குருகுலராஜா அவர்கள் இராஜினாமா செய்யப்போவதாக கட்சித்தலைமைக்கு அறிவித்திருக்கின்ற...
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக இங்கே தரவிறக்கம் செய்யலாம் NPC_Inquiry_Report
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன் , சர்வேஸ்வரன், லிங்கநாதன் , அனந்தி ஆகியோரினாலும் மேலும் சிலராலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வெளியிட்ட விசாரணை அறிக்கை உறுப்பினர்களுக்கு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கையின் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளது. குற்றச்சாட்டுக்களை சபையிலும் விசாரணைக்குழுவுக்கும் எழுத்து மூலம் சமர்ப்பித்த...
வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கை வருமாறு.. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
Loading posts...
All posts loaded
No more posts