- Thursday
- March 28th, 2024
2015ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (08) அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் மே 25ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் கபீர் காசிம் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் கட்சியின் யாப்புக்கு முரணானது என ஐ.தே.க. உறுப்பினர் சித்ரா ஸ்ரீமணி மற்றும் கிஸ்லி லால் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில்...
நெல்லியடி புனித அந்தோனியர் தேவாலயத்தில் இருந்து வியாழக்கிழமை (07) காலை இளைஞன் ஒருவரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடி பொலிஸார் கூறினர். நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெசுரட்ணம் ஆரோக்கியராஜ் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. தேவாலய பாதிரியாரை சந்திப்பதற்காக புதன்கிழமை (06) மாலை தாயாருடன், நெல்லிடிக்கு வருகை தந்திருந்த இளைஞன்,...
விளையாட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. சுற்றி இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேச வசதி அளிக்கின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை விளையாட்டுக்கள் தடுக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையின் கீழ் வடமாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்காக அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015 நாயன்மார்கட்டு,...
இந்த வருடமும் மாவீரர் நாளன்று ஈகச்சுடர் ஏற்றுவேன். எங்கள் உறவுகளை, பிள்ளைகளை, நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன். கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று ஈகச்சுட ரேற்றியமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மணற்கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (07), இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த எம்.அச்சல (வயது 32) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துன்னாலை,...
புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர்...
இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது பிரதேச அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர். ஏற்கனவே அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாள்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக,...
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பல்கலைக்கழக வாகன சாரதிகளின் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்கத்திடம் சாரதிகள் புதன்கிழமை (06) முறையிட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்;, தங்களுடைய கொடுப்பனவை வழங்காது...
வடமாகாணத்திலுள்ள சுண்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தேசிய சரணாலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கமையவே வடக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன...
"இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்." - இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன். அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818...
இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக...
தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே, ஆனால், இவரின் கோச்சடையான், லிங்கா படங்கள் தோல்வி இவரை மிகவும் பாதித்துள்ளது. இதனால், அடுத்த படத்தில் கண்டிப்பாக ஹிட் கொடுத்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இவர் அடுத்து அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இப்படத்தில் ரஜினி நடிப்பதில்...
‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அஜித்துக்கு 56-வது படமாகும். சிறுத்தை சிவாவும், அஜித்தும் ஏற்கெனவே ‘வீரம்’ படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்துள்ளனர். தற்போது இந்த புதிய படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை...
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் பெறப்பட்ட கையொப்பத்தினை வைத்து மோசடி செய்துள்ளதாக அப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேரவையிடம் இன்று புதன்கிழமை (06) யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பேரவை இன்று (06)...
எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் விலை குறைத்த போதும் அதற்கு அறவிடப்படும் வரி குறைக்கப்படாததால் எரிபொருள் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் எரிபொருள் கூட்டுத்தாபனம் 4 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 21...
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று...
யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலி (ஆடு வெட்டுதல்) தொடர்பான விடயத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, இந்தச்...
திருமணமாகாத ஜோடிகள் இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக பயணம் செய்வதற்கு தடைவிதிப்பதற்கு ,இந்தோனேசியாவின் அச்சே மாகணத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு அச்சே பகுதியில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த புதிய சட்டம், உள்ளூர் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது....
Loading posts...
All posts loaded
No more posts