Ad Widget

தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை ; பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு – முதலமைச்சர்

எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள்

பேராசிரியர் சு.வித்தியானந்தனின் நினைவாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான என்புமுறிவு உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தனின் குடும்பத்தினரால் (அமெரிக்கா) இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, என்புமுறிவு சத்திரசிகிச்சை உபகரணம், வீடியோ மூலம் சிகிச்சை அளிக்கும் உபகரணம், மார்பு சிகிச்சை உபகரணம் போன்ற வகையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உபகரணங்கள் அனைத்துலக...
Ad Widget

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றமை கண்டிக்கத்தக்கது

கடந்த ஆண்டு இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றதைக் கண்டித்தும் இவ்வாண்டு நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குறிப்பிட்டும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துக்கு வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் வெள்ளிக்கிழமை (27) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த ஆண்டு இடம்பெற்ற...

நிறப்புதிருக்கு விடை என்ன ?

சிலருக்கு இது நீலம் மற்றும் கறுப்பாகத் தெரியும். – அதுதான் உண்மையான நிறம். – ஆனால், சிலருக்கு இது பொன் நிறம் மற்றும் வெள்ளையாகத் தெரியும். ஒளியை நாம் பார்க்கும் விதம் குறித்த எமக்குள் இருக்கும் முரண்பாடே இதற்கு காரணம். இந்தப் படத்தில் இருக்கும் உடை வெள்ளையும், பொன்னிறமும் என்று நீங்கள் கூறினால், அது முழுப்...

பேஸ்புக்கின் உயிர் காப்பான் தோழன்

புதிய கையடக்கத் தொலைபேசி வாங்குவது முதல் காதலி பிரிந்து போன சோகம் வரை இன்றைய இளசுகள், தன் சுக துக்கங்களை முதலில் தெரிவிப்பது பேஸ்புக்கில்தான். எனவே, ஒரு மனிதனின் மனநிலையை பேஸ்புக்கினால் புரிந்து கொள்ள முடியும். இந்த வகையில் பயனாளிகளின் தற்கொலை எண்ணத்தை சரியான நேரத்தில் புரிந்து கொண்டு அதை தடுப்பதற்கான ‘உயிர் காப்பான் தோழன்’...

போல்டின் சுழலில் மடிந்தது ஆஸி!

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் குழு 'ஏ' இற்கான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 32.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது....

கச்சதீவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படகுகள் : காத்திருக்கும் மக்கள்

கச்சதீவு செல்வதற்கான பதிவு செய்யப்பட்ட படகுகள் குறைவாக இருப்பதால் 200க்கு மேற்பட்ட மக்கள் குறிகட்டுவானில் படகுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுவரையில் 700க்கு அதிகமான மக்கள் பதிவு செய்யப்பட்ட 5 படகுகள் மூலம் சென்று விட்டனர் எனினும் மீதமுள்ள 200க்கு அதிகமான மக்கள் குறிகட்டுவானிலேயே காத்திருக்கின்றனர். இதேவேளை படகு மூலம் கச்சதீவு செல்வதற்கு மாத்திரம் 5 மணித்தியாலங்கள் தேவை...

தேசிய அர­சாங்கம் உருவாக்கப்­ப­டு­மாயின் எதிர்க்­கட்­சி­யாக தமிழ் ­தே­சியக் கூட்­ட­மைப்பு

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஐக்­கிய தேசியக் கட்சி ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்கம் உருவாக்கப்­ப­டு­மாயின் நாடா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு உரு­வெ­டுக்கும். அமர்­த­லிங்­கத்­தினால் ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் இனி ஒரு போதும் இடம்­பெற அனு­ம­திக்­கக்­கூ­டாது என தெரி­விக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­யான தூய்­மை­யான ஹெல உறு­மய யாருக்கும் திறக்­காத சர்­வ­தேச கத­வுகள் எதிர்க்­கட்­சிக்­காக திறக்கும்...

வடக்கின் பெரும்போர் 5ம் திகதி ஆரம்பம்!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் இடம்பெறும். 109 ஆவது தடவையாக நடக்கும் இந்தப் போட்டிக்கு 'எயார்ரெல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. மைதானத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவர். இதுவரை நடந்து...

தொழிநுட்பக் கூடம் திறந்து வைப்பு

இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை (27) இளவாலை ஹென்ரியரசர் கல்லூரியிலும் வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்ததோடு, யாழ். மத்திய கல்லூரிக்கு கணணிகளையும் வழங்கி...

128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது – தவராசா

128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்....

யாழ். எஸ்.எஸ்.பி கொலைக்குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு...

போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்ற பணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 நாள்களாகக் கழிவகற்றப் படாததால் அங்கு குப்பைகள் நிரம்பி வழிகின்றன. அது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் செயலாளருடனான சந்திப்பை அடுத்து 2 நாள்களில் அவற்றை அகற்றுமாறு முதலமைச்சர் யாழ்.மாநகர சபைக்குப் பணித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீப வானந்தராஜா தெரிவித்தார். யாழ்.மாநகர எல்லையில் குப்பை அகற்றுவது தொடர்பான சிக்கல்...

மணிரத்தினம் இயக்கத்தில் ‘ஓகே கண்மணி’ – டீசர்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், மணிரத்தினம் இயக்கத்தில் ஓகே கண்மணி டீசர்.

பிப்ரவரி கடைசி வெள்ளி… 5 புதுப் படங்கள் வெளியீடு

பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று. இந்த நாளில் 5 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டைதான் இவற்றில் பெரிய படம். மற்றவை கிடைத்த இடைவெளியில் வெளியானால் போதும் என்று ரிலீஸ் ஆகியிருக்கின்றன. டாணா என்ற தலைப்புடன் ஆரம்பமான படம் இது. பின்னர் சத்யா மூவீசுக்கு பணம் கொடுத்து, காக்கிச் சட்டை...

திருட்டு விசிடி, நடிகைகளின் ஆபாசப் படங்கள் – விவாதிக்கிறது நடிகர் சங்க செயற்குழு

நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழு கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி துணை தலைவர்கள் விஜயகுமார், காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு அச்சுறுத்தலாக உள்ள திருட்டு விசிடியை ஒழிப்பது குறித்தும், சமீபமாக நடிகைகளின் ஆபாசப் படங்கள்...

கணவரை சேர்த்து வைக்க கோரி கவிஞர் தாமரை போராட்டம்

பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. ‘மின்னலே’ படத்தில் எழுதிய வசீகரா பாடல் தாமரையை பிரபலபடுத்தியது. ´சுப்ரமணியபுரம்´ படத்தில் எழுதிய கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் பாடல் மூலம் முன்னணி பாடலாசிரியர் ஆனார். ´உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்´ படத்தில் எழுதிய மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா, ´தெனாலி´ படத்தில்...

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக...

மே.தீவுகள் அணி வீரர்களைப் பந்தாடிய தெ.ஆபிரிக்கா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 409 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் 19வது போட்டியாக பி பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த...

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்!

மகேஸ்வரி நிதியம் தமது தொழிலை அழித்துவிட்டது என்று கூறி யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தினர். ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே!, எங்கள் வைப்புப் பணத்தை வட்டியுடன் திருப்பித் தா!, சேமிப்பு பணத்தை எமது சங்கத்திடம் மீள ஒப்படை! போன்ற கோரிக்கைகள் முன்வைத்தே...
Loading posts...

All posts loaded

No more posts