Ad Widget

லொத்தர் கடை தீ வைத்து எரிப்பு

வடமராட்சி, நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள தேசிய லொத்தர் விற்பனை கடை ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இனம்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்காரணமாக, கடையிலிருந்த லொத்தர்கள், இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைகலப்பில் இ.போ.ச. சாரதி காயம்

யாழ்ப்பாணம் - நெல்லியடி வழித்தட சேவையில் ஈடுபடுகின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதிகள் இருவருக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்ற கைகலப்பில், பேருந்து சாரதி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். அம்பன் குடத்தனையை சேர்ந்த சுப்பிரமணியம் வசந்தகுகன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரே...
Ad Widget

புதிய ஜனாதிபதிக்கும் த.தே. கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று முதன்முதலாக சந்திக்கவுள்ளார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும்...

மொஹான் பீரிஸை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை பதவி விலகக்கோரி புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் முன்னால் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைக்கவும் : ஐ.தே.க எம்.பி.க்கள் கோரிக்கை

புதிய அரசின் அரசியல் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றில் புதிய அரசின் நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின்...

மஹிந்தவும் சந்திரிகாவும் எம்.பி.களாகும் சாத்தியம்?

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொழும்பில்...

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!

உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா- நியூஸிலாந்தில் வரும் பெப்ரவரி மாதம் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது. இதற்கான இலங்கை அணியே நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சத்திர சிகிச்சை செய்திருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவும் இடம்பெற்றுள்ளார். அணிவிவரம்:- ஏஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், குமார்...

ஆஸியிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் சாவு!

நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அதைச் செலுத்திவந்தவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மற்றையவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் தெல்லிப்பழை, ஆனைக்குட்டி மதவடிப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த காரைநகரைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நவக்குமார் நவரஞ்சன் (வயது -...

போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பா.டெனீஸ்வரன்

பாப்பரசர் வருகையை முன்னிட்டு நாளை 13ஆம் திகதி, போக்குவரத்து சபையினர் விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். பாப்பரசர் வருகையை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் விசேட போக்குவரத்து சேவைகளை தனியார் போக்குவரத்து சேவைகள், இலங்கை போக்குவரத்து...

இந்திய அரசின் நிதியுதவியில் விவசாயம், பொறியியல் கற்கை பீடங்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய கற்கை பீடங்கள், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன 600 மில்லியன் ரூபாய் செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்படவுள்ளதாக இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சற் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2012ஆம் ஆண்டு இந்த கற்கை பீடங்களை அமைப்பதற்காக வேண்டுகோள்...

சிராணி இன்று பதவியேற்பார்?

முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க, பிரதம நீதியரசராக இன்று திங்கட்கிழமை மீண்டும் பதவியேற்றுக்கொள்ள இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாப்பரசர் நாளை வருவார்: விசேட போக்குவரத்து ஏற்பாடு

இலங்கைக்கு நாளை செவ்வாயக்கிழமை 13ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஷ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற...

மஹிந்தவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது!– சீலரத்ன தேரர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவை சுற்றியிருந்த எருமை மாட்டுக் கூட்டமே அவரை இல்லாமல் செய்தது என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுற்றியிருந்தது போன்று எருமை மாட்டுக் கூட்டமொன்றை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டாம் என புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோருகின்றோம். தேர்தலில் அடைந்த வெற்றிக்காக அவருக்கு எமது...

பொய் பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் குறித்து விசாரணை

யாழ் குடாநாட்டில் நிலவும் சூழல் தொடர்பில் பொய் பிரச்சாரங்களை வௌியிடுபவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார தெரிவித்துள்ளார். யாழில் எந்தவொரு வகையிலும் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் யாழ் குடாநாட்டில் உயரிய பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் ரவி வைத்தியலங்கார...

தேசிய அரசு அமைய அனைவரும் ஒன்றிணையுங்கள் ,மைத்திரி அழைப்பு

தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது...

கோட்டாவின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடக்கும் என்கிறது புதிய அரசு!

அரச ஊழியராக இருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, தேர்தல் சட்ட விதிகளை மீறும் விதத்தில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணைகள் நடத்தப்படும். அரச ஊழியர்கள் எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இது முன்னெடுக்கப்படுகிறது. - இவ்வாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரும் எம்.பியுமான ராஜித...

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை...

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களின் மீது யாரும் கல்லெறியவில்லை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னராக காலப்பகுதி மிகவும் அமைதியானதாக இருக்கின்றது. வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் ருவன் வணிகசூரிய, வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் மீது கல்வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் எந்தவொரு இடத்திலேயேயும் விடுதலை புலிகளின் கொடி ஏற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில்...

புதிய அரசிடமிருந்து எமக்குஅழைப்பில்லை – சம்பந்தன்

தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே...

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரானார் பஸ்நாயக்க

பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி பஸ்நாயக்க நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பஸ் புதிய செயலராக நியமனம் பெற்ற பஸ்நாயக்க சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி...
Loading posts...

All posts loaded

No more posts