Ad Widget

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்!!

யாழில் சக பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுதிக்குள் நேற்று முன்தினமிரவு மதுபோதையில் உள்நுழைந்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு...

விசர்நாய் கடிக்குள்ளாகிய இளைஞன் பலி!!

ஆவரங்கால் பகுதியில் விசர்நாய் கடிக்குள்ளான இளைஞரொருவர் நேற்று (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த 23 வயதான பிரதாபன் ஷாலமன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்குள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்....
Ad Widget

கவனத்தில் கொள்ளாத மக்கள்!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாக தெரியவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரில் இருந்து காரைநகர் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள்...

குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்!! : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். இதன்போது வியர்வையுடன் அதிக சோடியம் வெளியேறுவதால், ஆரஞ்சு, இளநீர், தேங்காய் தண்ணீர், கஞ்சி, ஆரஞ்சு...

யாழில் விமானப்படையின் கண்காட்சி!!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சியை நடாத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முடித மகவத்தகே தெரிவித்துள்ளார். யாழில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு நெரிவித்தார். இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிகழ்வை முன்னிட்டு, “நட்பின் சிறகுகள்” எனும்...

யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை!!

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்று (26) தீக்கிரையாகியுள்ளது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது குழுவினரால் தீ வைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்...

வடமராட்சியில் பாடசாலையில் புதிதாக சேர்ந்த மாணவன் மீது தாக்குதல்!!

வடமராட்சியில் தரம் 6க்கு புதிதாக இணைந்த மாணவனை மீது தரம் 10இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால், காதிலிருந்து இரத்தம் கசிந்த நிலையில், தாக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். நெல்லியடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே கடந்த வியாழக்கிழமை (22) இந்தச் சம்பவம் இடம்‍பெற்றது....

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 – 1996 காலப்பகுதிக்குரியவை!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைய தினம் (22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது...

மனைவிக்கு காதலர் தின பரிசு கொடுக்க திருடிய கணவன்!

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரும், அவருக்கு உடந்தையா செயற்பட்ட பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட இரு சந்தேகநபர்களிட் இருந்து, 25 பவுண் தாலி கொடி ஒன்றும், 4 பவுண் நகை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் வசித்து வந்த வீடொன்றில் காதலர் தினத்தன்று, உட்புகுந்த திருடர்கள் 29 பவுண் நகைகளை...

யாழ்.பல்கலை மாணவர்களின் கால வரையற்ற போராட்டம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்று கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர். விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம்...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி மின்சார சபையால் கிடைக்கும் இலாபத்தை நுகர்வோருக்கு வழங்கும் நோக்கில் இது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்...

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று(21) இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சண்முகம்...

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ’ குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான ரமேஷ் சகீந்தன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார். நீர்வேலி சந்தைக்கு ,மானிப்பாயில் உள்ள தனது...

சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

இணையவழி பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். குறித்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்....

யாழில் படகு வெள்ளோட்டம்!!

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில்...

ரஷ்யாவை எதிர்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகள் அதிகம் தேவை: உக்ரைன் பிரதமர்

ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது என உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், ஆயுத ஏற்றுமதி கொள்கையில்...

இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இவ்வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார். காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டமானது டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு...

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது : சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த...
Loading posts...

All posts loaded

No more posts