Ad Widget

இராணுவ ஆக்கிரமிப்பு எமது ஆட்சியில் இருக்காது – ரணில்

அபி­வி­ருத்தி என்ற பெயரில் அனைத்து துறை­க­ளிலும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொள்ளும் இரா­ணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்­காது. எமது ஆட்சியில் அதன் கட­மை­யினை மட்­டுமே இரா­ணுவம் செய்யும் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. அதனை மீட்­டெ­டுக்கவேண்டும் எனவும் குறிப்­பிட்டார். சுற்­று­லாத்­துறை சார் வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நேற்று...

த.தே.கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவித்தால்!! வடக்கில் மஹிந்தவின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்!

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டாவது பதவிக் காலத்துடன் ஆட்சியைக்...
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மைத்திரிபால இரகசிய ஒப்பந்தம்!- ஜனாதிபதி மஹிந்த!!

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டினார். சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தகவல் வெளியிடுகையில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய...

அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இறுதிப் போட்டி ஆடி முடித்த மஹேல, சங்கா..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5ற்கு 2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் டக்ளஸ்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற அமைச்சர், காயமடைந்த ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் நலம் விசாரித்தார். இதன்போது ஈ.பி.டி.பி...

பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும்...

விஷ்ணுவர்தனுடன் இணையும் விக்ரம்?

விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதுதவிர, சங்கர் இயக்கத்தில் எமிஜாக்சனுடன் விக்ரம் இணைந்து நடித்து ‘ஐ’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விக்ரம், விஷ்ணுவர்தன்...

லிங்கா படம் வசூல் ரூ.100 கோடி தாண்டியது

கடந்த 12–ந் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது. ரஜினி 4 வருடங்களுக்கு பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால்...

தமிழ்நாட்டையும் வடக்கு கிழக்குடன் இணைத்து தமிழீழம் அமைப்பதே புலிகளின் திட்டமாம்!

ஜம்மு காஷ்மீர் விடுதலை அமைப்பின் பிரிட்டன் கிளை, உட்பட இந்தியாவின் தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்த விசேட நீதிமன்றின் முன் இடம்பெற்ற விவாதத்தின்போதே இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டையும், இலங்கையின் வடகிழக்கு மற்றும் ஆந்திரா, கேரளா,...

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இன்டர்நெட் மூலம் இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார். அவற்றை வீடியோவில் பதிவு செய்து இணைய தளங்களில் வெளியிடுகின்றனர். சுருதி...

வடக்கில் இவ்வருடத்தில் 2122 பேர் டெங்குவினால் பாதிப்பு

வடமாகாணத்தில் 2014ஆம் வருடத்தின் இந்த மாதம் வரை 2 ஆயிரத்து 122 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக யாழ்.பிராந்திய வட மாகாண சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது. கடந்தாண்டை விடவும் இந்த வருடம் மோசமான நிலை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம்...

பாகிஸ்தானில் பதற்றம் ! நால்வர் சுட்டுக் கொலை!! 500 மாணவர்கள் ஆபத்தில்!

பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 25 மாணவர்கள் காயமுற்றதாகவும், 4 பேர் பலியானதாகவும் தெரிகிறது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெஷாவரில் உள்ள இராணுவ கல்லூரியில் பயங்கரவாதிகள் 500 மாணவர்களை பிணைக்கைதிகளாக...

அடியாள்களுடன் வந்த அமைச்சர் டக்ளஸாலேயே குழப்பம் ஏற்பட்டது! முதலமைச்சர் அலுவலகம் தெரிவிப்பு

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்துவந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம், அடிதடி சண்டையாகியதில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நால்வர் காயமடைந்தனர். இந்த...

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

அண்மையில் பெய்த பருவ மழையையடுத்து யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார திணைக்களம்சார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன், சுகாதார வைத்தியதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற...

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இடமாற்றம்

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா நேற்று திங்கட்கிழமையுடன் (15) யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பதவியிலிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார். 5 வருடகாலத்துக்கு ஒரு முறை இடம்பெறும் இடமாற்றத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், அடுத்ததாக வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு தான் கோரியிருந்ததாகவும், இருந்தும் இதுவரையில் தனக்கு அது தொடர்பில் கடிதம்...

நாம் தோற்றுப்போனவர்கள் அல்ல – மாவை

எமது இனம் தோற்றுப்போன இனமல்ல. நாங்கள் நிமிர்பவர்கள் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்கத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 'நாம்...

பொலிஸாரிடமிருந்து மின்சார, நீர் கட்டணங்கள் அறவிடப்படாது – பொலிஸ் தலைமையகம்

திருமணம் முடிக்காத பொலிஸார் தங்குகின்ற விடுதிகளுக்காக இதுவரை காலமும் அறவிடப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இனிமேல் அவர்களிடமிருந்து அறவிடப்படமாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருமணம்...

தங்கள் உறுப்பினர்களில் ஐவருக்கு காயம் – ஈ.பி.டி.பி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான...

மகிந்தவுக்கு ஆதரவளிக்க வெளிநாட்டில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

குவைத்தில் பல்வேறு தொழில்களிலும் ஈடுபடும் இலங்கையர்களை ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தேர்தலுக்கு முன்னர் நாட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி குவைத்தில் பணிபுரியும் 1,37,000 இலங்கையர்கள் ஜனவரி 07 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இலங்கையர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நிகழ்ந்தது. தற்போது நிலைமை சீராகி உள்ளது. இதற்கு மூலகாரணம் மகிந்த ராஜபக்சவின்...

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது அரசு – சிவாஜி காட்டம்

வடக்கிற்கு சிவில் ஆளுநர் ஒருவரையே நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்ததே தவிர சிங்கள ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை.ஆகவே அரசு பொய்களைத் திருப்பித் திருப்பிக் கூறியும்,ஏமாற்றியும் ஜனாதிபதித் தேர்தலில் குழம்பியகுட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறது.என நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு வருகை தந்து...
Loading posts...

All posts loaded

No more posts