Ad Widget

யாழ். குடாவில் போலி நாணயத்தாள்கள்! மக்களே மிகவும் அவதானம்!!

யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் - சிங்கள புதுவருடத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடுப்பட்டுள்ளது. எனவே அதனை சாதாகமாக பயன்படுத்தி போலி நாணயத்தாள்களும் விசமிகளால் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு தற்போது விடப்பட்டுள்ளது. அந்தவகையில்...

ஆசிரிய கலாசாலை பரீட்சைகளில் சித்தியடையாதோருக்கான மீள்பரீட்சை

2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன்...
Ad Widget

மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை

செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை, சக்கரகதிரை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மே மாதம் சனிக்கிழமை (02) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறவுள்ளது. யாழ். கச்சேரிக்கு அண்மையிலுள்ள சுண்டுக்குளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தியே இந்த...

குடும்பஸ்தர் அடித்து கொலை: ஒருவர் கைது

அல்வாய் வடக்கு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்பவர் சனிக்கிழமை (25) அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்....

பொதுமன்னிப்பு வழங்கியும் சிறையில் வாடும் உதயசிறி

ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என, சிகிரியா பளிங்குச் சுவரில் எழுதிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு - சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்தார். சிகிரியா குன்றிலுள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்துக்காக...

பசிலுக்கு இன்று பிறந்தநாள்: அவைக்கும் வருகிறார்

தனது பிறந்த நாளை இன்று திங்கட்கிழமை (27), கொண்டாடும் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மெர்ஷன்ட் பிரிவிலிருந்து (கட்டணம் செலுத்தும் பிரிவு) சிறைச்சாலை வாகனம் மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்று அங்கு இடம்பெறவுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கவுள்ளார். திவிநெகும நிதி மோசடி விவகாரம் தொடர்பில்,...

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்; சட்டம் வருகிறது

கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின்...

ஜின்னா புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து ஜின்னா புலமைபரிசில்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரம் கற்க சிறந்த பெறுபேறுகளுடன் தெரிவாகி- பொருளாதார பிரச்சினையிலுள்ளவ மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்புலமைபரிசிலின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 24.000 ரூபா நிதி வழங்கப்படும்.கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான்...

19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்

அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள்...

நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள்...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதவிக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது முதல் 28 வயது வரையான திருமணமாகாத க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கணிதம் தாய் மொழி உட்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்த ஆகக்குறைந்த 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்...

வடமராட்சியில் ஒருவர் கொலை

நேற்று இரவு 8 மணியளவில் யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைகாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம்...

அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் – நல்லை ஆதீனம்

100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி என நல்லை ஆதீன குரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தை செல்வாவின் 38...

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள்...

யாழ்.பல்கலைக் கழகத்திற்கு புதிய பேரவை உறுப்பினர்கள் 14 பேர் நியமனம்

யாழ்.பல்கலைகழக பேரவை உறுப்பினர்களின் தெரிவு கடந்த சில மாத காலமாக இழு பறியில் இருந்து வந்த நிலையில் புதிய பேரவை உறுப்பினர்கள் 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பல்கலைக்கழகங்களின் பேரவையில், உள்வாரி உறுப்பினர்களாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள்...

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா?- சுரேஸ் எம்.பி கேள்வி

நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழ்ப்பாணத்திலும் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு...

நிலநடுக்கத்தில் புதையுண்டது காத்மண்டுவின் 19-ம் நூற்றாண்டு “தரகரா” கட்டிடம்!

காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டுவில் இருந்த19-ஆம் நூற்றாண்டு பழமையான 9 மாடிக் கட்டிடமான "தரகரா" டவர் முழுமையாக இடிந்து விழுந்தது. அக்கட்டிடத்தில் இருந்த 50 பேர் மண்ணோடு மண்ணாக புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இன்று முற்பகல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்...

மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தினை இந்திய ஊடகம் திரிவுபடுத்தியுள்ளது

பிரேமானந்தா ஆச்சிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளன....

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி விவகாரம்: நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் டலஸ்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை கையில் வைத்திருந்தமைக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அத்துடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடியைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் செயலானது சிறுபான்மை மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்து...
Loading posts...

All posts loaded

No more posts