- Thursday
- April 18th, 2024
எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு கடும்போக்குவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் அரசியல் இலாபம் திரட்டிக்கொள்ள சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தெற்கின் பேரினவாத கட்சிகள் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தமிழர் ஒருவருக்கு வழங்குவதனை விரும்பவில்லை என...
19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை சபையில் நிறைவேற்றியதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பொலநறுவையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டின் எதிர்காலம் குறித்து தாம்...
கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக் கொண்டோம். இவ்வாறு தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 07.04.2015...
மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி.) யாழ் மாவட்டத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வில் திறந்துவைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மங்கள விளக்கை இராமலிங்கம் சந்திரசேகரம், விமல் ரட்ணாயக்கா, யாழ்ப்பாணம் தொகுதி அமைப்பாளர் அ.கணபதிப்பிள்ளை உட்பட...
வவுனியா, சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை இவ்வாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்...
10 பிள்ளைகளுக்கு மேல் பெற்ற 75 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள சர்தேச முதியோர் தின நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சனத்தொகைச் சுருக்கம் ஏற்பட்டுவரும் நிலையில் அதிக பிள்ளைகளைப் பெறும் தாய்மாரை ஊக்குவிக்கும் நோக்குடன் சமூக...
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, வியாழக்கிழமை(09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11...
மதமானது மக்களைப் பிரித்தல் ஆகாது. எல்லோரையும் மதித்து மாண்புற்று வாழ வழிவகுக்க வேண்டும். சமய ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மானிப்பாய் மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் கல்லூரி மண்டபத்தில் புதன்கிழமை (08) நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (08) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,...
கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாதிருந்த சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அந்தந்த சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் என வாழ்வின் எழுச்சித்திட்ட யாழ்.மாவட்ட பணிப்பாளர் கா.மகேஸ்வரம் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திலுள்ள சமூர்த்திப் பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக சமூர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அவர்களுடைய சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9, 10 மற்றும் 11ஆம்...
19ஆவது திருத்த சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தினால் கூறப்பட்டுள்ள பிரிவுகளை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டவுள்ள 19ஆவது திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே பிரதமர்...
ஊர்காவற்துறை தம்பாட்டியில் ரூபா இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபா செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று முன்தினம் புதன்கிழமை (08.04.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் நோர்வே நாட்டின் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுவையும் போசாக்கு மிக்கதுமான நண்டுக்கு சர்வதேச அளவில்...
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுயாதீனச் செய்தியாளர் ந.லோகதயாளன் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் இன்று பிற்பகல் விளக்கமறியலுக்குள் தள்ளப்பட்டுள்ளார். காலை 10 மணிக்கு நெல்லியடிப் பொலிஸாரால் விசாரணைக்கு என அழைக்கப்பட்டிருந்த அவர், பிற்பகல் 2 மணியவில் பருத்தித்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரை எதிர்வரும்...
சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவூம், அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது. அதன் பிரகாரம் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வேலைக்குத்...
யாழ்.தூயநீருக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் கலந்துரையாடச் சென்றிருந்த நிலையில், முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகளை ஏற்கமறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். நேற்றய தினம் யாழ்.மாவட்டத்தில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ள கூடாது என முதலிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது....
யாழ்ப்பாணம், வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது, வடமாகாண முதலமைச்சரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது. அந்த மகஜர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காதிருக்கும் வகையில் தடை விதிக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த மார்ச் 30ஆம் திகதியிட்டு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது...
"யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளின்றி தவிக்கும் நிலையில், 200 கோடி ரூபா செலவில் மஹிந்த அரசு அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்க முற்பட்டது. இதை நாம் நிறுத்தியுள்ளோம். அத்துடன், 10 வருடங்களில் மஹிந்த அரசால் செய்யமுடியாத விடயங்களை தற்போதைய அரசு 88 நாட்களில் செய்திருக்கிறது." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய அரசின் 100...
வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு தொடர்பில் வடமாகாணசபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறு கோரி, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்த 8 பேரில் இருவர் நேற்று இரவு மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் கிணற்றில்...
யாழ்.மின்சார நிலைய வீதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீதியால் செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த காலங்களில் வெளிநோயாளர் பிரிவாக இருந்த குறித்த கட்டடம் தற்போது விபத்து பிரவாக புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இந்தக் கட்டடம் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதியுடன் இடிக்கப்பட்டு வருகிறதாக தெரிய...
Loading posts...
All posts loaded
No more posts